Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)
படிக்காதவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படிக்காதவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

ஒரு கூட்டு கிளியாக,



படம் : படிக்காதவன்
பாடல் : ஒரு கூட்டு கிளியாக
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு.
ஏன்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள்
ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு.

செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்
செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்
சத்தியதை நீங்கள் காத்திருந்தால்
சத்தியம் உங்களை காத்திருக்கும்
தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண்புக்கும்
பூ மாலை காத்திருக்கும்

ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு

நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா
வெள்ளை இளஞ்சிட்டுக்கள், வெற்றி கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள், விண்ணை தொடுங்கள்
நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா
வெள்ளை இளஞ்சிட்டுக்கள், வெற்றி கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள், விண்ணை தொடுங்கள்
பேருக்கு வாழ்வது வாழ்கை இல்லை
ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை
ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நான் செய்தேன்
என் கண்ணில் ஈரமில்லை

ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு
ஏன்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கல்
ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு.

வியாழன், 6 ஜனவரி, 2011

ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்



ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன்
கண்மணி என் கண்மணி!
ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு
கண்மணி என் கண்மணி! (2)

பச்சை குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்
பாலக் குடிச்சுபுட்டு பாம்பாகக் கொத்துதடி!

(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)

ஏது பந்தபாசம்? எல்லாம் வெளி வேஷம்!
காசு பணம் வந்தா நேசம் சில மாசம்!
சிந்தினேன்.. ரத்தம் சிந்தினேன்
அது எல்லாம் வீண் தானோ?
வேப்பிலை கருவேப்பிலை அது யாரோ நான் தானோ?
என் வீட்டு கன்னுக்குட்ட, என்னோட மல்லுக்கட்டி,
என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி!
தீப்பட்ட காயத்துல தேள் வந்து கொட்டுதடி கண்மணி..... கண்மணி!


(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)


நேத்து இவன் ஏணி இன்று இவன் ஞானி!
ஆளைக் கரை சேர்த்து ஆடும் இந்தத் தோணி!
சொந்தமே ஒரு வானவில் அந்த வண்ணம் கொஞ்ச நேரம்!
பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம்!
பணங்காசக் கண்டுபுட்டா புலிகூடப் புல்லைத் தின்னும்
கலி காலாமாச்சுதடி கண்மணி என் கண்மணி!
அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போச்சுதடி கண்மணி..... கண்மணி!

(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)

படம் : படிக்காதவன்
இசை: இளையராஜா
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்
பாடல் : வைரமுத்து
Related Posts Plugin for WordPress, Blogger...