Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)
ரேனிகுண்டா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரேனிகுண்டா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஜனவரி, 2011

மழைபெய்யும் போதும்


பல்லவி
மழைபெய்யும் போதும்
நனையாத ஈரம்
இதுயென்ன மாயம்
யார் செய்ததோ?
நடக்கின்ற போதும்
நகராத தூரம்
இதுயென்ன கோலம்
யார் சொல்வதோ?
இது மின்னலா?
இல்லை தென்றலா?
அறியாமலே அலைபாயுதே
இது வண்ணமா?
இல்லை வன்மமா?
விளங்காமலே விளையாடுதே
சரணம் 01
சிலநேரம் மயிலிறகால்
வருடிவிடும் புனிதமிது
சிலநேரம் ரகசியமாய்த்
திருடிவிடும் கொடுமையிது
மூடாமல் கண்கள் ரெண்டும்
தண்டோரா போடும்
பேசாமல் மவ்னம் வந்து
ஆராரோ பாடும்
பகலிலே தாயைப் போல
தாலாட்டும் காதலே
இரவிலே பேயைப் போல
தலைகாட்டும் காதலே
சரணம் 02
தொலையாமல் தொலைந்துவிடும்
நிலமையிது முடிவதில்லை
விலகாமல் தொடர்ந்துவரும்
வெளிப்படையாய்த் தெரிவதில்லை
கொல்லாமல் கொல்லும் இது
பூப்போல சைவம்
சொல்லாமல் கொள்ளை இடும்
பொல்லாத தெய்வம்
குடையுதே ஏதோவொன்று
அதுதான் காதலே
உடையுதே உயிரும் சேர்ந்து
அதுதான் காதலே

படம்: ரேனிகுண்டா
இயக்கம்: ஆர்.பன்னீர் செல்வம்
இசை : கணேஷ்ராகவேந்திரா
பாடல் : யுகபாரதி
Related Posts Plugin for WordPress, Blogger...