Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)
படிக்காத மேதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படிக்காத மேதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 5 பிப்ரவரி, 2011

படித்ததினால் அறிவு பெற்றோர்



படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்
படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு
- படித்ததினால்...


கொடுப்பதற்கும் பிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா – என்றும்
குழந்தையைப் போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா


வாழை மரம் படித்ததில்லை கனி கொடு்க்க மறந்ததா
வான் முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா
சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா
சுதந்திரமாய்ப் பாடி வரும் குயிலும் பாடம் படித்ததா
- படித்ததினால்...


கல்வியில்லா கன்றுகளும் தாயை அழைக்கும்
காட்டில் கவரிமானும் பெண்களைப் போல் மானத்தைக் காக்கும்
பள்ளி சென்று இவைகளெல்லாம் படித்ததில்லையே – நெஞ்சில்
பாசத்தோடும் நேசத்தோடும் வாழவில்லையா
படித்ததினால்...


பாடல் – கவியரசர் கண்ணதாசன்
குரல் – எம்.எஸ்.ராஜேஸ்வரி
இசை – திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன்
படம் – படிக்காத மேதை

 

உள்ளதை சொல்வேன்

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்





படம்: படிக்காத மேதை
இயற்றியவர்: மஹாகவி பாரதியார்
இசை: திரையிசைத் திலகம் கே.வி. மஹாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1960

எங்கிருந்தோ வந்தான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்

சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்ன குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்

பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் - ரங்கன்

எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - ரங்கன்
எங்கிருந்தோ எங்கிருந்தோ ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்.rar
Related Posts Plugin for WordPress, Blogger...