Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)
download லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
download லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 5 பிப்ரவரி, 2011

ஏய் எத்தனையோ சித்தனுங்க



ஏய் எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு
கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியாச்சு
சுத்தமாக சொன்ன் தெல்லாம் போறலியா
மொத்தமாக காதுல தான் ஏறலியா

உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆன்டவன் அந்த மதம்.

அட போங்கடா போங்கடா போங்கடா
பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா

கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
சொல்லாத சங்கதி சொல்லுறன் கேளுடா

அந்த ஆன்டவன் தான் கிருஸ்துவனா முஸ்லிமா இல்லை இந்துவா

உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்.....

மனசுக்குள்ள நாய்களும் நரிகளும
நால்வை பேய்களும் நாட்டியமாடுதடா

மனிதனென்னும் போர்வையிலிருக்குது
பார்வையில் நடக்குது நான் கண்ட மிருகமடா

அட யாரும் திருந்தலயே இதுக்காக வருந்தலயே
அட யாரும் திருந்தலயே இதுக்காக வருந்தலயே

நீயும் நானும் ஒன்னு இது நெசந்தான் மனசுல என்னு
பொயையும் புரட்டையும் கொன்னு இந்த பூமிய புதுசா பன்னு


சும்மா சொன்னத சொன்னத சொல்லவா
சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா

அட உன்னதா நம்புறன் நல்லவா
உன்னால மாறுதல் வந்திடுமல்லவா

உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்......

கணக்கிலொரு கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும் இருப்பது உண்மையடா

கூட்டல் மட்டும் வாழ்க்கையில் நடக்குது
பாவத்தை பெருக்குது இது என்ன ஜென்மமடா

இப்ப புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்ல பொழுது
இப்ப புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்ல பொழுது


அடியே ஞானத்தங்கம் இங்கு நானொரு ஞானச்சிங்கம்
இதைப் பார்த்தா பொய்களும் ஓடும் இரண்டு போட்ட உலகமும் மாறும்

அட பத்திரம் பத்திரம் பத்திரம் தீர்ப்பு நாள் பக்கத்தில் பக்கத்தில் வருது
இது சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியத்தின் சந்ததி சீக்கிரம் வருது


உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்......

இந்த பாடலின் "ஆடியோ இங்கே கேளுங்க.."

படம்: ராமன் அப்துல்லா
பாடல்: கவிஞர் வாலி
இசை: இசை ஞானி இளையராஜா
குரல்: நாகூர் E.M.HANIFA
இயக்கம்: பாலுமகேந்திரா
வருடம்:1997

வியாழன், 6 ஜனவரி, 2011

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

ஆணி முத்து வாங்கி

படம்: பாமா விஜயம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: பி.சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
ஆண்டு: 1967
----------------------------------------------------
ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே
ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே
நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும் நேரமில்லையடியோ
நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும் நேரமில்லையடியோ அடியோ
ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே

எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஏறிட்டு நானதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நானள்ளிச் சூடவில்லை
எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஏறிட்டு நானதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நானள்ளிச் சூடவில்லை
அந்தக் கன்னத்தில் என்னடி முத்து்ம் வண்ணம் இந்தக்
கள்ளத் தனத்தினில் வந்ததடி
வாங்கிக் கொடுத்ததும் தாங்கிப் பிடித்ததும்
முத்துக்கள் போல் வந்து மின்னுதடி
ஒரு முத்து இரு முத்து மும்முத்து நால் முத்து அம்மம்மா
பெண்ணுக்கு எத்தனை முத்தமடி

ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே

ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

மாமன் மக்கள் தேடிய செல்வங்கள் யாருக்கடி?
ஆடிடும் பிள்ளைகள் பேருக்கடி
மிஞ்சிய செல்வங்கள் ஊருக்கடி கையில்
உள்ளதைக் கொண்டிங்கு வாழ்வதிலே
இந்த இல்லத்தில் நிம்மதி வாழுமடி
வீட்டு நலத்துக்கும் நாட்டு நலத்துக்கும்
வேற்றுமை என்பதே இல்லையடி
வீட்டுக்கு பிள்ளைக்கு ஊருக்கு நாட்டுக்கு
பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்





படம்: படிக்காத மேதை
இயற்றியவர்: மஹாகவி பாரதியார்
இசை: திரையிசைத் திலகம் கே.வி. மஹாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1960

எங்கிருந்தோ வந்தான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்

சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்ன குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்

பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் - ரங்கன்

எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - ரங்கன்
எங்கிருந்தோ எங்கிருந்தோ ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்.rar

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

ஆசையே அலை போலே

நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே
பருவம் என்னும் காட்டிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்...சுகம் பெறுவார்...அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே......... யார் காணுவார்
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே
வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்...
இளமை மீண்டும் வருமா.... மணம் பெறுமா.....முதுமையே சுகமா...
காலம் போகும் பாதையை இங்கே...........யார் காணுவார்
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே
சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு...சுகம் செலவு....இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே........யார் காணுவார்
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே

வியாழன், 4 பிப்ரவரி, 2010

இரவுக்கு ஆயிரம் கண்கள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
திரைப்படம்: குலமகள் ராதை
பாடியவர்: P. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
  இசை: K.V. மஹாதேவன்

இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
கணக்கினில் கண்கள் இரண்டு அவை காட்சியில் ஒன்றே ஒன்று
கணக்கினில் கண்கள் இரண்டு அவை காட்சியில் ஒன்றே ஒன்று
பெண்மையின் பார்வை ஒரு கோடி அவை பேசிடும் வார்த்தை பல கோடி
பெண்மையின் பார்வை ஒரு கோடி அவை பேசிடும் வார்த்தை பல கோடி
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
அங்கும் இங்கும் அலை போலே தினம் ஆடிடும் மானிட வாழ்விலே
அங்கும் இங்கும் அலை போலே தினம் ஆடிடும் மானிட வாழ்விலே
எங்கே நடக்கும் எது நடக்கும் அது எங்கே முடியும் யாரறிவார்?
எங்கே நடக்கும் எது நடக்கும் அது எங்கே முடியும் யாரறிவார்?
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று


இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று

பாட்டும் நானே பாவமும் நானே


ஆ...ஞா ஆ...ஞா ஆ...ஞா

பாட்டும் நானே பாவமும் நானே...

பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..

கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?
கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?
(பாட்டும் நானே..)

அசையும்..பொருளில்..இசையும் நானே
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கம் நானே
என்னிசை நின்றால் அடங்கும் உலகே..ஏ..
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே..
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?
ஆலவாயனொடு பாடவந்தவனின்
பாடும்வாயை இனி மூடவந்ததொரு
(பாட்டும் நானே..)

‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடலை எழுதியது
கண்ணதாசனா அல்லது கவி.கா.மு.ஷெரீப்பா?

திங்கள், 1 பிப்ரவரி, 2010

இன்பத் தமிழ்



தமிழிக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் தமிழுக்கு மதுவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர் தமிழ் எங்கள் இளமைக்குப் பால் -இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் -இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு சுடர்தந்த தேன் தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் -இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ.

சனி, 23 ஜனவரி, 2010

கண்ணதாசன் மறைந்தபோது வாலி எழுதிய இரங்கல் கவிதை



கண்ணதாசனே ! – என்
அன்பு நேசனே !
நீ
தாடியில்லாத தாகூர் !
மீசையில்லாத பாரதி !
சிறுகூடற் பட்டியில்
சிற்றோடையாய் ஊற்றெடுத்து
சிக்காகோ நகரில்
சங்கமித்த ஜீவ நதியே !
உனக்கு
மூன்று தாரமிருப்பினும் – உன்
மூலா தாரம் முத்தமிழே !
திரைப் பாடல்கள்
உன்னால் -
திவ்வியப் பிரபந்தங்களாயின !
படக் கொட்டகைகள்
உன்னால்
பாடல் பெற்ற ஸ்தலங்களாயின !
நீ
ஆண் வேடத்தில்
அவதரித்த சரஸ்வதி !
கண்ணனின் கைநழுவி
மண்ணில் விழுந்த
புல்லாங்குழல் !
அயல் நாட்டில்
உயிர் நீத்த
தமிழ்நாட்டுக் குயிலே !
பதினெட்டுச்
சித்தர்களுக்கும்
நீ
ஒருவனே
உடம்பாக இருந்தாய் !
நீ
பட்டணத்தில் வாழ்ந்த
பட்டினத்தார் !
கோடம்பாக்கத்தில்
கோலோச்சிக் கொண்டிருந்த
குணங்குடி மஸ்தானே !
நீ
தந்தையாக இருந்தும்
தாய் போல்
தாலாட்டுக்களைப் பாடியவன் !
இசைத் தட்டுகளில் மட்டுமல்ல -
எங்கள் நாக்குகளிலும்
உன்
படப் பாடல்கள்
பதிவாகி யிருக்கின்றன !
உன்
மரணத்தால்
ஓர் உண்மை புலனாகிறது..
எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களில் -
எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !

சனி, 7 நவம்பர், 2009

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு..



இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"
  1. திருக்குறள் தமிழில்
  2. Thirukural in English
  3. திருக்குறள் application(in both tamil & english)
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.


வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவெதொன்று இல்.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

வகையறிந்து வல்லமை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

காலம் கருதி இருப்பவர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அ·தொப்ப தில்.
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்அது உணர்வார்ப் பெறின்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

வையத்தின் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

அன்பின் வழியது உயிர்நிலை அ·திலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆ¡¢ருள் உய்த்து விடும்.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை.

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும.

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

இவைகள் என் மனம் கவர்ந்த திருக்குறள் வரிகள்...!


      வியாழன், 5 நவம்பர், 2009

      பட்டுக்கோட்டையாரின் பாட்டுக்கோட்டை ..!

      பட்டுகோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்கள் வேண்டுமா..?



      ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
      அதுதாண்டா வளர்ச்சி (ஆளும்)
      ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே-நீ
      தரும் மகிழ்ச்சி

      வேப்பமர உச்சியில் நின்னு
      பேயொன்னு ஆடுதுன்னு
      விளையாடப் போதும்போது
      சொல்லி வைப்பாங்க-உன்
      வீரத்தைக் கொழுந்திலேயே
      கிள்ளி வைப்பாங்க
      வேலையற்ற வீணர்களின்
      மூளையற்ற வார்த்தைகளை
      வேடிக்கையாகக் கூட
      நம்பி விடாதே-நீ
      வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
      வெம்பி விடாதே-நீ
      வெம்பி விடாதே!

      நல்ல பொழுதையெல்லாம்
      தூங்கிக் கெடுத்தவர்கள்
      நாட்டைக் கெடுத்ததுடன்
      தானுங்கெட்டார்; சிலர்
      அல்லும் பகலும்
      தெருக்கல்லா யிருந்துவிட்டு
      அதிர்ஷடமில்லையென்று
      அலட்டிக் கொண்டார்
      விழித்துக் கொண்டோரெல்லாம்
      பிழைத்துக்கொண்டார்

      சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து-தவறு
      சிறிசா இருக்கையில் திருத்திக்கோ
      தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா-அது
      திரும்பவும் வராமே பார்த்துக்கோ

      ஏட்டில் படித்ததோடு
      இருந்து விடாதே!-நீ
      ஏன்படித்தோம் என்பதையும்
      மறந்துவிடாதே (ஏட்டில்)
      நாட்டின் நெறிதவறி
      நடந்துவிடாதே-நம் (நாட்டின்)
      நல்லவர்கள் தூற்றும்படி
      வளர்ந்துவிடாதே!

      சூழ்ச்சியிலே சுவரமைத்து
      சுயநலத்தால் கோட்டைகட்டிச்
      சுடர்விட்ட நீதிதனைத்
      தூக்கி எறிந்துவிட்டுச்
      சாட்சிகள் வேண்டாம்
      சகலமும் நானென்று
      சதிராடும் வீணர்களின்
      அதிகார உலகமடா
      புதிரான உலகமடா - உண்மைக்கு
      எதிரான உலகமடா - இதில்
      பொறுமையைக் கிண்டிவிடும்
      போக்கிரிகள் அதிகமடா
      குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
      குருட்டு உலகமடா - இது
      கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
      திருட்டு உலகமடா - தம்பி
      தெரிந்து நடந்துகொள்ளடா - இதயம்
      திருந்த மருந்து சொல்லடா (குறுக்கு)
      இருக்கும் அறிவை மடமை மூடிய
      இருட்டு உலகமடா - வாழ்வின்
      எந்த நேரமும் சண்டை ஓயாத
      முரட்டு உலகமடா - தம்பி
      தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம்
      திருந்த மருந்து சொல்லடா

      இரைபோடும் மனிதருக்கே
      இரையாகும் வெள்ளாடே
      இதுதான் உலகம், வீண்
      அனுதாபம் கொண்டு நீ
      ஒரு நாளும் நம்பிடாதே
      முறையோடு உழைத்துண்ண
      முடியாத சோம்பேறி
      நரிபோலத் திரிவார் புவிமேலே - நல்ல
      வழியோடு போகின்ற
      வாய்பேசா உயிர்களை
      வதச்சுவதச்சு தின்பார் வெறியாலே (இரை)
      காலொடிந்த ஆட்டுகாகக்
      கண்ணீர் விட்ட புத்தரும்
      கடல்போல உள்ளங்கொண்ட
      காந்தி ஏசுநாதரும்
      கழுத்தறுக்கும் கொடுமைகண்டு
      திருந்தவழி சொன்னதும் உண்டு
      காதில் மட்டும் கேட்டு அதை ரசிச்சாங்க - ஆனா
      கறிக்கடையின் கணக்கைப் பெருக்கி வந்தாங்க (இரை)

      தர்மமென்பார் நீதி என்பார் தரமென்பார்
      சரித்திரத்துச் சான்று சொல்வார்
      தாயன்புப் பெட்டகத்தைச்
      சந்தியிலே எறிந்துவிட்டுச்
      தன்மான வீரரென்பார்
      மர்மமாய்ச் சதிபுரிவார்
      வாய்பேசா அபலைகளின்
      வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
      கர்மவினை யென்பார்
      பிரமனெழுத் தென்பார்
      கடவுள்மேல் குற்றமென்பார் - இந்தத்
      திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
      கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம்
      ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
      எந்நாளும் உலகில் ஏமாற்றும் விழிகள்
      இல்லாத நன்னாளை உண்டாக்கணும்

      ஒரு குறையும் செய்யாமே
      ஒலகத்திலே யாருமில்லே - அப்படி
      உத்தமனாய் வாழ்ந்தவனை - இந்த ஒலகம்
      ஒதைக்காம விட்டதில்லை....
      இருக்கும் பொழுதை ரசிக்கணும் - அட
      இன்பமாய் கழிக்கணும்
      எதிலும் துணிஞ்சு இறங்ணும் - நீ
      ஏங்கி எதுக்குத் துடிக்கணும்? (இருக்)
      நாளை நாளை என்று பொன்னான
      நாளைக் கெடுப்பவன் குருடன்
      நடந்து போனதை நெனச்சு ஒடம்பு
      நலிஞ்சு போறவன் மடையன் - சுத்த மடையன்
      நம்மைப்போல கெடச்சதைத் தின்னு
      நெனத்ததைச் செய்யிறவன் மனுஷன் (இருக்)

      ஆடி ஓடி பொருளைத் தேடி......
      அவனும் திங்காம பதுக்கி வைப்பான்....
      அதிலே இதிலே பணத்தைச் சேத்து
      வெளியிடப் பயந்து மறச்சுவைப்பான் ;
      அண்ணன் தம்பி பொண்டாட்டி புள்ளை
      ஆருக்கும் சொல்லாம பொதைச்சு வைப்பான் ;
      ஆகக் கடைசியில் குழியைத் தோண்டி
      அவனையும் ஒருத்தன் பொதச்சு வைப்பான்

      தேடிச் சோறுநிதந் தின்று


      தேடிச் சோறுநிதந் தின்று
      பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
      மனம் வாடித் துன்பமிக உழன்று
      பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
      நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
      கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
      பல வேடிக்கை மனிதரைப் போலே
      நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

      நின்னைச் சில வரங்கள் கேட்பேன்
      அவைநேரே இன்றெனக்குத் தருவாய்
      என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள்
      இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும்
      இனி என்னைப் புதிய உயிராக்கி
      எனக்கேதுங் கவலையறச் செய்து
      மதிதன்னை மிகத் தெளிவு செய்து
      என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!


      வேண்டுமா? பாரதியின் பாடல்கள் உங்களுக்காக.. இங்கே!...

      பள்ளி மாணவர்களுக்கான பாடபுத்தகம்..


      Textbooks published
      by the Department of School Education,
      Govt. of Tamil Nadu, India
      are hosted
      பள்ளி மாணவர்களுக்கான பாடபுத்தகங்களை இங்கே download செய்து கொள்

      புதன், 4 நவம்பர், 2009

      பெரியார் ஈ வே ராமசாமியின் கருத்துகள் மற்றும் புத்தகங்கள்..!





      இந்த புத்தகத்தை பற்றி என் கருத்து

      நான் அறிந்த வரையில், அணைத்து பிரமனர்களையும் குறை கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை, ஏனெனில் சாதி, மதம் மற்றும் மொழிகளை கொண்டு மக்களயோ அல்லது அவரது குணங்களை வகைபடுத்த கூடாது.. எனவே நாம் எப்படி யாரால் அடிமை படுத்த பட்டு இருக்கிறோம் என்பதை ஏற்கிறேன் அனால் அவர்களின் குற்றம் மட்டும் அல்ல நம் அறியமைனாலும் கூட..

      Related Posts Plugin for WordPress, Blogger...