Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

ஆணி முத்து வாங்கி

படம்: பாமா விஜயம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: பி.சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
ஆண்டு: 1967
----------------------------------------------------
ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே
ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே
நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும் நேரமில்லையடியோ
நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும் நேரமில்லையடியோ அடியோ
ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே

எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஏறிட்டு நானதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நானள்ளிச் சூடவில்லை
எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஏறிட்டு நானதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நானள்ளிச் சூடவில்லை
அந்தக் கன்னத்தில் என்னடி முத்து்ம் வண்ணம் இந்தக்
கள்ளத் தனத்தினில் வந்ததடி
வாங்கிக் கொடுத்ததும் தாங்கிப் பிடித்ததும்
முத்துக்கள் போல் வந்து மின்னுதடி
ஒரு முத்து இரு முத்து மும்முத்து நால் முத்து அம்மம்மா
பெண்ணுக்கு எத்தனை முத்தமடி

ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே

ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

மாமன் மக்கள் தேடிய செல்வங்கள் யாருக்கடி?
ஆடிடும் பிள்ளைகள் பேருக்கடி
மிஞ்சிய செல்வங்கள் ஊருக்கடி கையில்
உள்ளதைக் கொண்டிங்கு வாழ்வதிலே
இந்த இல்லத்தில் நிம்மதி வாழுமடி
வீட்டு நலத்துக்கும் நாட்டு நலத்துக்கும்
வேற்றுமை என்பதே இல்லையடி
வீட்டுக்கு பிள்ளைக்கு ஊருக்கு நாட்டுக்கு
பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...