Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)
விஜய்காந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஜய்காந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

தோல்வி நிலையென நினைத்தால்..



தோல்வி நிலையென நினைத்தால்..மனிதன் வாழ்வை நினைக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...

விடியலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

விடியலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

யுத்தங்கள் தோன்றட்டும் ..
இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உண்ர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...

யுத்தங்கள் தோன்றட்டும் ..
இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா..

படம் : ஊமை விழிகள்
பாடியவர் : பி.பி சினிவாஸ்
இசை : மனோஜ் ஜியன்
விரும்பி கேட்டவர் : கார்செழியன்

வானவில்லே வானவில்லே



வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது
அள்ளிவந்து வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு
சின்னபறவைகள் கொஞ்சி பறக்குதே வண்ணச் சிறகிலே தண்ணிர் தெளிக்குதே
அடி தாய் தென்றலே வந்து நீ பாடு ஆராரோ (வானவில்லே...)

எந்த நாட்டு குயிலின் கூட்டமும் பாடும் பாடல் சோகம்
எந்த நாட்டு கிளிகள் பேச்சிலும் கொஞ்சும் மழலை உண்டு
சாதி என்ன கேட்டுவிட்டு தென்றல் நம்மை தொடுமா
தேசமென்ன பார்த்துவிட்டு மண்ணில் மழை வருமா
உன்னோடு நானும் எல்லோரும் ஓர் சொந்தம் அன்புள்ள உள்ளத்திலே (வானவில்லே..)

மேக மூட்டம் கொஞ்சம் விலகவே மண்ணில் நிலவு கண்டேன்
அன்பு பொழியும் கருணை வெள்ளத்தில் நெஞ்சம் மூழ்க நின்றேன்
உன்னை போலே சிலர் இருந்தால் மண்ணில் சுவர்க்கம் வருமே
இயற்கை அன்னை படைத்ததெல்லாம் பொதுவினில் வருமே
மூங்கில் காடெல்லாம் சங்கீதம் பாடாதோ தென்றலின் சொர்கத்திலே (வானவில்லே..)



பாடல்: வானவில்லே வானவில்லே
திரைப்படம்: ரமணா
இசை: இளையராஜா
பாடல் வரிகள்: பழநி பாரதி
பாடியவர்: சாதனா சர்கம்
Related Posts Plugin for WordPress, Blogger...