Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

கல்யாண மாலை


கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்

(கல்யாண)

ஸ்ருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

(கல்யாண)

வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது

அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே

நல்ல மனையாளின் நேசமொரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே

(கல்யாண)

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னைச் சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா

நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கு நெஞ்சோடு இருக்கு
சிரிக்காத நாளில்லையே

துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம் போல பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடு தான்...

(கல்யாண)

அழகுக் குட்டிச் செல்லம்



அழகுக் குட்டிச் செல்லம்
உன்னை அள்ளித் தூக்கும் போது
உன் பிஞ்சுவிரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளைக் கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக் கொண்டேன்
நான் திரும்பிப் போக மாட்டேன்

அம்மு நீ…
என் பொம்மு நீ…
மம்மு நீ…
என் மின்மினி…

(அழகுக் குட்டிச் செல்லம்)

உனக்குத் தெரிந்த மொழியிலே
எனக்குப் பேசத் தெரியல‌
எனக்குத் தெரிந்த பாஷை பேச
உனக்குத் தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புதுப்பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

(அழகுக் குட்டிச் செல்லம்)

ரோஜாப்பூ கைரெண்டும்
காற்றோடு கதைபேசும்
உன் பின்னழகில் பெளர்ணமிகள்
தகதிமிதா ஜதிபேசும்
எந்த நேரம் ஓயாத அழுகை
ஏனிந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால்வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டைப் பிடித்துவிட்டான் இப்படி ஓர்
அட்டினக்கால் தோரணை தோரணை

(அழகுக் குட்டிச் செல்லம்)

நீ தின்ற மண்சேர்த்தால்
வீடொன்று கட்டிடலாம்
நீ சிணுங்கும் மொழிகேட்டால்
சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாளம் இல்லாத ரயிலை
தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய்
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒளிந்து ஒளிந்து போக்குக் காட்டி ஓடுகின்ற
கண்ணனே புன்னகை மன்னனே

(அழகுக் குட்டிச் செல்லம்)

படம் : சத்தம் போடாதே
பாடல்: அழகுக் குட்டிச் செல்லம்
எழுதியவர் : நா. முத்து குமார்
பாடியவர் : சங்கர் மஹாதேவன்
இசை : யுவன் சங்கர் ராஜா

பாலூட்டி வளர்த்த கிளி


படம்;கெளரவம்
இசை; எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்; டி.எம்.செளந்தரராசன்

----------------------------------------------
பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
செல்லம்மா எந்தன் செல்லம்மா செல்லம்மா எந்தன் செல்லம்மா

சட்டமும் நானுறைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்
சட்டமும் நானுறைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்
பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பாக்குதடி
பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பாக்குதடி
செல்லம்மா எந்தன் செல்லம்மா
பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
செல்லம்மா எந்தன் செல்லம்மா

நீதிக்கே துணிந்து நின்றேன் நினைத்ததெல்லாம் ஜெயித்து வந்தேன்
நீதிக்கே துணிந்து நின்றேன் நினைத்ததெல்லாம் ஜெயித்து வந்தேன்
வேதனைக்கு ஒரு மகனை வீட்டினிலே வளர்த்து வந்தேன்
வேதனைக்கு ஒரு மகனை வீட்டினிலே வளர்த்து வந்தேன்
செல்லம்மா என்தன் செல்லம்மா செல்லம்மா எந்தன் செல்லம்மா
பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
செல்லம்மா எந்தன் செல்லம்மா

ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த போதனையோ
ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த போதனையோ
தீயினிலே இறங்கி விட்டான் திரும்ப வந்து தாழ்பணிவான்
தீயினிலே இறங்கி விட்டான் திரும்ப வந்து தாழ்பணிவான்
சத்தியம் இது சத்தியம் செல்லம்மா எந்தன் செல்லம்மா
பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
செல்லம்மா எந்தன் செல்லம்மா செல்லம்மா எந்தன் செல்லம்மா

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே

திரைப்படம்: சித்தி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா

-------------------------------------------------
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
பெண்ணாகப் பிறந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம் இறப்பில் மறு தூக்கம்
இப்போது விட்டு விட்டால் எப்போதும் தூக்கமில்லை
என்னரிய கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு

ஆரீராரீரீ ஆரீராராரோ ஆரீஆரீராரோ
ஆரீராரீரீ ஆரீரீஆரோ ஆரீராரீரீரோ

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளு தமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுவதே தீராத தொல்லையடி

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

மாறும் கன்னி மனம் மாறும் கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும் போது தூக்கமென்பதேது?
தான் நினைத்த காதலனை தேற வரும் போது
தான் நினைத்த காதலனை தேற வரும் போது
தந்தை அதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது? கண்ணுறக்கம் ஏது?

மாலையிட்ட தலைவன் வந்து சேலை தொடும் போது
மங்கையரின் தேன் நிலவில் கண்ணுறக்கம் ஏது? கண்ணுறக்கம் ஏது?

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

ஐயிரண்டு திங்களிலும் பிள்ளை பெறும் போதும்
அன்னையென்று வந்த பின்னும் கண்ணுறக்கம் போகும் கண்ணுறக்கம் போகும்
கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து தேடும்
கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து தேடும்
காணாத தூக்கமெல்லாம் தானாக சேரும் தானாக சேரும்

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

ஆரீராரீரீ ராரீராராரோ ஆரீராரீராரோ ஆ
ஆரீராரீரீ ஆரீராராரோ ஆரீராரீராரோ ஆரீராரீராரோ

This feature is powered by Dishant.com - Home of Indian Music

              

எல்லோரும் சொல்லும் பாட்டு


ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னைப் பார்த்து
மேடையே
வையகம் ஒரு மேடையே
வேஷமே
அங்கெல்லாம் வெறும் வேஷமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான்
ரயில் ஸ்நேகமா புயலடித்த மேகமா

கலைந்து வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

(எல்லோரும்)

கோவலன் காதை தன்னில் மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லையென்றால் கண்ணகி ஏது இன்று
மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே
மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவரும் நெஞ்சிலே
எது கூடுமோ எது விலகி ஓடுமோ

மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

(எல்லோரும்)

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்


பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
யாம் ஒரு, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய
உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
அம்மையும் அப்பனும் தந்தடதா
இல்லை ஆதியின் வால் வினை சூழ்ந்ததா
இம்மையை நான் அறியாததா
இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்

ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா,
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருள்ளற்ற வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பத்தால் தாங்குவாய்
உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே.

நினைந்து நினைந்து

திரைப்படம்: சதாரம்
இயற்றியவர்: மருதகாசி
இசை: ஜி. ராமனாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1956
------------------------------------------------------

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே உன்னை
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே

அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போன சிலை ஆனததே - வாழ்க்கை
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போன சிலை ஆனதே - நான்
அடைந்த செல்வம் கொள்ளை போனதே
அடைந்த செல்வம் கொள்ளை போனதே
அமைதியின்றியே அலைய நேர்ந்ததே

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே

எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
துன்ப கீதமே பாடுகின்றாயோ?
எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
துன்ப கீதமே பாடுகின்றாயோ?
இந்த நிலை என்று மாறுமோ?
இந்த நிலை என்று மாறுமோ? உனைக் காணும்
இன்ப நாளுமே வந்து சேருமோ?

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே


This feature is powered by Dishant.com - Home of Indian Music

              

ஆணி முத்து வாங்கி

படம்: பாமா விஜயம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: பி.சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
ஆண்டு: 1967
----------------------------------------------------
ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே
ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே
நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும் நேரமில்லையடியோ
நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும் நேரமில்லையடியோ அடியோ
ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே

எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஏறிட்டு நானதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நானள்ளிச் சூடவில்லை
எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஏறிட்டு நானதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நானள்ளிச் சூடவில்லை
அந்தக் கன்னத்தில் என்னடி முத்து்ம் வண்ணம் இந்தக்
கள்ளத் தனத்தினில் வந்ததடி
வாங்கிக் கொடுத்ததும் தாங்கிப் பிடித்ததும்
முத்துக்கள் போல் வந்து மின்னுதடி
ஒரு முத்து இரு முத்து மும்முத்து நால் முத்து அம்மம்மா
பெண்ணுக்கு எத்தனை முத்தமடி

ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே

ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

மாமன் மக்கள் தேடிய செல்வங்கள் யாருக்கடி?
ஆடிடும் பிள்ளைகள் பேருக்கடி
மிஞ்சிய செல்வங்கள் ஊருக்கடி கையில்
உள்ளதைக் கொண்டிங்கு வாழ்வதிலே
இந்த இல்லத்தில் நிம்மதி வாழுமடி
வீட்டு நலத்துக்கும் நாட்டு நலத்துக்கும்
வேற்றுமை என்பதே இல்லையடி
வீட்டுக்கு பிள்ளைக்கு ஊருக்கு நாட்டுக்கு
பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி

கண்ணுக்கு மையழகு



கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு
கன்னத்தில் குழியழகு
கார்கூந்தல் பெண்ணழகு

இளமைக்கு நடையழகு
முதுமைக்கு நரையழகு
கள்வர்க்கு இரவழகு
காதலர்க்கு நிலவழகு
நிலவுக்கு கரையழகு
பறவைக்கு சிறகழகு

அவ்வைக்கு கூனழகு
அன்னைக்கு சேயழகு

விடிகாலை விண்ணழகு
விடியும் வரை பெண்ணழகு
நெல்லுக்கு நாற்றழகு
தென்னைக்கு கீற்றழகு
ஊருக்கு ஆறழகு ஊர்வலத்தில் தேரழகு
தமிழுக்கு 'ழ'-அழகு
தலைவிக்கு நானழகு

சின்ன தாயவள்


படம் : தளபதி
பாடல் : சின்ன தாயவள்

சின்ன தாயவள் தந்த ரா.........சா..........வே...............
முள்ளில் தோன்றிய சின்ன ரோ.............சா.........வே......
சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யார் யாரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ...... ( சின்ன )

தாய் அழுதாளே நீ..... வர
நீ அழுதாயே தாய் வர
தேய் பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் இந்த
நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை
மெல்ல தாங்கிட
விழி மூ....டா.... தோ.... (சின்ன )

பால் மனம் வீசும் பூ முகம்
பார்க்கையில் பொங்கும் தாய் மனம்
ஆயிரம் காலம் ஊர் வரம்
வேண்டிட வந்த பூ... ச்சரம்
வெயில் வீதியில் வாட கூடுமோ
தேவன் கோவிலை சென்று சேருமோ
எந்தன் தே....னா.....றே..... (சின்ன )

உயிரும் நீயே



படம் : பவித்ரா
பாடல் : உயிரும் நீயே
இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர் : உன்னி கிருஷ்ணன்


உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே.........
உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே

தன் உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே
தன் உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே


உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் மூழ்கும் தாயே.....
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் மூழ்கும் தாயே.....


உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே......... ( உயிரும் )

விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்

பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை

சாமி தவித்தான்...................
சாமி தவித்தான்

தாயை படைத்தான்.. (உயிரும் )

கண்ணின் மணியே


கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா

வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும்
ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்
ஏனென்று கேட்கத்தான் இப்போதும் ஆளில்லை
சமநீதி சேர்க்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை
உலகமெல்லாம் விடிந்த பின்னும் உங்களின் இரவுகள் விடியவில்லை

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள்தானா

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

பாய் விரிக்கும் பாவை என்ன காதல் பதுமைகளா
தினம் ஏவல் செய்ய ஆடவர்க்கு காதல் அடிமைகளா
பாய் விரிக்கும் பாவை என்ன காதல் பதுமைகளா
தினம் ஏவல் செய்ய ஆடவர்க்கு காதல் அடிமைகளா

பொன் அள்ளி வைத்தால்தானே பூமாலை தோளில் ஏறும்
இல்லாத ஏழையர்க்கெல்லாம் பொல்லாத தனிமைக் கோலம்
எரிகின்ற நேரத்தில் அணைக்கின்ற கையில்லை
சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய்யில்லை
கனவுகளில் மிதந்த படி கலங்குது மயங்குது பருவக்கொடி…

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள்தானா

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

மை நேம் இஸ் பில்லா...



மை நேம் இஸ் பில்லா... வாழ்க்கை எல்லாம்....
மை நேம் இஸ் பில்லா வாழ்க்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்லை
போகாத ஊர் இல்லை அய்யா
நல்ல நண்பன் இல்லை என்றால்
எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன் அய்யா ஓ ஓ
ஏ... யாருக்கும் யாரும் சொந்தம் இல்லை
நட்பின் மேல் நம்பிக்கை இல்லை
நேரங்கள் வேதங்கள் கூட
தேவைகள் ஓய்ந்தாலே ஓட
வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் தான் நான் செல்லும் பாதை
சரி என்ன தவறென்ன எவர்க்கும் எது வேண்டும் செய்வோம் (மை நேம்...)

வந்தார்கள் போனார்கள் நேற்று
யாருக்கும் சுவடில்லை இன்று
நீ என்ன நான் என்ன பந்தம்
உறவில்லா உறவில்தான் இன்பம்
மனசுக்கும் அறிவுக்கும் தூரங்கள் இருந்தால்தான் நம்மை
இங்குள்ள எவருக்கும் இடமில்லை இதுதானே உண்மை (மை நேம்...)

எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே



முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா

எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடி கொண்டிரு
இந்த வியர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடி கொண்டிரு
இந்த வியர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே
ஓ ஒ ஒஹோ….ஹே தோழா
முன்னால் வாடா
உன்னால் முடியும்
தல தளபதி தளபதி நீ தான் நீ தான்
அன்பு தலைவா
வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீ தானே!
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடி கொண்டிரு
இந்த வியர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே
நீ இன்றை இழக்காதே நீ இன்றை இழக்காதே
இன்றை விதைத்தால் நாளை முளைக்கும்
அதை நீ மறக்காதே நீ அதை நீ மறக்காதே
நீ அதை நீ மறக்காதே
நேற்று நடந்த காயத்தை எண்ணி
நாயத்தை விடலாமா?
நாயம் காயம் அவனே அறிவான்
அவனிடம் அதனை விட்டுச் செல்
ஹே தோழா
முன்னால் வாடா
உன்னால் முடியும்
தல தளபதி தளபதி நீ தான் நீ தான்
அன்பு தலைவா
வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீ தானே!
ஹே யே யே யே
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடி கொண்டிரு
இந்த வியர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
அவன் நினைந்து மனந்து வைத்தால்
முடியாதது என்பது இல்லை
கடல் போல மழை போல காற்றை போல் பூமி போல்
நீ பெருமை சேருடா
பிறந்தோம் இறந்தோம் சென்றோம்
என்ற வாழ்வை தூக்கி போடுடா
மாணவன் மனது வைத்தால்…….
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடி கொண்டிரு
இந்த வியர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடி கொண்டிரு
இந்த வியர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே
ஹே தோழா
முன்னால் வாடா
உன்னால் முடியும்
ஹே தோழா
முன்னால் வாடா
உன்னால் முடியும்
தல தளபதி தளபதி நீ தான் நீ தான்
அன்பு தலைவா
வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீ தானே!
மாணவன் மனது வைத்தால்…….

போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே



போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே
தெக்கு தெசை ஆண்ட மன்னர் இனம் தான் ஓஹோய்
முக்குலத்த சேர்ந்த தேவர்மகன் தான் ஹோய்

போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே
தெக்கு தெசை ஆண்ட மன்னர் இனம் தான் ஓஹோய்
முக்குலத்த சேர்ந்த தேவர்மகன் தான் ஹோய்

என்ன சொல்ல மண்ணு வளம் டிங் டாங் டிங் டாங் ஹோ
மத்தவங்க கண்ணு படும் டிங் டாங் டிங் டாங் ஹோ
என்ன சொல்ல மண்ணு வளம் மத்தவங்க கண்ணு படும்
அந்த கத இப்ப உள்ள சந்ததிக கேட்க வேண்டும்
நம்உயிருக்கு மேலே மானம் மறியாதை
மானம் இழந்தாலே வாழத் தெரியாதே
பெரிசெல்லாம் சொன்னாக்கா சொன்னபடி நிப்பாங்க
குணத்தால் மனத்தால் கலைமான் ஆனாங்க

போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே
தெக்கு தெசை ஆண்ட மன்னர் இனம் தான் ஓஹோய்
முக்குலத்த சேர்ந்த தேவர்மகன் தான் ஹோய்

முன்னோருக்கு முன்னோர் எல்லாம் டிங் டாங் டிங் டாங் ஹோ
இன்னார் என்று கண்டுகொள்ள டிங் டாங் டிங் டாங் ஹோ
முன்னோருக்கு முன்னோர் எல்லாம் இன்னார் என்று கண்டுகொள்ள
எதுத்து எடுத்து சொல்ல ஒன்னு ரெண்டு மூனு இல்லை
முக்குலத்தார் கல்யாணம்தான் முத்து முத்து கம்பளித்தான்
எக்குலமும் வாழ்த்தி சொல்லும் எங்களுக்கு எக்காலம் தான்
அழகான சரி ஜோடி ஆண மேல அம்பாரி
கணக்கா வழக்கா கடல் போல் ஏராளம்

போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே
தெக்கு தெசை ஆண்ட மன்னர் இனம் தான் ஓஹோய்
முக்குலத்த சேர்ந்த தேவர்மகன் தான் ஹோய்



most beautiful scene i ever liked.

ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே



ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு…
அந்தி பகல்… மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு…

சொந்த வெயிலோடு தான் கொண்ட காதலினை
அதை சொல்லாமல் போனாலும் புரியாதா…
ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு…
அந்தி பகல்… மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு…

காற்றில் ஆடி தினந்தோறும்…
உனது திசையை தொடருதுடா…
குழந்தை கால ஞாபகத்தில்..
இதழ்கள் விரித்தே கிடக்குதுடா….
நெடுநாள்… அந்த நெருக்கம்
எனக்கே அதை கிடக்கும்
சருகுகள் சத்தம் போடும்…
தினம் சூழ்நிலை யுத்தம் போடும்…
அதன் வார்த்தையல்ல மெளனமாகும்…

சொந்த வெயிலோடு தான் கொண்ட காதலினை
அதை சொல்லாமல் போனாலும் புரியாதா…
ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு…
அந்தி பகல்… மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு…

ஆயுள் முழூதும் தவம் கிடந்தே…
ஒற்றை காலில் நிற்குதடா…
மாலை ஆகி தவிழ்ந்திடவே…
உனது மார்பை கேட்குதடா…
பனியில்.. அது கிடக்கும்…
நீயும் பார்த்தால்.. உயிர் கிடைக்கும்…
வண்ணங்களெல்லாம் நீ தான்
அதன் வாசங்களெல்லாம் நீ தான்
நீ விட்டுசென்ற பட்டுபூவும்

சொந்த வெயிலோடு தான் கொண்ட காதலினை
அதை சொல்லாமல் போனாலும் புரியாதா…
ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு…
அந்தி பகல்… மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு…

வா வா என் தேவதையே



படம்: அபியும் நானும்

பாடல்: வா வா என் தேவதையே
இசை: வித்யாசாகர்
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா…. வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார் உதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு நான் இடவா…
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகைப்போல்
யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த
இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு
உள்ளூர மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததுமா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வ மகள் தூங்கயிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கண்டு நடந்த போது இவள்
மிசையில்லாத மகள் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டேன்
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார் உதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு…. நான் இடவா…

தாயின் மணிக்கொடி



படம்
: ஜெய்ஹிந்த்
பாடல்: தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் கொண்ட
கன்னிய பூமி இது

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

வண்ணம் பல வண்ணம்
நம் எண்ணம் ஒன்றல்லோ
பறவைகள் பலவன்றோ
வானம் ஒன்றேன்றோ
தேகம் பலவாகும்
நம் இரத்தம் ஒன்றல்லோ
பாசைகள் பலவன்றோ
தேசம் ஒன்றேன்றோ
பூக்கள் கொண்டு வந்தால்
புண்ணிய தேசமடா
வால்கள் கொண்டு வந்தால்
தலையை வாங்கிடும் தேசமடா
எங்கள் இரத்தம்
எங்கள் கண்ணீர்
இவை இரண்டும் கலந்த எங்கள் ஸ்ரிதமே
இது தீயில் எழுந்து வந்த தேசமே

தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும்
தாயகமே எங்கள் முதல் வணக்கம்

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

சட்டம் நம் சட்டம்
புது வேகம் கொள்ளாதோ
வேகமிருந்தால் தான்
வெற்றிகள் உண்டாகும்
மண்ணில் நம் மண்ணில்
புது சக்தி பிறக்காதோ
சக்தி இருந்தால் தான்
சரித்திரம் உண்டாகும்
சட்டம் கயிறு கொண்டு
நீ ஈடுபிடித்து விடு
சரியா இல்லை என்றால்
அதன் வேரை அறுத்துவிடு
புலி போல் எழுக
புயல் போல் விரைக
அட இளைய இரத்தம் என்ன போலியா
எழுத வேண்டும் புதிய இந்தியா

சுதந்திரத்தை காத்த அனைவருக்கும்
சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம்

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் கொண்ட
கன்னிய பூமி இது

ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

கோட்டையை விட்டு வேட்டைக்கு போகும்



படம்: சின்னதாயி
பாடல்: கோட்டையை விட்டு வேட்டைக்கு போகும்
இசை: இசைஞானி இளையராஜா

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் ஏத்தி காமி

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் …..

கொட்டவேனும் மேளம்…..
கையை கட்ட வேணும் யாரும்….
அஞ்சி நிக்கும் ஊரும்….
அருள்வாக்கு சொல்லும் நேரம்…

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் ஏத்தி காமி

அன்னாடம் நாட்டுல
வெண்டைக்காய் சுண்டைக்காய்
விலையேறி போகுது மார்க்கெட்டுல……..

அன்னாடம் நாட்டுல
வெண்டைக்காய் சுண்டைக்காய்
விலையேறி போகுது மார்க்கெட்டுல……..

அன்னாடம் நாட்டுல
வெண்டைக்காய் சுண்டைக்காய்
விலையேறி போகுது மார்க்கெட்டுல……..

விலையேறி போகுது மார்க்கெட்டுல……..

என்னாட்டம் ஏழைங்க
அதைவாங்கி திங்கத்தான்
துட்டுயில்ல சாமியே பாக்கெட்டுல….

துட்டுயில்ல சாமியே பாக்கெட்டுல….

வீட்டுக்கு வீடு எங்களத்தான்
மரம் ஒன்னு வைக்க சொல்லூறாக

மரமே தான் எங்க வீடாச்சு சாமி
ஏழைங்க வாயை மெல்லூறாக
எல்லாரின் வாழ்வும்
சீராக வேணும் ஒன்னால தான்….
கண்ணால பாரு
வேறாக்கி காட்டு ஒன்னால தான்…..

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் ஏத்தி காமி

ஊர் சுத்தும் சாமியே
நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழையை பார்க்கணுமே

ஊர் சுத்தும் சாமியே
நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழையை பார்க்கணுமே..

ஊர் சுத்தும் சாமியே
நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழையை பார்க்கணுமே..

என்னாட்டம் ஏழையை பார்க்கணுமே..

எல்லோரும் போல் என்னை
நீயும் தான் தள்ளாமே
எந்நாளும் தான் காக்கனுமே
உன்கிட்ட ஓர் வரம் கேட்கனுமே

எப்போதும் காவல் நானிருப்பேன்
என்னென்ன வேணும் நான் கொடுப்பேன்

பொல்லாங்கு பேசும் ஊர் சனம் தான்
புண்ணாக்கி போச்சே என் மனம் தான்

என்னாட்ட சாமி
எல்லோருக்கும் சொந்தம் எப்போதும் தான்….
விண்ணோடு மேயும்
உன்னோடு நானும் எந்நாளும் தான்……….

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் ஏத்தி காமி

கொட்டவேனும் மேளம்…..
கையை கட்ட வேணும் யாரும்….
அஞ்சி நிக்கும் ஊரும்….
அருள்வாக்கு சொல்லும் நேரம்…

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் ஏத்தி காமி

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் ஏத்தி காமி……

என்னம்மா தேவி ஜக்கம்மா



என்னம்மா தேவி ஜக்கம்மா
உலகம் தல கீழா தொங்குது ஞாயமா

என்னம்மா தேவி ஜக்கம்மா
உலகம் தல கீழா தொங்குது ஞாயமா
சின்ன வயசுல சிகரட்ட புடிக்கிறான்
சித்தப்பன் கிட்டையே தீப்பெட்டி கேட்கிறான்
சின்ன வயசுல சிகரட்ட புடிக்கிறான்
சித்தப்பன் கிட்டையே தீப்பெட்டி கேட்கிறான்
பசுமாடும் ஆத்தாவ அம்மான்னு சொல்லுது
பச்ச தமிழனும் மம்மின்னு சொல்லுறான்
(என்னம்மா..)

சந்தன பூமி தந்தகம் ஆச்சு
காத்துக்கு இப்போ திணறுது மூச்சு
மரம் இல்லா ஊருல மழை எங்க பெய்யுது
குளத்துலத்தான் இப்போ கிரிக்கெட்டு நடக்குது
அட விவசாயம் செய்யுன்னா வேணான்னு சொல்லுறான்
வெளிநாடு போயிதான் ஒட்டகம் மெய்க்கிறான்
(என்னம்மா..)

ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா
ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா
ஜக்கம்மா ஜக்கம்மா

கோட்டையில் கொடியெல்லாம் கிழியாம பறக்குது
குமரிப்பொண்ணு துணி கிழிஞ்சுதான் தொங்குது
நத்தைக்கு கூட முதுகுல வீடு
நடைப்பாதை தானே ஏழைக்கு கூடு
அட சாமிக்கு வளைகையில மனசார கும்பிட்டோம்
சாக்கடை அள்ளுற கைகளை விட்டுட்டோம்
(என்னம்மா..)

படம்: தம்பி
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: கார்த்திக், மாணிக்க விநாயகம்

வீடு மனைவி மக்கள்

படம்: வீடு மனைவி மக்கள்
பாடியவர்: பாலு
இசை: சங்கர் கனேஷ்
இயக்குநர்: விசு


வீடு மனைவி மக்கள்
மூன்றும் வாழ்வில் சிக்கல்
கற்பனை கலைந்ததடா
கனவுகள் முறிந்ததடா
விதைப்பவன் மனிதனடா
அறுப்பவன் ஒருவனடா

வீடு மனைவி மக்கள்
மூன்றும் வாழ்வில் சிக்கல்

ஆயிரம் காலத்து பயிரொன்று இன்று
அறுவடை ஆனது
விதைத்தவன் வாழ்க்கை கண்ணீரில் நீராடுது
உதிரத்தில் பிறந்த குருவிகள் எல்லாம்
உறவை மறந்தது
சொந்த என்ற வீட்டில் கடல் மீது மழையானது
ஓவியம் வாங்கி வந்தாள் கண்களை காணவில்லை
தேரொன்று வாங்கி வந்தான் பாதையை காணவில்லை
பூஜைகள் செய்ய வந்தான் கோவிலை காணவில்லை

வீடு மனைவி மக்கள்
வீடு மனைவி மக்கள்

கூறைக்கு வாங்கிய மூங்கிலில்
இன்று கொள்ளியா வைப்பது
பொட்டு மட்டும் வைத்தேன்
வேறென்ன நீ கண்டது
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
வாழ்க்கை தான் போனது
ஏழையின் சொந்தம் எப்போதும் தப்பானது
கூடு ஒன்று முடியும் முன்னே குருவி பறந்ததடா
குருவி பறந்ததனால் கூடும் சரிந்ததடா
பல்லவி தொடங்குமுன்னே உன் சரணம் முடிந்ததடா

வீடு மனைவி மக்கள்
மூன்றும் வாழ்வில் சிக்கல்
கற்பனை கலைந்ததடா
கனவுகள் முறிந்ததடா
விதைப்பவன் மனிதனடா
அறுப்பவன் ஒருவனடா

வீடு மனைவி மக்கள்
வீடு மனைவி மக்கள்


     Get this widget |     Track details  |         eSnips Social DNA   

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

சிந்தனை செய்மனமே



படம்: அம்பிகாபதி
பாடியவர்: டி எம் செந்தரராஜன்
இசை: ஜி ராமநாதன்


சிந்தனை செய்மனமே
சிந்தனை செய்மனமே..தினமே

சிந்தனை செய்மனமே..செய்தால்
தீவினை அகண்றிடுமே..
சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய்மனமே..செய்தால்
தீவினை அகண்றிடுமே..
சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய்மனமே.. மனமே..
மனமே.. ஏ..ஏ..ஏ..

செந்தமிழ்க்கருள்ஞான தேசிகனை..
ஞான தேசிகனை.. ஆ..ஆ..ஆ..

செந்தமிழ்க்கருள்ஞான தேசிகனை..செந்தில்
கந்தனை..வானவர் காவலனை குகனை
சிந்தனை செய்மனமே.. செய்தால்
தீவினை அகன்றிடுமே..
சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய்மனமே..மனமே.. ஏ..ஏ..ஏ..

சந்ததம் மூவாசை
சகதியில் உழன்றனை ஈ..ஈ..ஈ..

சந்ததம் மூவாசை
சகதியில் உழன்றனை..
சமரச சன்மார்க்க
நெறிதனை மறந்தனை..
சமரச சன்மார்க்க
நெறிதனை மறந்தனை..
அந்தகன் வரும்போது
அவனியில் யார் துணை..
அந்தகன் வரும்போது
அவனியில் யார் துணை..
ஆதலினால் இன்றே
அருமறை..பரவிய..சரவணபவ..குகனை
சிந்தனை செய்மனமே..
செய்தால்
தீவினை அகன்றிடுமே..
சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய்மனமே..
மனமே.. ஏ..ஏ..ஏ..

சத்தியம் நீயே ....



ட்ரிய்யோ *ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு...

சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே


குங்கும கலையோடு குலம் காக்கும் பெண்ணை
குணத்தில் பசுவென்று சொல்வார்கள் கண்ணே
குங்கும கலையோடு குலம் காக்கும் பெண்ணை
குணத்தில் பசுவென்று சொல்வார்கள் கண்ணே

காலையிலே உன் முகம் பார்த்த பின்னே
காலையிலே உன் முகம் பார்த்த பின்னே
கடமை செய்வாள் எங்கள் தமிழ் நாட்டு பெண்ணே
ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு...


சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே


வளர்த்தவரே உன்னை மறந்து விட்டாலும்
அடுத்தவரிடத்தில் கொடுத்து விட்டாலும்
வளர்த்தவரே உன்னை மறந்து விட்டாலும்
அடுத்தவரிடத்தில் கொடுத்து விட்டாலும்
வளர்ந்த இடத்தை நீ மறக்காத தெய்வம்
வளர்ந்த இடத்தை நீ மறக்காத தெய்வம்
வாய் மட்டும் இருந்தால்
நீ மொழி பேசும் தெய்வம்

ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு...
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே


தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பூப்போலே வைத்துன்னை காப்பதென் பாடு
பூப்போலே வைத்துன்னை காப்பதென் பாடு

சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே


பாடல் வாலி
இசை: கே.வி.மகாதேவன்
பாடியவர் :டி.எம்.எஸ்
மாட்டுக்கார வேலன்

நெஞ்சம் உண்டு ....



நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து
பாரு ராஜா

அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா(2)
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து
ஓடு ராஜா
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு
அடிமையின் உடம்பில் ரதம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு
கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு(2)
நீ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு..ஹேய்.................


அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகென்று பெயருமிட்டால்(2)
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்..ஹேய்..........


உண்டு உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு
உண்டு உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு
ரெண்டில் ஒன்றை பார்பதற்கு தோளை நிமிர்த்து(2)
அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா(2)
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

தரை மேல் ...



உலகத்தின் தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ
ஒருநாள் பொழுதும் புலராதோ

தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் துடிக்க வைத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான்

கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவைக் கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே

வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு (2)
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை(தரை மேல்)

கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடினீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம் (2)

அரைஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்
(தரை மேல்)

நான் பாடும் பாடல் ...



நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசைவெல்லம் நதியாக ஓடும் அதில்
இள நெஞ்சம் படகாக ஆடும்
(நான் பாடும்..)

தாழம்பூவில் காணும் பொன்வண்ணம்
நாளும் வாழும் தோகைப்பூங்கன்னம்
தாழம்பூவில் காணும் பொன்வண்ணம்
நாளும் வாழும் தோகைப்பூங்கன்னம்
எங்கே நானென்று தேடட்டும்
உன்னை சிந்தாத முத்தங்கள் சிந்த
எங்கே நானென்று தேடட்டும்
உன்னை சிந்தாத முத்தங்கள் சிந்த
காலம் கொண்டாடும் கவிதை மகள்
கவிதை மகள்
(நான் பாடும்..)

நாதத்தோடு கீதம் உண்டாக
தாளத்தோடு பாதம் தள்ளாட
நாதத்தோடு கீதம் உண்டாக
தாளத்தோடு பாதம் தள்ளாட
வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை
வாராதிருதாலோ தனிமை
வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை
வாராதிருதாலோ தனிமை
அழகே உன் பின்னால் அன்னம் வரும்
அன்னம் வரும்
(நான் பாடும்..)

Song: naan paatum paatal - பாடல்: நான் பாடும் பாடல்
Movie: Naan yen pirandhen - திரைப்படம்: நான் ஏன் பிறந்தேன்
Singers: T.M. Soundararajan - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
Lyrics: Poet Vali - இயற்றியவர்: கவிஞர் வாலி
Music: Shankar Ganesh - இசை: சங்கர் கணேஷ்
Year: - ஆண்டு: 1972

ஒரு தாய் மக்கள் ....



ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

பொதிகை மலையில் பிறந்தவளாம்
பூவை பருவம் அடைந்தவளாம்
கருணை நதியில் குளித்தவளாம்
காவிரி கரையில் களித்தவளாம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்


உரிமையில் நான்கு திசை கொண்டோம்
உறவினில் நண்பர்கள் பலர் கொண்டோம்
மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்
முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்

அமைதியை நெஞ்சினில் பொஆற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்
அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எந்கள் குலம் என்போம்

திரைப்படம்: ஆனந்த ஜோதி
பாடியவர்: T.m. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: M.s. விஸ்வநாதன், b. ராமமூர்த்தி

இப்படித்தான் இருக்க வேண்டும் ....

இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே
இங்கிலீஷ படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டிலே
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே


உங்க சொற்படியே நடத்துக்குறேன் சொல்லுங்க
நான் எப்படி எப்படி இருக்கணுமோ
அப்படி அப்படி மாத்துங்க
சொற்படியே நடத்துக்குறேன் சொல்லுங்க
(இப்படித்தான்)

மானம் பாத்த வெவசாயிங்க நாடு அல்லவோ -
இங்குமானம் நாணம் பெண்களுக்கு ஆடை அல்லவோ..
அதுக்கு...(இப்படித்தான்)


பூமுடிஞ்ச கூந்தல் பழைய நீளம் இருக்குதா -
இப்பபொம்பளைங்க எல்லாத்துக்கும் புருவம் இருக்குதா
கழுதை தேஞ்சு கட்டெறும்பாச்சு நாட்டுலே -
பெண்கள்காரியத்த ஆம்பள பாக்குறான் வீட்டுல


எல்லாரோட என்னையும் சேக்கக் கூடாது -
வேலைஎது கொடுத்தாலும் செய்வேன் தப்பாது..
சொல்லுங்க
களையெடுக்கணும் வெளைய வைக்கணும்
கதிரு முத்தின வயலறுக்கணும்
கட்டுஞ் சொமக்கணும் களமுஞ் சேக்கணும்
காத்தப் பாத்து தூத்தி விடணும்
காலம் நேரம் கடந்திடாமே
நாலாவேலையும் நாமே பாக்கணும்
ஹோ..ஹோ..ஹோ..
அதுக்கு
(இப்படித்தான்)

பாரப்பா பழனியப்பா

பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்
பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா
ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா
பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்

அடுப்பெரிக்கும் பெண்களெல்லாம் அழகழ‌காய் படிக்குதப்பா
அச்சடித்த காகிதத்த அடுக்கடுக்காய் சுமக்குதப்பா
ஏட்டினிலே படிக்குதப்பா எடுத்துச்சொன்னா புரியலேப்பா
நாட்டுக்குதான் ராணியப்பா வீட்டுக்கு அவ மனைவியப்பா


பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா
பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்

ப‌ட்ட‌ணத்துக் காத‌ல‌ப்பா பாதியிலே ம‌றையும‌ப்பா
ப‌ட்டிக்காட்டு காத‌லுக்கு கெட்டியான‌ உருவ‌ம‌ப்பா
காசுப‌ண‌ம் சேருத‌ப்பா காரு வ‌ண்டி ப‌ற‌க்குத‌ப்பா
சேத்த‌ ப‌ண‌ம் செல‌வழிஞ்சா நாட்டுப்ப‌க்க‌ம் ஒதுங்குத‌ப்பா

பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா
பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்

வரிகள்: கவிஞர் கண்ணதாஸன்.
படம்: பெரிய இடத்துப் பெண் ...

நல்ல நல்ல ....


நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி

சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி

கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்

அன்பில் உயர்ந்தவர் யாரு? வள்ளலார்
ஆமா.. வள்ளலார்
அறிவில் உயர்ந்தவர் யாரு?வள்ளுவர்
ஆமா.. வள்ளுவர்
பாட்டில் உயர்ந்தவர் யாரு?பாரதியார்
ஆமா.. பாரதியார்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

வேட்டையாடு விளையாடு ...

வேட்டையாடு விளையாடுவிருப்பம் போல உறவாடு
வீரமாக நடையை போடு -
நீவெற்றி எனும் கடலில் ஆடு

குறும்புக்கார வெள்ளாடே
கொடியை வளச்சித் தள்ளாதே
பொறுமையில்லா மனிதரைப் போல்
புத்தியைக் கெடுத்துக் கொள்ளாதே
அருகினிலே தழையிருக்க ஆகாயத்தில் தாவாதே
தருமத்தையே மறந்து உந்தன்
துணிவைக் காட்ட எண்ணாதே
(வேட்டை)

நேர்மை உள்ளத்திலே நீந்தும் எண்ணத்திலே
தீமை வந்ததில்லை தெரிந்தால் துன்பமில்லை
தேவை அங்கிருக்கு தீனி இங்கிருக்கு
செம்மறியாடே நீ சிரமப்படாதே
(வேட்டை)

பெண்மை சிரிக்குது அது பேசத் துடிக்குது
நன்மை செய்வதே என் கடமையாகும்
நன்றி சொல்வதே என் கண்ணியமாகும்
நட்பை வளர்ப்பதே என் லட்சியமாகும்
(வேட்டை)

குறும்பையாடே முந்தாதே
குள்ள நரியை நம்பாதே
கூடி வாழத் தெரிஞ்சுக்கோ
குணத்தைப் போற்றி நடந்துக்கோ
விரிஞ்சு கிடக்கும் பூமியிலே
இனத்தைத் தேடி சேர்ந்துக்கோ
விளக்கு வைக்கிற நேரம் வந்தா
வீடிருக்கு புரிஞ்சுக்கோ
(வேட்டை)

திரைப்படம் :அரச கட்டளை
பாடியவர் :
T.m.செளந்தரராஜன்,சுசீலா
இயற்றியவர் : முத்துக்கூத்தன்
திரையிசை :
K.v.மகாதேவன்

உல்லாச உலகம் .....

உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
தய்யடா தய்யடா தய்யடா -
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
உல்லாச உலகம் உனக்கே சொந்ததம்
தய்யடா தய்யடா தய்யடா -
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ..ஓ..ஓ..ஓ..ஓ...
செய்யடா செய்யடா செய்யடா

கொடுக்குற தெய்வம் வலுவில் வந்தது......
கொடுக்குற தெய்வம் வலுவில் வந்தது
கூரையைப் பிரிச்சி கொட்டுதம்மா
கிடைச்சத்தை நீயும் வாரிவச்சா
கிட்டாத சுகமே இல்லையடா
கெத்தாகவே ... கெத்தாகவே எதையும் சேர்த்து வைக்காதே
தய்யடா தய்யடா தய்யடா -
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

மீச நரச்சி போன பின்னாலே ...
மீச நரச்சி போன பின்னாலே
ஆசை நரச்சி போய்விடுமா
வயசு அதிகம் ஆன பின்னாலே
மனசும் கிழமாய் மாறிடுமா
காத்திருந்த்தா .,,... காத்திருந்தா
அதை அனுபவிச்சிடனும்
தய்யடா தய்யடா தய்யடா -
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

பைசாவை கண்டா நைசாக பேச
பைசாவை கண்டா நைசாக பேச
பல ரக பெண்கள் வருவாங்க
பக்கத்தில் வந்தது.. பக்கத்தில் வந்து -
ஹூக்காவை தந்து பாடி ஆடி சுகம் தருவாங்க
பட்டான மேனி ..பட்டான மேனி
பாத்தாலே இன்பம்
மெய்யடா மெய்யடா மெய்யடா -
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
செய்யடா செய்யடா செய்யடா செய்யடா
ஓ..ஓ..ஓ..ஓ..ஓ...
செய்யடா செய்யடா செய்யடா
உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
தய்யடா தய்யடா தய்யடா -
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

பாடல் : உல்லாச உலகம் உனக்கே
திரைப்படம் : அலிபாபாவும் 40 திருடர்களும்
பாடியவர் : கண்டசாலா
இயற்றியவர் : மருதகாசி
திரையிசை : S.தக்ஷிணாமூர்த்தி

நினைத்ததை நடத்தியே .....


நினைத்ததை நடத்தியே
முடிப்பவன் நான் ! நான் ! நான் !
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் ! நான் !
என்னிடம் மயக்கம் கொண்டவர் பழக்கம்
இன்றும் என்றும் தேவை என்று சொல்லடி தங்கம் !!

தங்கம் தங்கும் எந்தன் அங்கம் எங்கெங்கும் ! பொன்னும் பெண்ணும் வந்து மின்னும் கண் எங்கும் !
விளையாட்டு (ப்) பிள்ளைகள் தலையாட்டும் பொம்மைகள்
வர வேண்டும் எல்லோரும் உறவாட இந்நேரம் !
பட்டாடை தொட்டாட (க்) கட்டாயம் வா !! ((நினைத்ததை))

பன்னீரில் குளிப்பது மாளிகை நெஞ்சம் !
கண்ணீரில் மிதப்பது ஏழைகள் உள்ளம் !
படைத்தான் ஒரு உலகம்
பணம் தான் அதன் உருவம் !
எதுவும் இதில் அடக்கம் -
இது ஏன்னென்று எதிர்காலம் விடை கூறட்டும் !! ((நினைத்ததை))

செந்தேனை வடிப்பது தாமரை கன்னம் -
அதை சிந்தாமல் கொடுப்பது பூவிழி(க்) கிண்ணம்
முதல் நாள் - மெல்ல தொடலாம்
மறு நாள் - மிச்சம் பெறலாம்
அவன்தான் நல்ல ரசிகன்
இதை அறியாத நீ யாரோ புது(ப்) பாடகன் ((நினைத்ததை))

சொல்லாமல் நடப்பது நாடக மொன்று
அது இன்றோடு நில்லாமல் நாளையும் உண்டு !
இதழ்மேல் ஒரு பாடல்
மடிமேல் விளையாடல்
இடையில் சிறு ஊடல்
இதை நான் சொல்லத் தானிந்த விழி ஜாடைகள் ((நினைத்ததை))

ஒன்றே குலமென்று ...




படம்: பல்லாண்டு வாழ்க
இசை: கே.வி.மகாதேவன்
பாடல்: கவிஞர் புலமைப்பித்தன்
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

-------------------------------

அன்பிலார் எல்லாம் தமர்க்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக்கூலி தரும்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்

கடவுளிலே கருணைதனைக் காணலாம்-அந்தக்
கருணையிலே கடவுளையும் காணலாம்
நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியாம்
அங்கு ஒருபோதும் மறையாது அவன் காட்சியாம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்

பாவமென்ற கல்லறைக்குப் பலவழி-என்றும்
தர்மதேவன் கோவிலுக்கு ஒருவழி
அந்தவழியொன்றுதான் எங்கள்வழியென்றுநாம்
நேர்மை ஒருநாளும் தவறாமல் நடைபோடுவோம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்

இதயதெய்வம் நமது அண்ணா தோன்றினார்-அவர்
என்றும்வாழும் கொள்கைதீபம் ஏற்றினார்
அந்த ஒளிகாணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளைவரலாறு நமக்காக உருவாகலாம்

நாளை உலகை ...

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே
ஒன்றாய் வாருங்கள் தோழர்களே


நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
உழைக்கும் கரங்களே

ஏர் பூட்டி தோளில் வைத்து
இல்லாமை வீட்டில் வைத்து
ஏர் பூட்டி தோளில் வைத்து
இல்லாமை வீட்டில் வைத்து
போராடும் காலமெலாம் போனதம்மா
எல்லோர்க்கும் யாவும் உண்டு
என்றாகும் காலம் இன்று
நேராக கண்ணில் வந்து தோன்றுதம்மா
விடியும் வேளை வரப்போகுது
தருமம் தீர்ப்பை தரப்போகுது
நியாயங்கள் சாவதில்லை என்றும் நியாயங்கள் சாவதில்லை


நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
உழைக்கும் கரங்களே

கல்விக்கு சாலை உண்டு
நூலுக்கு ஆலை உண்டு
நாட்டுக்கு தேவை எல்லாம்
நாம் தேடலாம்
தோளுக்கு வீரம் உண்டு
தோற்காத நியாயம் உண்டு
நீதிக்கு நெஞ்சம் உண்டு
நாம் வாழலாம்
சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம்
சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்
வாருங்கள் தோழர்களே
ஒன்றாய் சேருங்கள் தோழர்களே

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே

Song: naaLai ulakai aaLa vENtum- பாடல்: நாளை உலகை ஆள வேண்டும்
Movie: uzhaikkum karangal - திரைப்படம்: உழைக்கும் கரங்கள்
Singers: K.J. Jesudas - பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
Lyrics: Poet Pulamai piththan - இயற்றியவர்: புலமைப் பித்தன்
Music: M.S. Viswanathan - இசை: எம். எஸ். விஸ்வநாதன்
Year: - ஆண்டு: 1976

கடவுள் செய்த பாவம் .....

கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம்
யாவும் என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம் ..ம் ..
மனிதன் கொண்ட கோலம்
பொருளேதுமின்றி கருவாக வைத்து உருவாக்கி விட்டுவிட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி
இடம் மாற்றி வைத்து விட்டான்
பொருளேதுமின்றி கருவாக வைத்து உருவாக்கி விட்டுவிட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி
இடம் மாற்றி வைத்து விட்டான் ..........
கடவுள் செய்த ................

நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய் போன இந்த பூமியிலே (2)

முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள்
முதுகுக்கு பின்னால் சீரும்
முகஸ்துதி பேசும் வளையும் குழையும்
காரியமானதும் மாறும் .ம் ....காரியமானதும் மாறும் ..........
கடவுள் செய்த ................

கொடுப்பவன் தானே மேல் ஜாதி
கொடுக்காதவனே கீழ் ஜாதி (2)
படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான்
பாழாய்ப்போன இந்த பூமியிலே (2)
நடப்பது யாவும் விதிப்படி என்றால்
வேதனை எப்படி தீரும் (2)
உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால்
உலகம் உருப்படியாகும் .ம் ...உலகம் உருப்படியாகும் ..........
கடவுள் செய்த ................

Song: kadavul seitha paavam - பாடல்: கடவுள் செய்த பாவம்
Movie: Nadodi - திரைப்படம்: நாடோடி
Singers: T.M. Soundararajan, - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்,
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan - இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
Year: - ஆண்டு: 1966  


This feature is powered by Dishant.com - Home of Indian Music

              

அவனுக்கென்ன தூங்கிவிட்டான் ...

அவனுகென்ன தூங்கிவிட்டான் ...
அகப்பட்டவன் நான் அல்லவா
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்
அவனுகென்ன தூங்கிவிட்டான் ...
அகப்பட்டவன் நான் அல்லவா
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்
கைகளிலே போட்டு விட்டான்

இவனுக்கென்று எதை கொடுத்தான்
எலும்புடனே சதை கொடுத்தான்
இவனுக்கென்று எதை கொடுத்தான்
எலும்புடனே சதை கொடுத்தான்
இதயத்தையும் கொடுத்துவிட்டு
இறக்கும் வரை துடிக்க விட்டான்
இறக்கும் வரை துடிக்க விட்டான்
(அவனுகென்ன தூங்கிவிட்டான் ...)

யானை இடம் நன்றி வைத்தான்
காக்கை இடம் உறவு வைத்தான்
மான்களுக்கும் மானம் வைத்தான்
மனிதனுக்கு என்ன வைத்தான் ?
மனிதனுக்கு என்ன வைத்தான்
( அவனுகென்ன தூங்கிவிட்டான் ...)

வானில் உள்ள தேவர்களை வாழவைக்க விஷம் குடித்தான்
வானில் உள்ள தேவர்களை வாழவைக்க விஷம் குடித்தான்
நாட்டில் உள்ள விஷத்தை எல்லாம் நான் குடிக்க விட்டுவிட்டான்
நான் குடிக்க விட்டுவிட்டான்
(அவனுகென்ன தூங்கிவிட்டான் ...)

படம : பெரிய இடத்து பெண்
இசை : M.S.V , ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : T.M.S, P.Susheela

வெற்றி மீது வெற்றி வந்து ..

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்

தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக் கண்டேன்
தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக் கண்டேன்
உண்ணாமல் இருக்க கண்டேன்
உறங்காமல் விழிக்கக் கண்டேன்
மற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ
இது உன்னிடத்தில் நான் அறிந்த பாடம் அல்லவோ

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்

அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம்
பிள்ளையால் பன்னீர் ஆகும்
அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம்
பிள்ளையால் பன்னீர் ஆகும்
ஆசை தரும் கனவுகள் எல்லாம்
அவனால்தான் நனவுகள் ஆகும்
அன்று தொட்டு நீ நினைத்த எண்ணம் என்னம்மா?
அதை இன்று தொட்டு நான் முடிக்கும் வண்ணம் பாரம்மா

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்

ஏற்றமுன்னா ஏற்றம் ...

ஏற்றமுன்னா ஏற்றம்
இதிலே இருக்கு முன்னேற்றம்
எல்லாரும் பாடுபட்டா -
இது இன்பம் விளையும் தோட்டம்
எல்லாரும் பாடுபட்டா -
இது இன்பம் விளையும் தோட்டம்

கிணற்று நீரை நிலத்துக்கு தான் எடுத்து தரும் ஏற்றம்
கிளைவெடிக்கும் பயிர்களுக்கு உயர்வளிக்கும் ஊட்டம்
தந்தனத் தானே
ஏலேலோ .....
தந்தனத் தானே
ஏலேலோ .....

எறும்பு போல வரிசையாக
எதிலும் சேர்ந்து உழைக்கணும்
இடுப்பே வளையா மனிதர்
எதிர் பார்த்து பொழைக்கணும் -
நம்மை எதிர் பார்த்து பொழைக்கணும்

உடும்பு போல உறுதிவேனும்
ஓணான் நிலைமை திருந்தனும்
உடைஞ்சு போன நமது இனம்
ஒன்னா வந்து பொருந்தனும்
தந்தனத் தானே
ஏலேலோ .....
தந்தனத் தானே
ஏலேலோ .....

ஓதுவார் தொழுவாரெல்லாம் உழுவார் தலைக்கடையிலே
உலகம் செழிப்பதெல்லாம் ஏர் நடக்கும் நடையிலே
ஆதிமகள் அவ்வை சொல்லை அலசி பாத்தா மனசிலே
ஆதிமகள் அவ்வை சொல்லை அலசி பாத்தா மனசிலே
நீதிஎன்ற நெல் விளையும்
நெருஞ்சி படர்ந்த தரிசிலே
போடு .... தந்தனத் தானே
ஏலேலோ
தந்தனத் தானே ஏலேலோ

விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும்
வீணரெல்லாம் மாறனும்
வேலை செஞ்சா உயர்வோமென்ற
விபரம் மண்டையில் ஏறனும்
விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும்
வீணரெல்லாம் மாறனும்
வேலை செஞ்சா உயர்வோமென்ற
விபரம் மண்டையில் ஏறனும்
நிதியை எண்ணும் பெரியவங்க
நெஞ்சில் அன்பு சேரனும்
நிரந்தரமா சகலருமே சுதந்திரமா வாழனும்
தந்தனத் தானே ஏலேலோ .....
தந்தனத் தானே ஏலேலோ .....

காசிக்கு போகும் சந்நியாசி ..

காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
கங்கைக்கு போகும் பரதேசி...
கங்கைக்கு போகும் பரதேசி
நீ நேத்துவரையிலும் சுகவாசி

காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
பட்டது போதும் பெண்ணாலே
பட்டது போதும் பெண்ணாலே
இதை பட்டினத்தாரும் சொன்னாரே
பட்டது போதும் பெண்ணாலே
இதை பட்டினத்தாரும் சொன்னாரே
அவ சுட்டது போதும்
சிவ சிவ சிவனே
சிவ சிவ சிவனே
ஆ... சிவனே ஆ...
சுட்டது போதும் சொல்லாலே
நான் சுகப்படவில்லை அவளாலே
சுட்டது போதும் சொல்லாலே
நான் சுகப்படவில்லை அவளாலே

காசிக்கு காசிக்கு காசிக்கு போறேன் ஆள விடு
என்னை இனிமேலாவது வாழ விடு
ஆதரவான வார்த்தையை பேசி
அருமை மிகுந்த மனைவியை நேசி
ஆதரவான வார்த்தையை பேசி
அருமை மிகுந்த மனைவியை நேசி
அன்பெனும் பாடத்தை அவளிடம் வாசி
அவளை விடவா உயர்ந்தது காசி

அவதி படுபவன் படுசம்சாரி
அப்பா நீயோ பிரம்மச்சாரி
அவதி படுபவன் படுசம்சாரி
அப்பா நீயோ பிரம்மச்சாரி
தலைஅணை மந்திரம் மூளையை தடுக்கும்
தாரக மந்திரம் மோட்சத்தை கொடுக்கும்
தாரக மந்திரம் மோட்சத்தை கொடுக்கும்

காசிக்கு காசிக்கு காசிக்கு போறேன் ஆள விடு
என்னை இனிமேலாவது வாழ விடு
இல்லறம் என்பது நல்லறம் ஆகும்
இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்
இல்லறம் என்பது நல்லறம் ஆகும்
இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்
குடும்பத்தின் விளக்கு மனைவி என்றாகும்
கோபத்தை மறந்தால் சொர்ககம் உண்டாகும்
குடும்பத்தின் விளக்கு மனைவி என்றாகும்
கோபத்தை மறந்தால் சொர்ககம் உண்டாகும்

பக்தியின் வடிவம் சன்யாசம்
புண்ணியவான்கள் சகவாசம்
அதுவே சந்தோஷம்
பக்தியின் வடிவம் சன்யாசம்
புண்ணியவான்கள் சகவாசம்
அதுவே சந்தோஷம்
சக்தியின் வடிவம் சம்சாரம்
அவளே அன்பின் அவதாரம்
வேண்டாம் வெளி வேஷம்
சக்தியின் வடிவம் சம்சாரம்
அவளே அன்பின் அவதாரம்
வேண்டாம் வெளி வேஷம்

காசிநாதனே என் தெய்வம்
கட்டிய மனைவி குலதெய்வம்
காசிநாதனே என் தெய்வம்
கட்டிய மனைவி குலதெய்வம்
மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை
மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை

சரியோ, இனி அவளுடன் இருப்பது சரியோ
அவள் துணையினை பிரிவது முறையோ
பகைதான் வளரும்
பகையே அன்பாய் மலரும்
பிரிந்தவர் இணைந்திட படுமோ
மணந்தவர் பிரிந்திட தகுமோ
இல்லறம் நல்லறமே

காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் ...


ஆண்டவன் ஒருவன்... இருக்கின்றான்...
அவன்... அன்பு மனங்களில்... சிரிக்கின்றான்....
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

வேண்டுதல் வேண்டாமை ஆத்திர மெய்சுடராய்
வேண்டுதல் வேண்டாமை ஆத்திர மெய்சுடராய்
விளக்கிட முடியாத தத்துவ பொருளாய்
விளக்கிட முடியாத தத்துவ பொருளாய்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

நல்லவர்போல் வெளி வேஷங்கள்
அணிந்து நடிப்பவர் நடுவில் இருப்பதில்லை
நாணயத்தோடு நல்லறம்
காத்து நடப்பவர் தம்மை மறப்பதில்லை
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
தன்மானம் காப்பதிலே
அன்னை தந்தையை பணிவதிலே
பிறந்த பொன்னாட்டின் நல்ல முன்னேற்றம்
காண பொதுப்பணி புரிபவர் மகிழ்ச்சியிலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
சத்தியத்தின் எல்லையிலே
உயர் சமரச நெறிகளிலே ஆஆ....
சத்தியத்தின் எல்லையிலே
உயர் சமரச நெறிகளிலே
அன்பின் சக்தியிலே தேச பக்தியிலே
உண்மை சமத்துவம் காட்டும் சன்மார்கத்திலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

பாடல் :கண்ணதாசன்
இசை :டி.ஆர்.பாப்பா
பாடியவர் :சீர்காழி கோவிந்தராஜன் 

பலப் பல ரகமா...

பல பல பல பல ரகமா இருக்குது பூட்டு
அது பல விதமா மனிதர்களை பூட்டுது போட்டு
கல கலவெனும் பகுத்தறிவு சாவிய போட்டு
நான் கச்சிதமா திறந்து வைப்பேன் இதயத்தை காட்டு

அடக்கமில்லாமே சபையிலே ஏறி அளந்து கொட்டும்
அண்ணன்களுக்கு வாயிலே பூட்டு
அடக்கமில்லாமே சபையிலே ஏறி அளந்து கொட்டும்
அண்ணன்களுக்கு வாயிலே பூட்டு
அடுத்தவர் பையில் இருப்பதை கையில்
அள்ளி கொள்ளும் திருடருக்கு கையிலே பூட்டு
புத்தி கெட்டு ...சக்தி கெட்டு....
பொளப்பை எல்லாம் விட்டுவிட்டு
சுற்றி வரும் சோம்பேறிக்கு காலிலே பூட்டு(2) .....
(பல பல பல பலரகமா).......

மங்கையர் பின்னாலே லைசென்சு இல்லாமே
வளைய வரும் காமுகர்க்கு கண்ணிலே பூட்டு
மங்கையர் பின்னாலே லைசென்சு இல்லாமே
வளைய வரும் காமுகர்க்கு கண்ணிலே பூட்டு
அங்குமில்லாமே இங்குமில்லாமே
அலைந்து வரும் மூடருக்கு மனசுல பூட்டு
உறக்கம் கெட்டு ........வழக்கம் கெட்டு...
ஊரு வம்ப கேட்டுக்கிட்டு
உள்ளம் கெட்ட மனுசருக்கு காதிலே பூட்டு (2) ....
(பல பல பல பலரகமா).......

அறிவிருந்தாலும் வழித்தடுமாறி
அவதிபடும் மக்களுக்கும் இருக்குது சாவி
அறிவிருந்தாலும் வழித்தடுமாறி
அவதிபடும் மக்களுக்கும் இருக்குது சாவி
வறுமையினாலே வாழ்க்கையில்லாமே வாடி போன வீட்டினையும் திறக்குது சாவி
தங்கமக்கா....உள்ளத்திலே...
அன்பு மிக்க எண்ணத்திலே
தடை இருந்தால் உடைத்து போடும்
தர்மத்தின் சாவி(2) ....
(பல பல பல பலரகமா.......)

எத்தனை பெரிய மனிதருக்கு ...



இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை"

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு
(எத்தனை பெரிய)

உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன
உடல் மட்டுமே கருப்பு
அவர் உதிரம் என்றும் சிவப்பு
உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன
உடல் மட்டுமே கருப்பு
அவர் உதிரம் என்றும் சிவப்பு
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்
பல வழி கடந்தார் தாழ்ந்தவர் ஆவார்
ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்....
(எத்தனை பெரிய)

கோழியை பாரு காலையில் விழிக்கும்
குருவியை பாரு சோம்பலை பழிக்கும்
கோழியை பாரு காலையில் விழிக்கும்
குருவியை பாரு சோம்பலை பழிக்கும்
காக்கையை பாரு கூடி பிழைக்கும்
காக்கையை பாரு கூடி பிழைக்கும்
நம்மையும் பாரு நாடே சிரிக்கும்
ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்....
(எத்தனை பெரிய)

தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி
உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி
உழைத்ததிட வேண்டும் கைகளை நம்பி
ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்....
(எத்தனை பெரிய)


திரைப்படம்: ஆசைமுகம்
பாடியவர்:
T.m.செளந்தரராஜன்
இசை:எஸ் எம் .
சுப்பையா நாயுடு

உன்னைப் பார்த்து .....

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

பாடும் பறவை.. பாயும் மிருகம்..
பாடும் பறவை பாயும் மிருகம்
இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை
ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை


உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

சேவல் கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே
ஏவல் செய்யும் காவல் காக்கும்
நாய்களும் தங்கள் குணத்தாலே
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே
இனத்தை இனமே பகைப்பது எல்லாம்
மனிதன் வகுத்த வாழ்க்கையிலே

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

வானில் நீந்தும் மேகம் கண்டால்
வண்ண மயில்கள் ஆடாதோ ?
வாழை போல தோகை விரிய
வளர் பிறை ஆயிரம் தோன்றாதோ ?
அழகும் கலையும் வாழும் நாடு
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?
அழகும் கலையும் வாழும் நாடு
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?
இவைகளை எல்லாம் அழிக்க நினைத்தால்
சரித்திரம் உன்னை இகழாதோ ?

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
இறைவன் ஒருவன் இருக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்


தோன்றத்தான் போகிறது சம உரிமை சமுதாயம்
மறையத்தான் போகிறது தலை வணங்கும் அநியாயம்
மலரத்தான் போகிறது எங்களது புது வாழ்வு
மாறத்தான் போகிறது மனிதா உன் விளையாட்டு

புத்தன் ,இயேசு .....



புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக


கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக
மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் நமக்காக
(புத்தன் இயேசு )

நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்
(புத்தன் இயேசு )

பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
அழுதவர் சிரித்ததும் சிரிப்பவர் அழுததும்
விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம் இறைவன் தந்ததில்லை
(புத்தன் இயேசு )

திரைப்படம்:சந்திரோதயம்
பாடியவர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்
இயற்றியவர்:வாலி
இசையமைத்தவர்கள்:எம்.எஸ்.விஸ்வநாதன்

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ...

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்

பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா
அன்பே உன் அன்னை
அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில்
ஒன்றே உன் வேதம்

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை

வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
அன்பே உன் அன்னை
அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில்
ஒன்றே உன் வேதம்

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை

ஒருவன் மனது ....

ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா

ஏறும் போது எரிகின்றான் இறங்கும்போது சிரிக்கின்றான்(2)
வாழும் நேரத்தில் வருகின்றான்
வறுமை வந்தால் பிரிகின்றான்
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா

தாயின் பெருமை மறக்கின்றான்
தன்னல சேற்றில் விழுகின்றான்(2)
பேய்போல் பணத்தை காக்கின்றான்
பெரியவர் தம்மை பழிக்கின்றான்
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா

இசை :கே.வி.மகாதேவன்
பாடியவர் :டி.எம்.சௌந்தராஜன்

கடவுள் ஏன் கல்லானான் ....

கடவுள் ஏன் கல்லானான் -
மனம் கல்லாய் போன மனிதர்களாலே (கடவுள்)

கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் - அதை
கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் - இங்கு
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் (கடவுள்)

நெஞ்சுக்கு தேவை மனசாட்சி -
அது நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி -
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது அவன் சாட்சி (கடவுள்)

சதி செயல் செய்தவன் புத்திசாலி -
அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையை சொல்பவன் சதிகாரன்
உண்மையை சொல்பவன் சதிகாரன் -
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் -
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் (கடவுள்)

திரைப்படம் : என் அண்ணன்
பாடியவர் : T.M.செளந்தரராஜன்
இயற்றியவர் : கண்ணதாசன்
திரையிசை : K.V.மகாதேவன்

நாலு பேருக்கு நன்றி ...

உள்ளத்தில் இருப்பதெல்லாம்..
சொல்ல ஓர் வார்த்தையில்லை..
நான் ஊமையாய் பிறக்கவில்லை..
உணர்ச்சியோ மறையவில்லை..
என் தங்கமே உனது மேனி..
தாங்கி நான் சுமந்து செல்ல..
எனக்கொரு பந்தமில்லை
எவருக்கோ இறைவன் தந்தான்
அந்த நாலு பேருக்கு நன்றி


நாலு பேருக்கு நன்றி
அந்த நாலு பேருக்கு நன்றி
தாய் இல்லாத அனாதைக்கெல்லாம்
தோள் கொடுத்து தூக்கி செல்லும்
நாலு பேருக்கு நன்றி

உறவு என்றும் பாசம் என்றும்
இறைவைன் பூட்டிய விலங்கு
அழுவதர்க்கும் சிரிப்பதர்க்கும்
அமைத்த உள்ளம் ஒன்று
அது வெள்ளம் தானே ஓடும்
ஆசை வெள்ளம் சொந்தம் தேடும்
சொந்தம் ஏதும் இல்லை என்றால்
அந்த நேரம் நால்வர் வேண்டும்
நாலு பேருக்கு நன்றி

இன்பத்தையே பங்கு வைத்தால்
புன்னகை சொல்வது நன்றி
துன்பத்திலே துணை வந்தால்
கண்ணீர் சொல்வது நன்றி
வாழும் போது வருவோர்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்
நாலு பேருக்கு நன்றி

நான் யார் ....

நான் யார் நான் யார் நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர் யார் யார்
நான் யார் நான் யார் நீ யார்
ஹாஹ ஹாஹாஹ........

உறவார் பகையார் உண்மையை உணரார்
உனக்கே நீ யாரோ ?
வருவார் இருப்பார் போவார் -
நிலையாய் வாழ்வார் யார் யாரோ ?


நான் யார் நான் யார் நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்
நான் யார் நான் யார் நீ யார்

உள்ளார் புசிப்பார் இல்லார் பசிப்பார்
உதவிக்கு யார் யாரோ ?
நல்லார் தீயார் உயர்ந்தார் தாழ்ந்தார்
நமக்குள் யார் யாரோ ?
அடிப்பார் வலியார் துடிப்பார் மெலியார்
தடுப்பார் யார் யாரோ ?
எடுப்பார் சிரிப்பார் இழப்பார் அழுவார்
எதிர்ப்பார் யார் யாரோ ?
எதிர்ப்பார் யார் யாரோ ? ஊ......


இனியார் வருவார் மருந்தார் தருவார்
பிழைப்பார் யார் யாரோ?
உயிரார் பறப்பார் உடலார் கிடப்பார்
துணை யார் வருவாரோ?
நரியார் நாயார் கடிப்பார் முடிப்பார்
நாளை யார் யாரோ?
பிறந்தார் இருந்தார் நடந்தார் கிடந்தார்
முடிந்தார் யார் யாரோ ?
முடிந்தார் யார் யாரோ ?

நான் யார் நான் யார் நீ யார்?

தாய் மேல் ஆணை ...


தாய் மேல் ஆணை...
தமிழ் மேல் ஆணை...
தாய் மேல் ஆணை
தமிழ் மேல் ஆணை
குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன்
தனியானாலும் தலை போனாலும்
தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன் (தாய் மேல்)

இருட்டினில் வாழும் இதயங்களே
கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்
நல்லவர் உலகம் எப்படி இருக்கும்
என்பதை பாருங்கள்
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்
என்பது கேள்வி இல்லை -
அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால்
வாழ்க்கையில் தோல்வியில்லை...
வாழ்க்கையில் தோல்வியில்லை... (தாய் மேல்)

தனி ஒரு மனிதன் திருந்தி விட்டால்
சிறைச்சாலைகள் தேவை இல்லை
இருப்பதை எல்லாம் பொதுவில் வைத்ததாலே
எடுப்பவர் யாரும் இல்லை
பிறவியில் எவனும் பிழைகளை சுமாந்தே
வாழ்க்கையை தொடாங்கவில்லை - பின்பு
அவனிடம் வளர்ந்த குறைகளை சொன்னால்
வார்த்தையில் அடங்கவில்லை...
வார்த்தையில் அடங்கவில்லை... (தாய் மேல்)

நான் படித்தேன் காஞ்சியிலே ...


தம்பி ....
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை
தம்பி ....
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று

இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைபோல் கந்தை அணிந்தார்
இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைப்போல் கந்தை அணிந்தார்
ஏணியாக தாழந்தவர்க்கு உதவி புரிந்தார்
இன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார்

(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று )-

நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
ஏற்றுக் கொண்ட பதவிகெல்லாம் பெருமையைத்தந்தார்
தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்

(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று )-

தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்

(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று )-

வீடுகெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே
தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே
வீடுகெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே
தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே
ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார்
தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்

(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று) -

ஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஒரு நாள் இந்த நிலைமைகெல்லாம் மாறுதல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு


ஒரு சம்பவம் என்பது நேற்று -
நேற்று அது சரித்திரம் என்பது இன்று -
இன்று அது சாதனை ஆவது நாளை -
நாளை வரும் சோதனைதான் இடை வேளை
Related Posts Plugin for WordPress, Blogger...