Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

ஞாயிறு, 22 நவம்பர், 2009

கண் போன போக்கிலே கால் போகலாமா




கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்

பொய்யான சிலபேர்க்கு புது நாகரிகம்
புரியாத பலபேர்க்கு இது நாகரிகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரிகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்

சனி, 7 நவம்பர், 2009

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு..



இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"
  1. திருக்குறள் தமிழில்
  2. Thirukural in English
  3. திருக்குறள் application(in both tamil & english)
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.


வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவெதொன்று இல்.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

வகையறிந்து வல்லமை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

காலம் கருதி இருப்பவர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அ·தொப்ப தில்.
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்அது உணர்வார்ப் பெறின்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

வையத்தின் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

அன்பின் வழியது உயிர்நிலை அ·திலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆ¡¢ருள் உய்த்து விடும்.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை.

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும.

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

இவைகள் என் மனம் கவர்ந்த திருக்குறள் வரிகள்...!


      வியாழன், 5 நவம்பர், 2009

      பட்டுக்கோட்டையாரின் பாட்டுக்கோட்டை ..!

      பட்டுகோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்கள் வேண்டுமா..?



      ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
      அதுதாண்டா வளர்ச்சி (ஆளும்)
      ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே-நீ
      தரும் மகிழ்ச்சி

      வேப்பமர உச்சியில் நின்னு
      பேயொன்னு ஆடுதுன்னு
      விளையாடப் போதும்போது
      சொல்லி வைப்பாங்க-உன்
      வீரத்தைக் கொழுந்திலேயே
      கிள்ளி வைப்பாங்க
      வேலையற்ற வீணர்களின்
      மூளையற்ற வார்த்தைகளை
      வேடிக்கையாகக் கூட
      நம்பி விடாதே-நீ
      வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
      வெம்பி விடாதே-நீ
      வெம்பி விடாதே!

      நல்ல பொழுதையெல்லாம்
      தூங்கிக் கெடுத்தவர்கள்
      நாட்டைக் கெடுத்ததுடன்
      தானுங்கெட்டார்; சிலர்
      அல்லும் பகலும்
      தெருக்கல்லா யிருந்துவிட்டு
      அதிர்ஷடமில்லையென்று
      அலட்டிக் கொண்டார்
      விழித்துக் கொண்டோரெல்லாம்
      பிழைத்துக்கொண்டார்

      சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து-தவறு
      சிறிசா இருக்கையில் திருத்திக்கோ
      தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா-அது
      திரும்பவும் வராமே பார்த்துக்கோ

      ஏட்டில் படித்ததோடு
      இருந்து விடாதே!-நீ
      ஏன்படித்தோம் என்பதையும்
      மறந்துவிடாதே (ஏட்டில்)
      நாட்டின் நெறிதவறி
      நடந்துவிடாதே-நம் (நாட்டின்)
      நல்லவர்கள் தூற்றும்படி
      வளர்ந்துவிடாதே!

      சூழ்ச்சியிலே சுவரமைத்து
      சுயநலத்தால் கோட்டைகட்டிச்
      சுடர்விட்ட நீதிதனைத்
      தூக்கி எறிந்துவிட்டுச்
      சாட்சிகள் வேண்டாம்
      சகலமும் நானென்று
      சதிராடும் வீணர்களின்
      அதிகார உலகமடா
      புதிரான உலகமடா - உண்மைக்கு
      எதிரான உலகமடா - இதில்
      பொறுமையைக் கிண்டிவிடும்
      போக்கிரிகள் அதிகமடா
      குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
      குருட்டு உலகமடா - இது
      கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
      திருட்டு உலகமடா - தம்பி
      தெரிந்து நடந்துகொள்ளடா - இதயம்
      திருந்த மருந்து சொல்லடா (குறுக்கு)
      இருக்கும் அறிவை மடமை மூடிய
      இருட்டு உலகமடா - வாழ்வின்
      எந்த நேரமும் சண்டை ஓயாத
      முரட்டு உலகமடா - தம்பி
      தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம்
      திருந்த மருந்து சொல்லடா

      இரைபோடும் மனிதருக்கே
      இரையாகும் வெள்ளாடே
      இதுதான் உலகம், வீண்
      அனுதாபம் கொண்டு நீ
      ஒரு நாளும் நம்பிடாதே
      முறையோடு உழைத்துண்ண
      முடியாத சோம்பேறி
      நரிபோலத் திரிவார் புவிமேலே - நல்ல
      வழியோடு போகின்ற
      வாய்பேசா உயிர்களை
      வதச்சுவதச்சு தின்பார் வெறியாலே (இரை)
      காலொடிந்த ஆட்டுகாகக்
      கண்ணீர் விட்ட புத்தரும்
      கடல்போல உள்ளங்கொண்ட
      காந்தி ஏசுநாதரும்
      கழுத்தறுக்கும் கொடுமைகண்டு
      திருந்தவழி சொன்னதும் உண்டு
      காதில் மட்டும் கேட்டு அதை ரசிச்சாங்க - ஆனா
      கறிக்கடையின் கணக்கைப் பெருக்கி வந்தாங்க (இரை)

      தர்மமென்பார் நீதி என்பார் தரமென்பார்
      சரித்திரத்துச் சான்று சொல்வார்
      தாயன்புப் பெட்டகத்தைச்
      சந்தியிலே எறிந்துவிட்டுச்
      தன்மான வீரரென்பார்
      மர்மமாய்ச் சதிபுரிவார்
      வாய்பேசா அபலைகளின்
      வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
      கர்மவினை யென்பார்
      பிரமனெழுத் தென்பார்
      கடவுள்மேல் குற்றமென்பார் - இந்தத்
      திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
      கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம்
      ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
      எந்நாளும் உலகில் ஏமாற்றும் விழிகள்
      இல்லாத நன்னாளை உண்டாக்கணும்

      ஒரு குறையும் செய்யாமே
      ஒலகத்திலே யாருமில்லே - அப்படி
      உத்தமனாய் வாழ்ந்தவனை - இந்த ஒலகம்
      ஒதைக்காம விட்டதில்லை....
      இருக்கும் பொழுதை ரசிக்கணும் - அட
      இன்பமாய் கழிக்கணும்
      எதிலும் துணிஞ்சு இறங்ணும் - நீ
      ஏங்கி எதுக்குத் துடிக்கணும்? (இருக்)
      நாளை நாளை என்று பொன்னான
      நாளைக் கெடுப்பவன் குருடன்
      நடந்து போனதை நெனச்சு ஒடம்பு
      நலிஞ்சு போறவன் மடையன் - சுத்த மடையன்
      நம்மைப்போல கெடச்சதைத் தின்னு
      நெனத்ததைச் செய்யிறவன் மனுஷன் (இருக்)

      ஆடி ஓடி பொருளைத் தேடி......
      அவனும் திங்காம பதுக்கி வைப்பான்....
      அதிலே இதிலே பணத்தைச் சேத்து
      வெளியிடப் பயந்து மறச்சுவைப்பான் ;
      அண்ணன் தம்பி பொண்டாட்டி புள்ளை
      ஆருக்கும் சொல்லாம பொதைச்சு வைப்பான் ;
      ஆகக் கடைசியில் குழியைத் தோண்டி
      அவனையும் ஒருத்தன் பொதச்சு வைப்பான்

      தேடிச் சோறுநிதந் தின்று


      தேடிச் சோறுநிதந் தின்று
      பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
      மனம் வாடித் துன்பமிக உழன்று
      பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
      நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
      கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
      பல வேடிக்கை மனிதரைப் போலே
      நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

      நின்னைச் சில வரங்கள் கேட்பேன்
      அவைநேரே இன்றெனக்குத் தருவாய்
      என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள்
      இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும்
      இனி என்னைப் புதிய உயிராக்கி
      எனக்கேதுங் கவலையறச் செய்து
      மதிதன்னை மிகத் தெளிவு செய்து
      என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!


      வேண்டுமா? பாரதியின் பாடல்கள் உங்களுக்காக.. இங்கே!...

      பள்ளி மாணவர்களுக்கான பாடபுத்தகம்..


      Textbooks published
      by the Department of School Education,
      Govt. of Tamil Nadu, India
      are hosted
      பள்ளி மாணவர்களுக்கான பாடபுத்தகங்களை இங்கே download செய்து கொள்

      புதன், 4 நவம்பர், 2009

      பெரியார் ஈ வே ராமசாமியின் கருத்துகள் மற்றும் புத்தகங்கள்..!





      இந்த புத்தகத்தை பற்றி என் கருத்து

      நான் அறிந்த வரையில், அணைத்து பிரமனர்களையும் குறை கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை, ஏனெனில் சாதி, மதம் மற்றும் மொழிகளை கொண்டு மக்களயோ அல்லது அவரது குணங்களை வகைபடுத்த கூடாது.. எனவே நாம் எப்படி யாரால் அடிமை படுத்த பட்டு இருக்கிறோம் என்பதை ஏற்கிறேன் அனால் அவர்களின் குற்றம் மட்டும் அல்ல நம் அறியமைனாலும் கூட..

      Related Posts Plugin for WordPress, Blogger...