Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

கல்யாண மாலை


கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்

(கல்யாண)

ஸ்ருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

(கல்யாண)

வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது

அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே

நல்ல மனையாளின் நேசமொரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே

(கல்யாண)

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னைச் சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா

நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கு நெஞ்சோடு இருக்கு
சிரிக்காத நாளில்லையே

துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம் போல பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடு தான்...

(கல்யாண)

அழகுக் குட்டிச் செல்லம்



அழகுக் குட்டிச் செல்லம்
உன்னை அள்ளித் தூக்கும் போது
உன் பிஞ்சுவிரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளைக் கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக் கொண்டேன்
நான் திரும்பிப் போக மாட்டேன்

அம்மு நீ…
என் பொம்மு நீ…
மம்மு நீ…
என் மின்மினி…

(அழகுக் குட்டிச் செல்லம்)

உனக்குத் தெரிந்த மொழியிலே
எனக்குப் பேசத் தெரியல‌
எனக்குத் தெரிந்த பாஷை பேச
உனக்குத் தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புதுப்பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

(அழகுக் குட்டிச் செல்லம்)

ரோஜாப்பூ கைரெண்டும்
காற்றோடு கதைபேசும்
உன் பின்னழகில் பெளர்ணமிகள்
தகதிமிதா ஜதிபேசும்
எந்த நேரம் ஓயாத அழுகை
ஏனிந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால்வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டைப் பிடித்துவிட்டான் இப்படி ஓர்
அட்டினக்கால் தோரணை தோரணை

(அழகுக் குட்டிச் செல்லம்)

நீ தின்ற மண்சேர்த்தால்
வீடொன்று கட்டிடலாம்
நீ சிணுங்கும் மொழிகேட்டால்
சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாளம் இல்லாத ரயிலை
தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய்
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒளிந்து ஒளிந்து போக்குக் காட்டி ஓடுகின்ற
கண்ணனே புன்னகை மன்னனே

(அழகுக் குட்டிச் செல்லம்)

படம் : சத்தம் போடாதே
பாடல்: அழகுக் குட்டிச் செல்லம்
எழுதியவர் : நா. முத்து குமார்
பாடியவர் : சங்கர் மஹாதேவன்
இசை : யுவன் சங்கர் ராஜா

பாலூட்டி வளர்த்த கிளி


படம்;கெளரவம்
இசை; எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்; டி.எம்.செளந்தரராசன்

----------------------------------------------
பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
செல்லம்மா எந்தன் செல்லம்மா செல்லம்மா எந்தன் செல்லம்மா

சட்டமும் நானுறைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்
சட்டமும் நானுறைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்
பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பாக்குதடி
பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பாக்குதடி
செல்லம்மா எந்தன் செல்லம்மா
பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
செல்லம்மா எந்தன் செல்லம்மா

நீதிக்கே துணிந்து நின்றேன் நினைத்ததெல்லாம் ஜெயித்து வந்தேன்
நீதிக்கே துணிந்து நின்றேன் நினைத்ததெல்லாம் ஜெயித்து வந்தேன்
வேதனைக்கு ஒரு மகனை வீட்டினிலே வளர்த்து வந்தேன்
வேதனைக்கு ஒரு மகனை வீட்டினிலே வளர்த்து வந்தேன்
செல்லம்மா என்தன் செல்லம்மா செல்லம்மா எந்தன் செல்லம்மா
பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
செல்லம்மா எந்தன் செல்லம்மா

ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த போதனையோ
ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த போதனையோ
தீயினிலே இறங்கி விட்டான் திரும்ப வந்து தாழ்பணிவான்
தீயினிலே இறங்கி விட்டான் திரும்ப வந்து தாழ்பணிவான்
சத்தியம் இது சத்தியம் செல்லம்மா எந்தன் செல்லம்மா
பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
செல்லம்மா எந்தன் செல்லம்மா செல்லம்மா எந்தன் செல்லம்மா

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே

திரைப்படம்: சித்தி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா

-------------------------------------------------
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
பெண்ணாகப் பிறந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம் இறப்பில் மறு தூக்கம்
இப்போது விட்டு விட்டால் எப்போதும் தூக்கமில்லை
என்னரிய கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு

ஆரீராரீரீ ஆரீராராரோ ஆரீஆரீராரோ
ஆரீராரீரீ ஆரீரீஆரோ ஆரீராரீரீரோ

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளு தமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுவதே தீராத தொல்லையடி

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

மாறும் கன்னி மனம் மாறும் கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும் போது தூக்கமென்பதேது?
தான் நினைத்த காதலனை தேற வரும் போது
தான் நினைத்த காதலனை தேற வரும் போது
தந்தை அதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது? கண்ணுறக்கம் ஏது?

மாலையிட்ட தலைவன் வந்து சேலை தொடும் போது
மங்கையரின் தேன் நிலவில் கண்ணுறக்கம் ஏது? கண்ணுறக்கம் ஏது?

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

ஐயிரண்டு திங்களிலும் பிள்ளை பெறும் போதும்
அன்னையென்று வந்த பின்னும் கண்ணுறக்கம் போகும் கண்ணுறக்கம் போகும்
கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து தேடும்
கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து தேடும்
காணாத தூக்கமெல்லாம் தானாக சேரும் தானாக சேரும்

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

ஆரீராரீரீ ராரீராராரோ ஆரீராரீராரோ ஆ
ஆரீராரீரீ ஆரீராராரோ ஆரீராரீராரோ ஆரீராரீராரோ

This feature is powered by Dishant.com - Home of Indian Music

              

எல்லோரும் சொல்லும் பாட்டு


ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னைப் பார்த்து
மேடையே
வையகம் ஒரு மேடையே
வேஷமே
அங்கெல்லாம் வெறும் வேஷமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான்
ரயில் ஸ்நேகமா புயலடித்த மேகமா

கலைந்து வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

(எல்லோரும்)

கோவலன் காதை தன்னில் மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லையென்றால் கண்ணகி ஏது இன்று
மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே
மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவரும் நெஞ்சிலே
எது கூடுமோ எது விலகி ஓடுமோ

மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

(எல்லோரும்)

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்


பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
யாம் ஒரு, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய
உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
அம்மையும் அப்பனும் தந்தடதா
இல்லை ஆதியின் வால் வினை சூழ்ந்ததா
இம்மையை நான் அறியாததா
இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்

ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா,
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருள்ளற்ற வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பத்தால் தாங்குவாய்
உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே.

நினைந்து நினைந்து

திரைப்படம்: சதாரம்
இயற்றியவர்: மருதகாசி
இசை: ஜி. ராமனாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1956
------------------------------------------------------

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே உன்னை
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே

அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போன சிலை ஆனததே - வாழ்க்கை
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போன சிலை ஆனதே - நான்
அடைந்த செல்வம் கொள்ளை போனதே
அடைந்த செல்வம் கொள்ளை போனதே
அமைதியின்றியே அலைய நேர்ந்ததே

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே

எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
துன்ப கீதமே பாடுகின்றாயோ?
எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
துன்ப கீதமே பாடுகின்றாயோ?
இந்த நிலை என்று மாறுமோ?
இந்த நிலை என்று மாறுமோ? உனைக் காணும்
இன்ப நாளுமே வந்து சேருமோ?

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே


This feature is powered by Dishant.com - Home of Indian Music

              

ஆணி முத்து வாங்கி

படம்: பாமா விஜயம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: பி.சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
ஆண்டு: 1967
----------------------------------------------------
ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே
ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே
நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும் நேரமில்லையடியோ
நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும் நேரமில்லையடியோ அடியோ
ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே

எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஏறிட்டு நானதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நானள்ளிச் சூடவில்லை
எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஏறிட்டு நானதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நானள்ளிச் சூடவில்லை
அந்தக் கன்னத்தில் என்னடி முத்து்ம் வண்ணம் இந்தக்
கள்ளத் தனத்தினில் வந்ததடி
வாங்கிக் கொடுத்ததும் தாங்கிப் பிடித்ததும்
முத்துக்கள் போல் வந்து மின்னுதடி
ஒரு முத்து இரு முத்து மும்முத்து நால் முத்து அம்மம்மா
பெண்ணுக்கு எத்தனை முத்தமடி

ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே

ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

மாமன் மக்கள் தேடிய செல்வங்கள் யாருக்கடி?
ஆடிடும் பிள்ளைகள் பேருக்கடி
மிஞ்சிய செல்வங்கள் ஊருக்கடி கையில்
உள்ளதைக் கொண்டிங்கு வாழ்வதிலே
இந்த இல்லத்தில் நிம்மதி வாழுமடி
வீட்டு நலத்துக்கும் நாட்டு நலத்துக்கும்
வேற்றுமை என்பதே இல்லையடி
வீட்டுக்கு பிள்ளைக்கு ஊருக்கு நாட்டுக்கு
பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி

கண்ணுக்கு மையழகு



கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு
கன்னத்தில் குழியழகு
கார்கூந்தல் பெண்ணழகு

இளமைக்கு நடையழகு
முதுமைக்கு நரையழகு
கள்வர்க்கு இரவழகு
காதலர்க்கு நிலவழகு
நிலவுக்கு கரையழகு
பறவைக்கு சிறகழகு

அவ்வைக்கு கூனழகு
அன்னைக்கு சேயழகு

விடிகாலை விண்ணழகு
விடியும் வரை பெண்ணழகு
நெல்லுக்கு நாற்றழகு
தென்னைக்கு கீற்றழகு
ஊருக்கு ஆறழகு ஊர்வலத்தில் தேரழகு
தமிழுக்கு 'ழ'-அழகு
தலைவிக்கு நானழகு

சின்ன தாயவள்


படம் : தளபதி
பாடல் : சின்ன தாயவள்

சின்ன தாயவள் தந்த ரா.........சா..........வே...............
முள்ளில் தோன்றிய சின்ன ரோ.............சா.........வே......
சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யார் யாரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ...... ( சின்ன )

தாய் அழுதாளே நீ..... வர
நீ அழுதாயே தாய் வர
தேய் பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் இந்த
நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை
மெல்ல தாங்கிட
விழி மூ....டா.... தோ.... (சின்ன )

பால் மனம் வீசும் பூ முகம்
பார்க்கையில் பொங்கும் தாய் மனம்
ஆயிரம் காலம் ஊர் வரம்
வேண்டிட வந்த பூ... ச்சரம்
வெயில் வீதியில் வாட கூடுமோ
தேவன் கோவிலை சென்று சேருமோ
எந்தன் தே....னா.....றே..... (சின்ன )

உயிரும் நீயே



படம் : பவித்ரா
பாடல் : உயிரும் நீயே
இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர் : உன்னி கிருஷ்ணன்


உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே.........
உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே

தன் உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே
தன் உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே


உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் மூழ்கும் தாயே.....
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் மூழ்கும் தாயே.....


உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே......... ( உயிரும் )

விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்

பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை

சாமி தவித்தான்...................
சாமி தவித்தான்

தாயை படைத்தான்.. (உயிரும் )

கண்ணின் மணியே


கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா

வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும்
ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்
ஏனென்று கேட்கத்தான் இப்போதும் ஆளில்லை
சமநீதி சேர்க்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை
உலகமெல்லாம் விடிந்த பின்னும் உங்களின் இரவுகள் விடியவில்லை

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள்தானா

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

பாய் விரிக்கும் பாவை என்ன காதல் பதுமைகளா
தினம் ஏவல் செய்ய ஆடவர்க்கு காதல் அடிமைகளா
பாய் விரிக்கும் பாவை என்ன காதல் பதுமைகளா
தினம் ஏவல் செய்ய ஆடவர்க்கு காதல் அடிமைகளா

பொன் அள்ளி வைத்தால்தானே பூமாலை தோளில் ஏறும்
இல்லாத ஏழையர்க்கெல்லாம் பொல்லாத தனிமைக் கோலம்
எரிகின்ற நேரத்தில் அணைக்கின்ற கையில்லை
சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய்யில்லை
கனவுகளில் மிதந்த படி கலங்குது மயங்குது பருவக்கொடி…

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள்தானா

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

மை நேம் இஸ் பில்லா...



மை நேம் இஸ் பில்லா... வாழ்க்கை எல்லாம்....
மை நேம் இஸ் பில்லா வாழ்க்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்லை
போகாத ஊர் இல்லை அய்யா
நல்ல நண்பன் இல்லை என்றால்
எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன் அய்யா ஓ ஓ
ஏ... யாருக்கும் யாரும் சொந்தம் இல்லை
நட்பின் மேல் நம்பிக்கை இல்லை
நேரங்கள் வேதங்கள் கூட
தேவைகள் ஓய்ந்தாலே ஓட
வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் தான் நான் செல்லும் பாதை
சரி என்ன தவறென்ன எவர்க்கும் எது வேண்டும் செய்வோம் (மை நேம்...)

வந்தார்கள் போனார்கள் நேற்று
யாருக்கும் சுவடில்லை இன்று
நீ என்ன நான் என்ன பந்தம்
உறவில்லா உறவில்தான் இன்பம்
மனசுக்கும் அறிவுக்கும் தூரங்கள் இருந்தால்தான் நம்மை
இங்குள்ள எவருக்கும் இடமில்லை இதுதானே உண்மை (மை நேம்...)

எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே



முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா

எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடி கொண்டிரு
இந்த வியர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடி கொண்டிரு
இந்த வியர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே
ஓ ஒ ஒஹோ….ஹே தோழா
முன்னால் வாடா
உன்னால் முடியும்
தல தளபதி தளபதி நீ தான் நீ தான்
அன்பு தலைவா
வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீ தானே!
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடி கொண்டிரு
இந்த வியர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே
நீ இன்றை இழக்காதே நீ இன்றை இழக்காதே
இன்றை விதைத்தால் நாளை முளைக்கும்
அதை நீ மறக்காதே நீ அதை நீ மறக்காதே
நீ அதை நீ மறக்காதே
நேற்று நடந்த காயத்தை எண்ணி
நாயத்தை விடலாமா?
நாயம் காயம் அவனே அறிவான்
அவனிடம் அதனை விட்டுச் செல்
ஹே தோழா
முன்னால் வாடா
உன்னால் முடியும்
தல தளபதி தளபதி நீ தான் நீ தான்
அன்பு தலைவா
வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீ தானே!
ஹே யே யே யே
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடி கொண்டிரு
இந்த வியர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
அவன் நினைந்து மனந்து வைத்தால்
முடியாதது என்பது இல்லை
கடல் போல மழை போல காற்றை போல் பூமி போல்
நீ பெருமை சேருடா
பிறந்தோம் இறந்தோம் சென்றோம்
என்ற வாழ்வை தூக்கி போடுடா
மாணவன் மனது வைத்தால்…….
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடி கொண்டிரு
இந்த வியர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடி கொண்டிரு
இந்த வியர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே
ஹே தோழா
முன்னால் வாடா
உன்னால் முடியும்
ஹே தோழா
முன்னால் வாடா
உன்னால் முடியும்
தல தளபதி தளபதி நீ தான் நீ தான்
அன்பு தலைவா
வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீ தானே!
மாணவன் மனது வைத்தால்…….

போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே



போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே
தெக்கு தெசை ஆண்ட மன்னர் இனம் தான் ஓஹோய்
முக்குலத்த சேர்ந்த தேவர்மகன் தான் ஹோய்

போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே
தெக்கு தெசை ஆண்ட மன்னர் இனம் தான் ஓஹோய்
முக்குலத்த சேர்ந்த தேவர்மகன் தான் ஹோய்

என்ன சொல்ல மண்ணு வளம் டிங் டாங் டிங் டாங் ஹோ
மத்தவங்க கண்ணு படும் டிங் டாங் டிங் டாங் ஹோ
என்ன சொல்ல மண்ணு வளம் மத்தவங்க கண்ணு படும்
அந்த கத இப்ப உள்ள சந்ததிக கேட்க வேண்டும்
நம்உயிருக்கு மேலே மானம் மறியாதை
மானம் இழந்தாலே வாழத் தெரியாதே
பெரிசெல்லாம் சொன்னாக்கா சொன்னபடி நிப்பாங்க
குணத்தால் மனத்தால் கலைமான் ஆனாங்க

போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே
தெக்கு தெசை ஆண்ட மன்னர் இனம் தான் ஓஹோய்
முக்குலத்த சேர்ந்த தேவர்மகன் தான் ஹோய்

முன்னோருக்கு முன்னோர் எல்லாம் டிங் டாங் டிங் டாங் ஹோ
இன்னார் என்று கண்டுகொள்ள டிங் டாங் டிங் டாங் ஹோ
முன்னோருக்கு முன்னோர் எல்லாம் இன்னார் என்று கண்டுகொள்ள
எதுத்து எடுத்து சொல்ல ஒன்னு ரெண்டு மூனு இல்லை
முக்குலத்தார் கல்யாணம்தான் முத்து முத்து கம்பளித்தான்
எக்குலமும் வாழ்த்தி சொல்லும் எங்களுக்கு எக்காலம் தான்
அழகான சரி ஜோடி ஆண மேல அம்பாரி
கணக்கா வழக்கா கடல் போல் ஏராளம்

போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே
தெக்கு தெசை ஆண்ட மன்னர் இனம் தான் ஓஹோய்
முக்குலத்த சேர்ந்த தேவர்மகன் தான் ஹோய்



most beautiful scene i ever liked.

ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே



ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு…
அந்தி பகல்… மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு…

சொந்த வெயிலோடு தான் கொண்ட காதலினை
அதை சொல்லாமல் போனாலும் புரியாதா…
ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு…
அந்தி பகல்… மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு…

காற்றில் ஆடி தினந்தோறும்…
உனது திசையை தொடருதுடா…
குழந்தை கால ஞாபகத்தில்..
இதழ்கள் விரித்தே கிடக்குதுடா….
நெடுநாள்… அந்த நெருக்கம்
எனக்கே அதை கிடக்கும்
சருகுகள் சத்தம் போடும்…
தினம் சூழ்நிலை யுத்தம் போடும்…
அதன் வார்த்தையல்ல மெளனமாகும்…

சொந்த வெயிலோடு தான் கொண்ட காதலினை
அதை சொல்லாமல் போனாலும் புரியாதா…
ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு…
அந்தி பகல்… மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு…

ஆயுள் முழூதும் தவம் கிடந்தே…
ஒற்றை காலில் நிற்குதடா…
மாலை ஆகி தவிழ்ந்திடவே…
உனது மார்பை கேட்குதடா…
பனியில்.. அது கிடக்கும்…
நீயும் பார்த்தால்.. உயிர் கிடைக்கும்…
வண்ணங்களெல்லாம் நீ தான்
அதன் வாசங்களெல்லாம் நீ தான்
நீ விட்டுசென்ற பட்டுபூவும்

சொந்த வெயிலோடு தான் கொண்ட காதலினை
அதை சொல்லாமல் போனாலும் புரியாதா…
ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு…
அந்தி பகல்… மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு…

வா வா என் தேவதையே



படம்: அபியும் நானும்

பாடல்: வா வா என் தேவதையே
இசை: வித்யாசாகர்
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா…. வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார் உதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு நான் இடவா…
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகைப்போல்
யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த
இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு
உள்ளூர மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததுமா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வ மகள் தூங்கயிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கண்டு நடந்த போது இவள்
மிசையில்லாத மகள் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டேன்
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார் உதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு…. நான் இடவா…

தாயின் மணிக்கொடி



படம்
: ஜெய்ஹிந்த்
பாடல்: தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் கொண்ட
கன்னிய பூமி இது

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

வண்ணம் பல வண்ணம்
நம் எண்ணம் ஒன்றல்லோ
பறவைகள் பலவன்றோ
வானம் ஒன்றேன்றோ
தேகம் பலவாகும்
நம் இரத்தம் ஒன்றல்லோ
பாசைகள் பலவன்றோ
தேசம் ஒன்றேன்றோ
பூக்கள் கொண்டு வந்தால்
புண்ணிய தேசமடா
வால்கள் கொண்டு வந்தால்
தலையை வாங்கிடும் தேசமடா
எங்கள் இரத்தம்
எங்கள் கண்ணீர்
இவை இரண்டும் கலந்த எங்கள் ஸ்ரிதமே
இது தீயில் எழுந்து வந்த தேசமே

தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும்
தாயகமே எங்கள் முதல் வணக்கம்

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

சட்டம் நம் சட்டம்
புது வேகம் கொள்ளாதோ
வேகமிருந்தால் தான்
வெற்றிகள் உண்டாகும்
மண்ணில் நம் மண்ணில்
புது சக்தி பிறக்காதோ
சக்தி இருந்தால் தான்
சரித்திரம் உண்டாகும்
சட்டம் கயிறு கொண்டு
நீ ஈடுபிடித்து விடு
சரியா இல்லை என்றால்
அதன் வேரை அறுத்துவிடு
புலி போல் எழுக
புயல் போல் விரைக
அட இளைய இரத்தம் என்ன போலியா
எழுத வேண்டும் புதிய இந்தியா

சுதந்திரத்தை காத்த அனைவருக்கும்
சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம்

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் கொண்ட
கன்னிய பூமி இது

ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

கோட்டையை விட்டு வேட்டைக்கு போகும்



படம்: சின்னதாயி
பாடல்: கோட்டையை விட்டு வேட்டைக்கு போகும்
இசை: இசைஞானி இளையராஜா

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் ஏத்தி காமி

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் …..

கொட்டவேனும் மேளம்…..
கையை கட்ட வேணும் யாரும்….
அஞ்சி நிக்கும் ஊரும்….
அருள்வாக்கு சொல்லும் நேரம்…

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் ஏத்தி காமி

அன்னாடம் நாட்டுல
வெண்டைக்காய் சுண்டைக்காய்
விலையேறி போகுது மார்க்கெட்டுல……..

அன்னாடம் நாட்டுல
வெண்டைக்காய் சுண்டைக்காய்
விலையேறி போகுது மார்க்கெட்டுல……..

அன்னாடம் நாட்டுல
வெண்டைக்காய் சுண்டைக்காய்
விலையேறி போகுது மார்க்கெட்டுல……..

விலையேறி போகுது மார்க்கெட்டுல……..

என்னாட்டம் ஏழைங்க
அதைவாங்கி திங்கத்தான்
துட்டுயில்ல சாமியே பாக்கெட்டுல….

துட்டுயில்ல சாமியே பாக்கெட்டுல….

வீட்டுக்கு வீடு எங்களத்தான்
மரம் ஒன்னு வைக்க சொல்லூறாக

மரமே தான் எங்க வீடாச்சு சாமி
ஏழைங்க வாயை மெல்லூறாக
எல்லாரின் வாழ்வும்
சீராக வேணும் ஒன்னால தான்….
கண்ணால பாரு
வேறாக்கி காட்டு ஒன்னால தான்…..

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் ஏத்தி காமி

ஊர் சுத்தும் சாமியே
நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழையை பார்க்கணுமே

ஊர் சுத்தும் சாமியே
நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழையை பார்க்கணுமே..

ஊர் சுத்தும் சாமியே
நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழையை பார்க்கணுமே..

என்னாட்டம் ஏழையை பார்க்கணுமே..

எல்லோரும் போல் என்னை
நீயும் தான் தள்ளாமே
எந்நாளும் தான் காக்கனுமே
உன்கிட்ட ஓர் வரம் கேட்கனுமே

எப்போதும் காவல் நானிருப்பேன்
என்னென்ன வேணும் நான் கொடுப்பேன்

பொல்லாங்கு பேசும் ஊர் சனம் தான்
புண்ணாக்கி போச்சே என் மனம் தான்

என்னாட்ட சாமி
எல்லோருக்கும் சொந்தம் எப்போதும் தான்….
விண்ணோடு மேயும்
உன்னோடு நானும் எந்நாளும் தான்……….

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் ஏத்தி காமி

கொட்டவேனும் மேளம்…..
கையை கட்ட வேணும் யாரும்….
அஞ்சி நிக்கும் ஊரும்….
அருள்வாக்கு சொல்லும் நேரம்…

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் ஏத்தி காமி

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் ஏத்தி காமி……

என்னம்மா தேவி ஜக்கம்மா



என்னம்மா தேவி ஜக்கம்மா
உலகம் தல கீழா தொங்குது ஞாயமா

என்னம்மா தேவி ஜக்கம்மா
உலகம் தல கீழா தொங்குது ஞாயமா
சின்ன வயசுல சிகரட்ட புடிக்கிறான்
சித்தப்பன் கிட்டையே தீப்பெட்டி கேட்கிறான்
சின்ன வயசுல சிகரட்ட புடிக்கிறான்
சித்தப்பன் கிட்டையே தீப்பெட்டி கேட்கிறான்
பசுமாடும் ஆத்தாவ அம்மான்னு சொல்லுது
பச்ச தமிழனும் மம்மின்னு சொல்லுறான்
(என்னம்மா..)

சந்தன பூமி தந்தகம் ஆச்சு
காத்துக்கு இப்போ திணறுது மூச்சு
மரம் இல்லா ஊருல மழை எங்க பெய்யுது
குளத்துலத்தான் இப்போ கிரிக்கெட்டு நடக்குது
அட விவசாயம் செய்யுன்னா வேணான்னு சொல்லுறான்
வெளிநாடு போயிதான் ஒட்டகம் மெய்க்கிறான்
(என்னம்மா..)

ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா
ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா
ஜக்கம்மா ஜக்கம்மா

கோட்டையில் கொடியெல்லாம் கிழியாம பறக்குது
குமரிப்பொண்ணு துணி கிழிஞ்சுதான் தொங்குது
நத்தைக்கு கூட முதுகுல வீடு
நடைப்பாதை தானே ஏழைக்கு கூடு
அட சாமிக்கு வளைகையில மனசார கும்பிட்டோம்
சாக்கடை அள்ளுற கைகளை விட்டுட்டோம்
(என்னம்மா..)

படம்: தம்பி
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: கார்த்திக், மாணிக்க விநாயகம்

வீடு மனைவி மக்கள்

படம்: வீடு மனைவி மக்கள்
பாடியவர்: பாலு
இசை: சங்கர் கனேஷ்
இயக்குநர்: விசு


வீடு மனைவி மக்கள்
மூன்றும் வாழ்வில் சிக்கல்
கற்பனை கலைந்ததடா
கனவுகள் முறிந்ததடா
விதைப்பவன் மனிதனடா
அறுப்பவன் ஒருவனடா

வீடு மனைவி மக்கள்
மூன்றும் வாழ்வில் சிக்கல்

ஆயிரம் காலத்து பயிரொன்று இன்று
அறுவடை ஆனது
விதைத்தவன் வாழ்க்கை கண்ணீரில் நீராடுது
உதிரத்தில் பிறந்த குருவிகள் எல்லாம்
உறவை மறந்தது
சொந்த என்ற வீட்டில் கடல் மீது மழையானது
ஓவியம் வாங்கி வந்தாள் கண்களை காணவில்லை
தேரொன்று வாங்கி வந்தான் பாதையை காணவில்லை
பூஜைகள் செய்ய வந்தான் கோவிலை காணவில்லை

வீடு மனைவி மக்கள்
வீடு மனைவி மக்கள்

கூறைக்கு வாங்கிய மூங்கிலில்
இன்று கொள்ளியா வைப்பது
பொட்டு மட்டும் வைத்தேன்
வேறென்ன நீ கண்டது
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
வாழ்க்கை தான் போனது
ஏழையின் சொந்தம் எப்போதும் தப்பானது
கூடு ஒன்று முடியும் முன்னே குருவி பறந்ததடா
குருவி பறந்ததனால் கூடும் சரிந்ததடா
பல்லவி தொடங்குமுன்னே உன் சரணம் முடிந்ததடா

வீடு மனைவி மக்கள்
மூன்றும் வாழ்வில் சிக்கல்
கற்பனை கலைந்ததடா
கனவுகள் முறிந்ததடா
விதைப்பவன் மனிதனடா
அறுப்பவன் ஒருவனடா

வீடு மனைவி மக்கள்
வீடு மனைவி மக்கள்


     Get this widget |     Track details  |         eSnips Social DNA   
Related Posts Plugin for WordPress, Blogger...