உங்களைப் போலில்லாமல் நான் நானாகவே இருக்கிறேன் உங்கள் மிதமான புன்முறுவலில் உங்கள் மீதான விமர்சனங்களைத் தெரிவிக்க மறுந்துவிடுகிறேன் என்மீதுதான் உங்களுக்கு எத்தனை அக்கறையென்று நமக்கிடையேயான பொது நண்பர்களிடம் புளகித்துப் பேசுகிறேன் நீங்கள் சாட்டைகொண்டு வருபவராயினும் நான் சலாம் வைக்கத் தவறுவதில்லை என்னை நீங்கள் என்னவாக புரிந்திருப்பீர்கள் என்று ஒருபோதும் யோசிப்பதில்லை நட்பைக் கொண்டாடி பழகியதாலும் அந்த நட்புக்குள் முளைவிடும் கள்ளிச்செடிகளைக் கண்ணுறுவதில்லை ஆம் என் அத்யந்த நண்பர்களே உங்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன் என் பிரார்த்தனை மூலமாவது நீங்களும் நானும் இப்போது போல எப்போதுமிருக்க விரும்புகிறேன் நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்போல் இருக்க நினைத்து இல்லாமல் போகாதீர்கள்
பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன் எதை நீ தொலைத்தாலும் மனதைத் தொலைக்காதே அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா.... (பேசுகிறேன்..)
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் இளைப்பாற மரங்கள் இல்லை கலங்காமலே கண்டம் தாண்டுமே.. ஓஹோ முற்றுப்புள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே.... வளைவில்லாமல் மலை கிடையாது வலியில்லாமல் மனம் கிடையாது வருந்தாதே வா..... அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..
காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை தன்னைக் காக்கவே தானாய் வளருமே பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம் பெண்ணே கொஞ்ச நேரம்தானே உன்னைத் தோண்டினால் இன்பம் தோன்றுமே விடியாமல்தான் ஓர் இரவேது வடியாமல்தான் வெள்ளம் கிடையாது வருந்தாதே வா... அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா.. (பேசுகிறேன்..)
படம்: சத்தம் போடாதே இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்: நேகா பேசின்
நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும் தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும் காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை என்றென்றும் வானில்
.......... நிலா காய்கிறது .........
அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள் இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள் இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள் இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்
.......... நிலா காய்கிறது .........
படம் : இந்திரா இசை : ஏ.ஆர். ரஹ்மான் பாடியவர் : ஹரிணி / ஹரிஹரன் வரிகள் : வைரமுத்து
ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி என் கண்மணி! ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு கண்மணி என் கண்மணி! (2)
பச்சை குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன் பாலக் குடிச்சுபுட்டு பாம்பாகக் கொத்துதடி!
(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)
ஏது பந்தபாசம்? எல்லாம் வெளி வேஷம்! காசு பணம் வந்தா நேசம் சில மாசம்! சிந்தினேன்.. ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண் தானோ? வேப்பிலை கருவேப்பிலை அது யாரோ நான் தானோ? என் வீட்டு கன்னுக்குட்ட, என்னோட மல்லுக்கட்டி, என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி! தீப்பட்ட காயத்துல தேள் வந்து கொட்டுதடி கண்மணி..... கண்மணி!
(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)
நேத்து இவன் ஏணி இன்று இவன் ஞானி! ஆளைக் கரை சேர்த்து ஆடும் இந்தத் தோணி! சொந்தமே ஒரு வானவில் அந்த வண்ணம் கொஞ்ச நேரம்! பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம்! பணங்காசக் கண்டுபுட்டா புலிகூடப் புல்லைத் தின்னும் கலி காலாமாச்சுதடி கண்மணி என் கண்மணி! அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போச்சுதடி கண்மணி..... கண்மணி!
(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)
படம் : படிக்காதவன் இசை: இளையராஜா பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ் பாடல் : வைரமுத்து
தாயே... என் தாயே! நான் மீட்ட சோலே! அறுத்த கொடியே குடித்த முதல் முலையே என் மனையாளின் மானசீகச் சக்கரவர்த்திசரண் தகப்பா – ஓ – தகப்பா நீ என்றோ உதறிய மை படர்ந்தது கவிதையாய் இன்று புரியா வரி இருப்பின் கேள்... பொழிப்புரை நான் சொல்கிறேன் தமையா – ஓ – தமையா என் தகப்பனின் சாயல் நீர் அச்சகம் தான் ஒன்றிங்கே – அர்த்தங்கள் வெவ்வேறு தமக்காய் – ஓ – தமக்காய் தோழி... தொலைந்தே போனாயே – துணை தேடிப் போனாயோ... மனைவி – ஓ – காதலி நீ தாண்டாப் படியெல்லாம் நான் தாண்டக் குமைந்திடுவாய் சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும்வரை. மகனே – ஓ – மகனே என் விந்திட்ட விதையே... செடியே... மரமே... காடே... மறுபிறப்பே மரண சௌகர்யமே... வாழ்... மகளே – ஓ – மகளே... நீயும் என் காதலியே... எனதம்மை போல் எனைப் பிரிந்தும் நீ இன்பம் காண்பாயோ... காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயோ... நண்பா – ஓ – நண்பா... நீ செய்த நட்பெல்லாம் நான் செய்த அன்பின் பலன் இவ்விடம் அவ்விதமே. பகைவா – ஓ – பகைவா... உன் ஆடையெனும் அகந்தையுடன் என் அம்மணத்தைக் கேலி செய்வாய் நீ உடுத்து நிற்கும் ஆடைகளே உனதம்மணத்தின் விளம்பரங்கள் மதமென்றும் குலமென்றும் நீ வைத்த துணிக்கடைகள் நிர்மூலமாகிவிடும் நிர்வாணமே தங்கும் வாசகா – ஓ – வாசகா... என் சமகால சகவாசி வாசி... புரிந்தால் புன்னகை செய் புதிர் என்றால் புருவம் உயர்த்து பிதற்றல் எனத் தோன்றின் பிழையும் திருத்து... எனது கவி உனதும்தான் ஆம்... நாளை உன்வரியின் நான் தெரிவேன்.
சரியாகச் சொன்னால் 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் உனக்கொரு காதல் கடிதம்.
உன் விலாசம் எப்படியும் மாறும் என்ற காரணத்தினாலோ என்னவோ உனது விலாசத்தை காதலி என்பதோடு அன்று விஸ்தீரணம் செய்யாது விட்டுவிட்டேன். காதலி... மீண்டும் உனக்கொரு கடிதம். நான் முன்பு எழுதிய கடிதம்உனக்கல்ல எனினும் இத்துடன்அதையும் இணைத்துள்ளேன். காதல் ரிஷிகளின் மூலம் பார்ப்பதுஅனாசாரமாகாது. பார்த்துப் புரிந்துகொள்.பழைய கடிதத்தின் சொந்தக்காரியிடம் இந்தக் கடிதத்தைக் காண்பிக்க வேண்டியஅவசியமில்லை. அவளுக்கு ஆர்வமும் இருக்க வாய்ப்பில்லை. காதல் மாறாதது என்பது உண்மை. ஆள் மாறினாலும் இல்லாள் மாறினாலும் காதல்மாறுவதில்லை. கூடி வாழ்வதும் காதலில் கூடுவதும் இருவேறு நிலைகள்.அவள் என்னவள் அவன் என்னவன் எனஅறம் என்ற பெயரால் அடையாளச்சூடு வைக்கும் மிருகத்தனம் மனிதனுக்கே உரித்தானது. நமது ஆறாவது உணர்வைபோற்று. பண்டிதர்கள் மெதுவாகஉறுதியான மற்ற ஐந்து உணர்வுகளின்உத்வேகம் குறைந்து வருவதை உணர மறுக்கிறார்கள். அந்த மறுப்பில்என் (நம்) காதலும் சிக்குண்டுதவிக்கிறது. மௌன விரதம் பூண்டவர்கள் சமிக்ஞை செய்து கவிதையை வைக்கிறார்கள். நான் காதலன் கவிஞன் ஆதலால் காதலால் மீண்டும்உனக்கொரு கடிதம். இதில் மறுபடியும் விலாசமில்லாமல் விட்டிருப்பதுவிபத்தல்ல நீ விலாசத்தை மாற்றிக்கொண்டே யிருக்கிறாய் நான் என்ன செய்ய? அதே நான்தான், நீ மட்டும் வேறு!
உன்னை யாம் தலைமைக்கு உயர்த்தியதால் நீ எம்மிற் சிறந்தவன் எனப் பொருள் கொள்ளாதே அப்பொருளை ஏற்கும் பணிவு எமக்கில்லை என உணர். எம் மொழி எம் நிறம் என்ற விசாலமற்ற அன்பு காரணமாக,எவ்வழி எனத் தெரியாமலே எமை நடத்திச் செல்லப் பணிந்தோம் உன்னை. இக்கடிவாளங்களும், சேணங்களும், எமக்குப் பொருந்தச் செய்யப்பட்டவை அல்ல.அவை எமது நாட்டுத் தயாரிப்பல்ல. எமது அளவல்ல. வேறுமட்டக் குதிரைகளின் அளவு. எமது வாய் சிறிதுஇவ்வமைப்பில், யாம் எக்கணம் நினைப்பினும் தலையை உருவிக் கொண்டோடுவோம்பிழையாகப் பூட்டப்பட்ட எமது கடிவாளத்தில் இருந்து மீண்டு. வலது வார்பட்டையை இழுத்தால் இன்று இடதுபுறம் திரும்புவோம்ஓர் சிலிர்ப்பில் அகலும் கண்மறைப்பான்கள்.அப்போது தென்படுமே வெவ்வேறு பாதைகள்!அவற்றில், எவற்றிற்கு யாம் பாதசாரிகள்?எமக்கும் தெரியாது உனக்கும் தெரியாது. நீ அமர்ந்திருக்கும் பீடத்தின் அசௌகரியம், விபத்தல்ல.யாமதை அமைத்ததே அப்படி. நீ உறங்கிவிடாதிருக்க, ஓரிடம் அமர்ந்து விடாதிருக்க, யாம் வடித்த பீடமது. உன்னை அதில் ஏற்றுவதில் யாம் காட்டிய ஆர்வத்தை மிகும்,உன்னை வீழ்த்துவதில் யாம் காட்டப்போவது. தனித்திருத்தல் விழித்திருத்தல், ஒரு புறமிருக்கட்டும். எம்மைப் போல் பசித்தும் இருக்கக் கல். நாயகம் எமதா? உனதா?என்ற சந்தேகத்திற்கிடமின்றி, இது எமது நாயகம். இடது வாரை இழுத்துப்பார், வலது புறம் திருப்புவோம்; இந்த அமைப்பும், எமக்கும் உனக்கும், சாஸ்வதமில்லை;மாறும், ஏதேனும் ஒரு விபத்தின் மூலம்.
காமமெனப்படும் பண்டைச் செயலில் காதல் கலவாது காத்துக்கொள் இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்று இயற்றத் துணியும் அணி சேர்த்துக்கொள்.
கலவி செய்கையில் காதில் பேசி கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும் வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும் குழந்தை வாயை முகர்ந்தது போலக் கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்
காமக் கழிவுகள் கழுவும் வேளையும் கூட நின்றவன் உதவிட வேண்டும் சமயலின் போதும் உதவிட வேண்டும் சாய்ந்து நெகிழ்ந்திடத் திண்தோள் வேண்டும்
மோதிக் கோபம் தீர்க்க வசதியாய் பாறைப் பதத்தில் நெஞ்சும் வேண்டும் அதற்குப் பின்னால் துடிப்புள்ள இதயமும் அது ரத்தம் பாய்ச்சி நெகுழ்திய சிந்தயும் மூளை மடிப்புக்கள் அதிகம் உள்ள மேதாவிலாச மண்டையும் வேண்டும்
வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும் நேர்மை வேண்டும் பக்தியும் வேண்டும் எனக்கெனச் சுதந்திரம் கேட்கும் வேளையில் பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்
இப்படிக் கணவன் வரவேண்டும் என ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன் வரந்தருவாள் என் வரலட்சுமியென கடும் நோம்பு முடிந்ததும் தேடிப் போனேன்
பொடி நடைபோட்டே இடை மெலியவெனக் கடற்கரை தோறும் காலையும் மாலையும் தொந்தி கணபதிகள்திரிவது கண்டேன் முற்றும் துறந்து மங்கையரோடு அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்
மூத்த அக்காள் கணவனுக்கு முக்கால் தகுதிகள் இருந்தும் கூட அக்காளில்லா வேளையிலே அவன் சக்காளத்தி வேண்டும் என்றான் எக்குலமானால் என்ன என்று வேற்று மதம் வரை தேடிப்போனேன்
வரவரப் புருஷ லட்சணம் உள்ளவர் திருமணச் சந்தயில் மிகமிகக் குறைவு வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு வீட்டுக்காரர் அமைந்தது எப்படி? நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது? உறங்கிக் கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன் ஆள் எப்படி? பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடப்பது உண்டோ? அதுவும் இதுவும் உதுவும் செய்யும் இனிய கணவர் யார்க்குமுண்டோ? உனக்கேனுமது அமையப்பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான் நீ அதுபோல் எனக்கும் அமையச் செய்யேன் ஸ்ரீ வரலக்ஷமி நமோஸ்துதே
பிரதிபிம்பம் பழங்கனவு மறந்த என் மழலையின் மறுகுழைவு மகளே உனக்கு என் மூக்கு என் நாக்கு!
என் தாய் பாடித் தூங்கவைத்த தாலாட்டு தினம் உனக்காய் நான் படிப்பேன் என் குரலில் பாசத்தில் எனைப் பெற்றோர் செய்த தவறெல்லாம் தவறாமல் நான் செய்வேன் என் ரத்தம் எனது சதை எனக் கூவி உன் சித்தம் உன் போக்கை இகழ்ந்திடுவேன் உன் போக்கு இதுதான் என நீ மறுக்க உடைந்த மனதுடனே மூப்பெய்வேன் என் அப்பனைப் போல்!
அன்று - சாய் நாற்காலியில் வரப்போகும் கவிதைகளை இன்றே நான் எழுதிவிட்டால் அன்று - நான் பேசலாம் உன்னோடு
காக்க ஒரு கனக (AK) 47 நோக்கவும் தாக்கவும் ஒரு நொடி நேரம் தோற்கவும் அதே கண நேரம்தான் ஈயம் துளைத்துக் கசிந்து சிவந்த காயம் தொட்டுக் கையை நனைத்து விண்ணே தெரிய மண்ணில் சாய்ந்தேன் முன் காக்க மறந்த அமைதியைக் காத்து. மாட்டுத் தோலில் தாய்மண் அறைபட பூட்ஸுக் கால்களால் கடந்தனர் பகைவர். விட்ட இடத்தில் கதையைத் துவங்கச் சட்டென இன்னொரு குழந்தை பிறக்கும் அதுவரை பொறுத்திரு தாயே, தமிழே உதிரம் வடியும் கவிதை படித்து…
கடவுள் பாதி.. மிருகம் பாதி...... கலந்து செய்த கலவை நான்.....
வெளியே மிருகம்... உள்ளே கடவுள்... விளங்க முடியா கவிதை நான்.....
மிருகம் கொன்று.... மிருகம் கொன்று.... கடவுள் வளர்க்கப்பார்க்கின்றேன்..... - ஆனால்...
கடவுள் கொன்று... உணவாய் தின்று.. மிருகம் மட்டும் வளர்கிறதே..........
நந்தகுமாரா... நந்தகுமாரா... நாளை மிருகம்.. கொல்வாயா...? மிருகம் கொன்ற....... எச்சம் தின்று....... மீண்டும் கடவுள் செய்வாயா...? குரங்கிருந்து மனிதன் என்றால் மனிதன் இறையாய் ஜனிப்பானா..? மிருக ஜாதியில் பிறந்த மனிதா.. தேவ ஜோதியில் கலப்பாயா..?
நந்தகுமாரா.......................
கடவுள் பாதி.. மிருகம் பாதி...... கலந்து செய்த கலவை நான்.....
வெளியே மிருகம்... உள்ளே கடவுள்... விளங்க முடியா கவிதை நான்.....
மிருகம் கொன்று.... மிருகம் கொன்று.... கடவுள் வளர்க்கப்பார்க்கின்றேன்... கடவுள் கொன்று... உணவாய் தின்று.. மிருகம் மட்டும் வளர்கிறதே..........!
கடவுள் பாதி.. மிருகம் பாதி...... கலந்து செய்த கலவை நான்..... காற்றில் ஏறி... மழையில் ஆடி... கவிதை பாடும் பறவை நான்.....!
கடவுள் பாதி.. மிருகம் பாதி...... கலந்து செய்த கலவை நான்..... காற்றில் ஏறி... மழையில் ஆடி... கவிதை பாடும் பறவை நான்.....!
ஒவ்வொரு துளியும்... ஒவ்வொரு துளியும் உயிரின் வேர்கள் குளிர்கிறதே...
எல்லா துளியும் குளிர்கிறபோது இரு துளி மட்டும் சுடுகிறதே.....?
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர் உண்பது நாழி உடுப்பது இரண்டே உறைவிடம் என்பது ஒன்றேயென உரைத்து வாழ்ந்தோம்... உழைத்து வாழ்வோம்....
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் நன் மொழியே நம் பொன் மொழியாம்
போரைப் புறம் தள்ளி பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழி காட்டும் அன்பு மொழி அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்... செம்மொழியான தமிழ் மொழியாம்... செம்மொழியான தமிழ் மொழியாம்... செம்மொழியான தமிழ் மொழியாம்...
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்...
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்...
ஓல்காப் புகழ் தொல்காப்பியமும் ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும் சிந்தாமணியுடனே
வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான தமிழ் மொழியாம்... செம்மொழியான தமிழ் மொழியாம்... செம்மொழியான தமிழ் மொழியாம்... செம்மொழியான தமிழ் மொழியாம்...
கம்ப நாட்டாழ்வாரும் கவியரசி அவ்வை நல்லாளும் எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும் புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி
செம்மொழியான தமிழ் மொழியாம்... செம்மொழியான தமிழ் மொழியாம்... செம்மொழியான தமிழ் மொழியாம்...
அகமென்றும் புறமென்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனியமொழி
ஓதி வளரும் உயிரான உலக மொழி... ஓதி வளரும் உயிரான உலக மொழி... நம்மொழி நம் மொழி... அதுவே
செம்மொழியான தமிழ் மொழியாம்... தமிழ் மொழி... தமிழ் மொழி... தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்... செம்மொழியான தமிழ் மொழியாம்... செம்மொழியான தமிழ் மொழியாம்... செம்மொழியான தமிழ் மொழியாம்...
தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்... தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்...
பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா
(பூவே)
அழைப்பு மணி இந்த வீட்டில் கேட்டாலும் ஒடி நான் வந்து பார்ப்பேன் தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்த்தேன் கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது தீப தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய் இந்த கண்ணில் சோகமில்லை இன்று ஆனந்தம் தந்தாய் பேத்தி என்றாலும் நீயும் என் தாய்
(பூவே)
காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும் தங்கம் கருக்காது தாயே பொன்முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன் இந்தப் பொன் மானை பார்த்துக் கொண்டே சென்று நான் சேர வேண்டும் மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் நீ என் மகளாக வேண்டும் பாச ராகங்கள் பாட வேண்டும்
பெண் குரல்:- கடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடவோ தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வமன்றி யாரும் இல்லை
குழு: தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வமன்றி யாரும் இல்லை
பெண் குரல்: சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா
குழு: ஊனம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா
பெண் குரல்: ஜீவன் யாரும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே
குழு: ஜீவன் யாரும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே
பெண் குரல்: இது தான் இயற்கை தந்த பாசபந்தமே, கண்ணிழந்த பிள்ளை ஆனால் உன்னை
கண்ணீருக்கும் பேர்கள் கண்டது இல்லை! ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்
குழு: ஆளுக்கொரு ஜாதியில்லையே அது போல் உயிர் பிறப்பில்!
பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் 30 நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில் முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில் இது எப்படி எப்படி நியாயம் எல்லாம் காதல் செய்த மாயம் (இது எப்படி..) (பூவுக்கெல்லாம்..)
நிலவை பிடித்து எறியவும் முடியும் நீல கடலை குடிக்கவும் முடியும் காற்றின் திசையை மாற்றவும் முடியும் கம்பனை முழுக்க சொல்லவும் முடியும் ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே ஐயோ என்னால் முடியவில்லை சுற்றும் உலகின் விட்டம் தெரியும் சூரியன் பூமி தூரமும் தெரியும் கங்கை நதியின் நீளமும் தெரியும் வங்க கடலின் ஆழமும் தெரியும் காதல் என்பது சரியா தவறா இதுதான் எனக்கு தெரியவில்லை
ஒற்றை பார்வை உயிரை குடித்தது கற்றை குழல் கையீடு செய்தது மூடும் ஆடை முத்தமிட்டது ரத்தமெல்லாம் சுண்டிவிட்டது ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே ஐயோ என்னால் முடியவில்லை மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது மீண்டும் சோலை கொழுந்துவிட்டது இதயம் இதயம் மலந்ர்துவிட்டது இசை என் கதவு திறந்துவிட்டது காதல் என்பது சரியா தவறா இதுதான் எனக்கு தெரியவில்லை (பூவுக்கெல்லாம்..)
ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு அடை காக்கிற கோழியப் போலவே இந்த கூட்டைக் காப்பது யாருங்க அழகான அம்மனப் போலவே இங்க அப்பத்தாவப் பாருங்க
பாசமான புலிங்க கூட பத்து நாள் தூங்கலாம் பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம் (ஆயிரம்..)
வீரபாண்டித் தேரப் போல இந்த வீட்டப் பாரு பாரு வீரமான வம்சத்தாளு இவங்களப் போல யாரு சித்தப்பாவின் மீசையைப் பார்த்தா சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும் சித்தியோட மீன் குழம்புக்கு மொத்த குடும்பம் அடங்கும் கோழி வெரட்ட வைரக்கம்மல் கழட்டிதானே எறிவாங்க திருட்டுபயல புடுச்சுக்கட்ட கழுத்துச் செயின் அவுப்பாங்க
சொந்த பந்தம் கூட இருந்தா நெருப்புல நடக்கலாம் வேலு அண்ணன் மனசுவச்சா நெருப்பையே தாண்டலாம் (ஆயிரம்..)
சொக்கம்பட்டி ஊருக்குள்ள ஓடுதொரு ஆறு ஆறு ஆத்துக்குள்ள ஐரமீனும் சொல்லுது ஒன் பேரு சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி சொல்லும் தாத்தாவோட பேரு வாசக்கதவு தொரந்தே இருக்கும் வந்த சொந்தம் திரும்பும்பாது வேட்டையாடப் போனா ஐயா நூறு சிங்கம் புடிப்பாரு
பாசமான புலிங்க கூட பத்து நாள் தூங்கலாம் பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்
ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
படம்: வேல் இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்கள்: ப்ரேம்ஜி, ராகுல், வடிவேலு
பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ சூடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை கூட்டை தான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை வானவில்லை போலே இளமையடா தினம் புதுமையடா அதை அனுபவிடா காலம்காலமாக பெரிசுங்கடா ரொம்ப பழசுங்கடா நீ முன்னே முன்னே வாடா வாடா
பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ
எட்டித்தொடும் வயது இது ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும் அதிசயம் என்னவென்றால் அதன் இருபக்கம் கூரிருக்கும் கனவுக்கு செயல் கொடுத்தால் அந்த சூரியனில் செடி முளைக்கும் புலன்களை அடக்கி வைத்தால் தினம் புதுப்புது சுகம் கிடைக்கும் காலில் குத்தும் ஆணி உன் ஏணி என்று காமி பல இன்பம் அள்ளிசேர்த்து ஒரு மூட்டை கட்டி வா நீ வா நீ வா
பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ
இதுவரை நெஞ்சிலிருக்கும் சில துன்பங்களை நாம் மறப்போம் கடிகார முள் தொலைத்து தொடுவானம் வரை போய் வருவோம் அடைமழை வாசல் வந்தால் கையில் குடையின்றி வா நனைவோம் அடையாளம் தான் துறப்போம் எல்லா தேசத்திலும் போய் வசிப்போம் என்ன கொண்டு வந்தோம் நாம் என்ன கொண்டு போவோம் அட இந்த நொடி போதும் வா வேற என்ன வேண்டும் வேண்டும்
பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ
சூடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை கூட்டை தான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை வானவில்லை போலே இளமையடா தினம் புதுமையடா அதை அனுபவிடா காலம்காலமாக பெரிசுங்கடா ரொம்ப பழசுங்கடா நீ முன்னே முன்னே வாடா வாடா
வா வா நிலவ புடிச்சி தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா ஓ ஹோ விடியும்போது தான் மறைஞ்சி போகுமோ கட்டிப்போடு மெதுவா
வா வா நிலவ புடிச்சி தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா ஓ ஹோ விடியும்போது தான் மறைஞ்சி போகுமோ கட்டிப்போடு மெதுவா
வானத்தில் ஏறி ஏணிக்கட்டு மேகத்தை அள்ளி மாலைக்கட்டு வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு ஓஹோ… ஹோ.. ஹோ… ஓஹோ… ஹோ.. ஹோ…
வா வா நிலவ புடிச்சி தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா ஓ ஹோ விடியும்போது தான் மறைஞ்சி போகுமோ கட்டிப்போடு மெதுவா — கவலை நம்மை சிலனேரம் கூறுப்போட்டு துண்டாக்கும் தீயினை தீண்டி வாழும்போதே தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்
கடலை சேரும் நதியாவும் தன்னை தொலைத்து உப்பாகும் ஆயினும்கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும்
ஒரு வட்டம் போலே வாழ்வாகும் வாசல்கள் இல்லா கனவாகும்
அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை புரிந்தால் துயரம் இல்லை —- வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு ஓஹோ… ஹோ.. ஹோ… ஓஹோ… ஹோ.. ஹோ…
வா வா நிலவ புடிச்சி தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா ஓ ஹோ விடியும்போது தான் மறைஞ்சி போகுமோ கட்டிப்போடு மெதுவா
கன்வில் நீயும் வாழதே கலையும் போது வருந்தாதே கனவில் பூக்கும் பூக்கள் எல்லாம் கைகளில் பறித்திட முடியாதே
அந்த வானம் போலே உறவாகும் மேகங்கள் தினமும் வரும் போகும் அட வந்து போனால் மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும் —- வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு ஓஹோ… ஹோ.. ஹோ… ஓஹோ… ஹோ.. ஹோ…
படம் : நான் மகான் அல்ல இசை : யுவன் ஷங்கர் ராஜா பாடலாசிரியர்: நா.முத்துகுமார் பாடியவர்கள் : ராகுல் நம்பியார் வெளியான ஆண்டு : 2010
Babe... Tell me you love me I hope I hear it While I'm alive
காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன் என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய கரையில் கரைந்து கிடக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக மனம் வெட்டவெளியிலே வாடுதடி (சுட்ட...)
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து கடல் நீர் மட்டம் கூடுதடி.. காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன் என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய கரையில் கரைந்து கிடக்கிறேன் உயிரைத் தவிர சொந்தம் இல்லையே காதலிக்கும் முன்பு இந்த உலகே எந்தன் சொந்தமானதே காதல் வந்த பின்பு
Babe.. Tell me you love me It's never late.. Dont hesistate
சாவை அழைத்து கடிதம் போட்டேன் காதலிக்கும் முன்பு ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன் காதல் வந்த பின்பு
உன்னால் என் கடலலை உறங்கவே இல்லை உன்னால் என் நிலவுக்கு உடல் நலமில்லை கடல் துயில் கொள்வதும் நிலா குணம் கொள்வதும் நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி.. உன் இறூக்கம்தான் என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன் என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய கரையில் கரைந்து கிடக்கிறேன் என் கண்ணீர்..
பிறந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை காணும் முன்பு நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன் உன்னைக் கண்ட பின்பு அன்னை தந்தை கண்டதில்லை நன் கண் திறந்த பின்பு என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன் உன்னை கண்ட பின்பு பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை அதற்க்குள் அது முடிவதா விளங்கவே இல்லை நான் கரையாவதும் இல்லை நுரையாவதும் வளர் பிறையாவதும் உன் சொல்லில் உள்ளதடி உன் இறுக்கம்தான் என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி.. காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன் என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய கரையில் கரைந்து கிடக்கிறேன்
காதல் வந்தால் சொல்லி அனுப்பு காதல் வந்தால் சொல்லி அனுப்பு சொல்லி அனுப்பு சொல்லி அனுப்பு
படம்: இயற்கை இசை: வித்யாசாகர் பாடியவர்: திப்புபாடலாசிரியர்: வைரமுத்து
ஒ மனமே ஒ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ? ஒ மனமே ஒ மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ? மழையை தானே யாசித்தோம் கண்ணீர் துளிகளை தந்தது யார் ? பூக்கள் தானே யாசித்தோம் கூலான் கற்களை எரிந்தது யார் ? ஒ மனமே ஒ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ? ஒ மனமே ஒ மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ? மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து வானத்தில் உறங்கிட ஆசையடி நம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து முள்ளுக்குள் எரிந்தது காதலடி கனவுக்குள்ளே காதலை தந்தாய் கணுக்கால் தோரும் முத்தம் கனவு கலைந்து எழுந்து பார்த்தல் கைகள் முழுக்க ரத்தம் துளைகள் இன்றி நாயனமா ? தோல்விகள் இன்றி பூரணமா ? ஒ மனமே ஒ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ? ஒ மனமே ஒ மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ? இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை இன்பம் பாதி துன்பம் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம் நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் நகையாய் மாறும் தங்கம் தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி வெற்றிக்கு அதுவே ஏணியடி ஒ மனமே ஒ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ? ஒ மனமே ஒ மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ? மழையை தானே யாசித்தோம் கண்ணீர் துளிகளை தந்தது யார் ? பூக்கள் தானே யாசித்தோம் கூலான் கற்களை எரிந்தது யார் ?
i wanna move with you boy one more time i wanna move with you boy one more time
அடடா வா அசத்தலாம்
I wanna fly with you boy one more time I wanna fly with you boy one more time
போடா டேய் வாழ்க்கை ஒரு பூக்கூடைதான் யார் கையில் வேணும்னாலும் பூ பூக்கும்தான்
அடடா வா அசத்தலாம்
i wanna move with you boy one more time i wanna move with you boy one more time
அடடா வா அசத்தலாம்
I wanna fly with you boy one more time I wanna fly with you boy one more time
எதுவந்தா எனக்கு என்ன ஒதுங்காத நானும் சொன்னா
I wanna get so hot and naughty with you ohh... hO
கொண்டாடா வாழ்க்க கொண்டாடா வாழ்கைக்கு வகுப்பு உண்டாடா
I wanna get so hot and naughty with you ohh hO
hO heyy heyy heyyy
சிறகு இருக்கும் போதிலும் நடக்கும் பறவை நானில்ல வாழ்க்கை முழுக்க வாழ்ந்திட பூமி எனக்கு போதல ஆகட்டும் பார்ப்போம்
come close to baby Let me drive you crazy
ஆடித்தான் தீர்ப்போம்
Oh come touch me baby Boy I feel so sexy
போடா டேய் வாழ்க்கை ஒரு பூக்கூடைதான் யார் கையில் வேணும்னாலும் பூ பூக்கும்தான்
அடடா வா அசத்தலாம்
i wanna move with you boy one more time i wanna move with you boy one more time I wanna fly with you boy one more time I wanna fly with you boy one more time படம்: சர்வம் இசை: யுவன் சங்கர் ராஜா பாடியவர்: இளையராஜா