Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)
audio லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
audio லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 ஏப்ரல், 2011

தெய்வம் வாழ்வது எங்கே



வானம்.. வானம்..

தெய்வம் வாழ்வது எங்கே, தெய்வம் வாழ்வது எங்கே
தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்..
காதலினால் மூடிவிட்ட, கண்கள் இன்று திறக்கிறது..
திறந்தவுடன் வழியுது கொஞ்சம் கண்ணீர்..
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..

தெய்வம் வாழ்வது எங்கே, தெய்வம் வாழ்வது எங்கே
தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்..
காதலினால் மூடிவிட்ட, கண்கள் இன்று திறக்கிறது..
திறந்தவுடன் வழியுது கொஞ்சம் கண்ணீர்..

அடுத்தவன் கண்ணில் இன்பம்.. காண்பதும் காதல் தான்..
இனி இவன் நெஞ்சில் இல்லை பாரம்.. ஒ..
தனக்காக வாழாத வழக்கை..
விதி ஈரமற்று தந்த போக்கை..
இவன் பாவம் கங்கையில் தீர..
இன்று நாளும் வணங்கும் நம் தெய்வம் எங்கே இருக்கிறது..

நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..
நாளும்.. நாளும்..


சனி, 12 பிப்ரவரி, 2011

இறைவன் படைத்த உலகை

பாடல்: இறைவன் படைத்த உலகை எல்லாம்
திரைப்படம்: வா ராஜா வா
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்: நெல்லை அருள்மணி
 இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
ஆண்டு: 1969



இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

உள்ளம் சொல்வதை உதடு சொல்லாமல்
உண்மை பிறப்பதில்லை
உள்ளம் சொல்வதை உதடு சொல்லாமல்
உண்மை பிறப்பதில்லை
உள்ளிருந்தே நீ அருள் செய்யாமல்
ஒன்றும் நடப்பதில்லை
உள்ளிருந்தே நீ அருள் செய்யாமல்
ஒன்றும் நடப்பதில்லை
ஒன்றும் நடப்பதில்லை

இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

இரண்டு மனிதர் சேர்ந்த போது
எண்ணம் வேறாகும்
இரண்டு மனிதர் சேர்ந்த போது
எண்ணம் வேறாகும்
எத்தனை கோவில் இருந்த போதும்
இறைவன் ஒன்றாகும்
எத்தனை கோவில் இருந்த போதும்
இறைவன் ஒன்றாகும்
இறைவன் ஒன்றாகும்

இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

இசையால் அவனை இரங்க வைப்பது
மனிதன் குணமாகும்
இசையால் அவனை இரங்க வைப்பது
மனிதன் குணமாகும்
இசையில் மயங்கி இரங்கி வருவது
இறைவன் மனமாகும்
இசையில் மயங்கி இரங்கி வருவது
இறைவன் மனமாகும்
இறைவன் மனமாகும்

இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்
Listen/Download at: இறைவன் படைத்த உலகை எல்லாம்

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

இரவு வரும் பகலும் வரும்


படம்: இரவும் பகலும்.
பாடியவர்: டி.எம்.எஸ்.
வரிகள்: கண்ணதாஸன்.
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்

பெருமை வரும் சிறுமை வரும்
பிறவி ஒன்று தான் பிறவி ஒன்று தான்
பெருமை வரும் சிறுமை வரும்
பிறவி ஒன்று தான் பிறவி ஒன்று தான்
வறுமை வரும் செழுமை வரும்
வாழ்க்கை ஒன்று தான் வாழ்க்கை ஒன்று தான்

இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்

இளமை வரும் முதுமை வரும்
உடலும் ஒன்று தான் உடலும் ஒன்று தான்
இளமை வரும் முதுமை வரும்
உடலும் ஒன்று தான் உடலும் ஒன்று தான்
தனிமை வரும் துணையும் வரும்
பயணம் ஒன்று தான் பயணம் ஒன்று தான்

இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்

விழி இரண்டு இருந்த போதும்
பார்வை ஒன்று தான் பார்வை ஒன்றுதான்
வழிபடவும் வரம் தரவும் தெய்வம் ஒன்று தான்
வழிபடவும் வரம் தரவும்
தெய்வம் ஒன்று தான் தெய்வம் ஒன்று தான்

இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
இரவு வரும் பகலும் வரும்
உலகம் ஒன்று தான் உலகம் ஒன்று தான் 

This feature is powered by Dishant.com - Home of Indian Music

              

பூமியில் மானிட ஜென்மம்


பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்..ஓஊ...
பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்..
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவி
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவி
காலமும் செல்லமடிந்திடமோ
காலமும் செல்லமடிந்திடமோ

உத்தம மானிடராய் பெரும் புண்ணிய
நல்வினையால் உலகில் பிரந்தோம்...ஓஊ....
உத்தம மானிடராய் பெரும் புண்ணிய
நல்வினையால் உலகில் பிரந்தோம்
சத்திய ந்யான டயானிதியாகிய
சத்திய ந்யான டயானிதியாகிய
புதரை போற்றுதல் நம் கடனே
புதரை போற்றுதல் நம் கடனே

உன்மையும் ஆருயிர் அன்பும் அகிம்சையும்
இல்லையெனில்ன்னர ஜென்மம்மிதே
உன்மையும் ஆருயிர் அன்பும் அகிம்சையும்
இல்லையெனில்ன்னர ஜென்மம்மிதே
மண்மீதிலோர் சுமயே பொதிதாங்கிய
பாழ்மரமே வெரும் பாமரமே
மண்மீதிலோர் சுமயே பொதிதாங்கிய
பாழ்மரமே வெரும் பாமரமே எம்.கே.தியாகராஜபாகவதர்

திரைப்படம்:   அசோக்குமார்
பாடல்:   பூமியில்மாநிடஜன்மம்
பாடகர்கள்:   MK. த்யாகராஜ பாகவதர்
இசை:   பழையது
பாடல் ஆசிரியர்:   பாபநாசம் சிவன் 

சனி, 5 பிப்ரவரி, 2011

யார் தருவார் இந்த அரியாசனம்?


Song: maanikka veenaiye - பாடல்: மாணிக்க வீணையே மரகதப் பதுமையே
Movie: Mahakavi Kalidas - திரைப்படம்: மஹாகவி காளிதாஸ்
Singers: K.B. Sundarambal - பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1966

மாணிக்க வீணையே மரகதப் பதுமையே வைரத்தில் தோய்ந்த மனமே
மதங்கமா முனிவரின் மாதவச் செல்வியே மாதுளம் சிவந்த விழியே
ஆணிப்பொன் கட்டிலே அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி
அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே ப்ரணவம் தந்த காளி

யார் தருவார் இந்த அரியாசனம்?
யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் - அம்மா
யார் தருவார் இந்த அரியாசனம்?

பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த
பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த
பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன் - அங்கு
தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு

யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்

கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன்
காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா?
கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன்
காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா?
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? ஆ..
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? - உன்
சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா?

This feature is powered by Dishant.com - Home of Indian Music

சனி, 29 ஜனவரி, 2011

புஞ்சை உண்டு நஞ்சை


புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே
வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதி இல்லே - சனம்
நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லே - இது
நாடா இல்லே வெறும் காடா? - இதைக்
கேக்க யாரும் இல்லே தோழா - இது
நாடா இல்லே வெறும் காடா? இதைக்
கேக்க யாரும் இல்லே தோழா

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது?
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ
வீடின்றி வாசலின்றித் தவிக்குது
எத்தனை காலம் இப்படிப் போகும்?
என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்
என்றிங்கு வாழும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே

ஆத்துக்குப் பாதை இங்கு யாரு தந்தது?
தானாகப் பாதை கண்டு நடக்குது
காத்துக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது?
தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா?
கங்கையும் தெற்கே பாயாதா? காவிரியோடு சேராதா?
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா?

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே - இது
நாடா இல்லே வெறும் காடா? - இதைக்
கேக்க யாரும் இல்லே தோழா - இது
நாடா இல்லே வெறும் காடா? - இதைக்
கேக்க யாரும் இல்லே தோழா

படம் : உன்னால் முடியும் தம்பி (1988)
இசை : இளையராஜா
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
வரிகள் : புலமைபித்தன்

This feature is powered by Dishant.com - Home of Indian Music

உன்னால் முடியும் தம்பி


Song: unnaal mutiyum thampi - பாடல்: உன்னால் முடியும் தம்பி
Movie: unnaal mudiyum thambi - திரைப்படம்: உன்னால் முடியும் தம்பி
Singers: S.P. Balasubramaniam - பாடியவர்: S.P. பாலசுப்பிரமணியம்
Lyrics: Muthulingam Pulamaipithan - இயற்றியவர்: முத்துலிங்கம் புலமைப்பித்தன்
Music: Ilayaraja - இசை: இளையராஜா
Year: - ஆண்டு: 1988

உன்னால் முடியும் தம்பி தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தோளை உயர்த்து துங்கி விழும் நாட்டை எழுப்பு - உன்
தோளை உயர்த்து துங்கி விழும் நாட்டை எழுப்பு
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்

உன்னால் முடியும் தம்பி தம்பி - அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

நாளைய நாட்டின் தலைவனும் நீயே நம்பிக்கை கொண்டு வருவாயே
உனக்கென ஓர் சரித்திரமே எழுதும் காலம் உண்டு

உன்னால் முடியும் - அட உன்னால் முடியும் - ஆஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும் சாரய கங்கை காயாதடா
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும் காசுள்ள பக்கம் பாயாதடா
குடிச்சவன் போதையில் நிற்பான் குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா
கள்ளுக்கடைக் கடைக் காசிலே தாண்டா கட்சிக் கொடி ஏறுது போடா
கள்ளுக்கடைக் கடைக் காசிலே தாண்டா கட்சிக் கொடி ஏறுது போடா
மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்தச் செய்யோணும்

உன்னால் முடியும் - அட உன்னால் முடியும் - ஆஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

கல்லூரி பள்ளி இல்லாத ஊரை கையோடு இன்றே தீ மூட்டுவோம்
கல்லாத பேர்கள் இல்லாத நாடு நம் நாடு என்றே நாம் மாற்றுவோம்
இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்
அறிவெனும் கோபுரம் அங்கே நாம் காணுவோம்
வானம் உங்கள் கைகளில் உண்டு ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
வானம் உங்கள் கைகளில் உண்டு ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளணும்

க கஸ்ம தமத நிதநி
மமமமகஸ மமமம தம ததததநி நிதநிநிநிநி
ஸ்ஸ்ஸ் நிதநி தநித மதம
நிஸ்நி தஸ்நி தநித மஸக

உன்னால் முடியும் - அட உன்னால் முடியும் - ஆஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தோளை உயர்த்து துங்கி விழும் நாட்டை எழுப்பு - உன்
தோளை உயர்த்து துங்கி விழும் நாட்டை எழுப்பு
எதையயும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

This feature is powered by Dishant.com - Home of Indian Music

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே

திரைப்படம்: சித்தி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா

-------------------------------------------------
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
பெண்ணாகப் பிறந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம் இறப்பில் மறு தூக்கம்
இப்போது விட்டு விட்டால் எப்போதும் தூக்கமில்லை
என்னரிய கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு

ஆரீராரீரீ ஆரீராராரோ ஆரீஆரீராரோ
ஆரீராரீரீ ஆரீரீஆரோ ஆரீராரீரீரோ

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளு தமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுவதே தீராத தொல்லையடி

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

மாறும் கன்னி மனம் மாறும் கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும் போது தூக்கமென்பதேது?
தான் நினைத்த காதலனை தேற வரும் போது
தான் நினைத்த காதலனை தேற வரும் போது
தந்தை அதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது? கண்ணுறக்கம் ஏது?

மாலையிட்ட தலைவன் வந்து சேலை தொடும் போது
மங்கையரின் தேன் நிலவில் கண்ணுறக்கம் ஏது? கண்ணுறக்கம் ஏது?

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

ஐயிரண்டு திங்களிலும் பிள்ளை பெறும் போதும்
அன்னையென்று வந்த பின்னும் கண்ணுறக்கம் போகும் கண்ணுறக்கம் போகும்
கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து தேடும்
கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து தேடும்
காணாத தூக்கமெல்லாம் தானாக சேரும் தானாக சேரும்

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

ஆரீராரீரீ ராரீராராரோ ஆரீராரீராரோ ஆ
ஆரீராரீரீ ஆரீராராரோ ஆரீராரீராரோ ஆரீராரீராரோ

This feature is powered by Dishant.com - Home of Indian Music

              

நினைந்து நினைந்து

திரைப்படம்: சதாரம்
இயற்றியவர்: மருதகாசி
இசை: ஜி. ராமனாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1956
------------------------------------------------------

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே உன்னை
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே

அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போன சிலை ஆனததே - வாழ்க்கை
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போன சிலை ஆனதே - நான்
அடைந்த செல்வம் கொள்ளை போனதே
அடைந்த செல்வம் கொள்ளை போனதே
அமைதியின்றியே அலைய நேர்ந்ததே

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே

எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
துன்ப கீதமே பாடுகின்றாயோ?
எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
துன்ப கீதமே பாடுகின்றாயோ?
இந்த நிலை என்று மாறுமோ?
இந்த நிலை என்று மாறுமோ? உனைக் காணும்
இன்ப நாளுமே வந்து சேருமோ?

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே


This feature is powered by Dishant.com - Home of Indian Music

              

உயிரும் நீயே



படம் : பவித்ரா
பாடல் : உயிரும் நீயே
இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர் : உன்னி கிருஷ்ணன்


உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே.........
உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே

தன் உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே
தன் உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே


உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் மூழ்கும் தாயே.....
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் மூழ்கும் தாயே.....


உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே......... ( உயிரும் )

விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்

பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை

சாமி தவித்தான்...................
சாமி தவித்தான்

தாயை படைத்தான்.. (உயிரும் )

வீடு மனைவி மக்கள்

படம்: வீடு மனைவி மக்கள்
பாடியவர்: பாலு
இசை: சங்கர் கனேஷ்
இயக்குநர்: விசு


வீடு மனைவி மக்கள்
மூன்றும் வாழ்வில் சிக்கல்
கற்பனை கலைந்ததடா
கனவுகள் முறிந்ததடா
விதைப்பவன் மனிதனடா
அறுப்பவன் ஒருவனடா

வீடு மனைவி மக்கள்
மூன்றும் வாழ்வில் சிக்கல்

ஆயிரம் காலத்து பயிரொன்று இன்று
அறுவடை ஆனது
விதைத்தவன் வாழ்க்கை கண்ணீரில் நீராடுது
உதிரத்தில் பிறந்த குருவிகள் எல்லாம்
உறவை மறந்தது
சொந்த என்ற வீட்டில் கடல் மீது மழையானது
ஓவியம் வாங்கி வந்தாள் கண்களை காணவில்லை
தேரொன்று வாங்கி வந்தான் பாதையை காணவில்லை
பூஜைகள் செய்ய வந்தான் கோவிலை காணவில்லை

வீடு மனைவி மக்கள்
வீடு மனைவி மக்கள்

கூறைக்கு வாங்கிய மூங்கிலில்
இன்று கொள்ளியா வைப்பது
பொட்டு மட்டும் வைத்தேன்
வேறென்ன நீ கண்டது
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
வாழ்க்கை தான் போனது
ஏழையின் சொந்தம் எப்போதும் தப்பானது
கூடு ஒன்று முடியும் முன்னே குருவி பறந்ததடா
குருவி பறந்ததனால் கூடும் சரிந்ததடா
பல்லவி தொடங்குமுன்னே உன் சரணம் முடிந்ததடா

வீடு மனைவி மக்கள்
மூன்றும் வாழ்வில் சிக்கல்
கற்பனை கலைந்ததடா
கனவுகள் முறிந்ததடா
விதைப்பவன் மனிதனடா
அறுப்பவன் ஒருவனடா

வீடு மனைவி மக்கள்
வீடு மனைவி மக்கள்


     Get this widget |     Track details  |         eSnips Social DNA   

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

கடவுள் செய்த பாவம் .....

கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம்
யாவும் என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம் ..ம் ..
மனிதன் கொண்ட கோலம்
பொருளேதுமின்றி கருவாக வைத்து உருவாக்கி விட்டுவிட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி
இடம் மாற்றி வைத்து விட்டான்
பொருளேதுமின்றி கருவாக வைத்து உருவாக்கி விட்டுவிட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி
இடம் மாற்றி வைத்து விட்டான் ..........
கடவுள் செய்த ................

நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய் போன இந்த பூமியிலே (2)

முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள்
முதுகுக்கு பின்னால் சீரும்
முகஸ்துதி பேசும் வளையும் குழையும்
காரியமானதும் மாறும் .ம் ....காரியமானதும் மாறும் ..........
கடவுள் செய்த ................

கொடுப்பவன் தானே மேல் ஜாதி
கொடுக்காதவனே கீழ் ஜாதி (2)
படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான்
பாழாய்ப்போன இந்த பூமியிலே (2)
நடப்பது யாவும் விதிப்படி என்றால்
வேதனை எப்படி தீரும் (2)
உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால்
உலகம் உருப்படியாகும் .ம் ...உலகம் உருப்படியாகும் ..........
கடவுள் செய்த ................

Song: kadavul seitha paavam - பாடல்: கடவுள் செய்த பாவம்
Movie: Nadodi - திரைப்படம்: நாடோடி
Singers: T.M. Soundararajan, - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்,
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan - இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
Year: - ஆண்டு: 1966  


This feature is powered by Dishant.com - Home of Indian Music

              

நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானையா

படம்: நல்ல தம்பி
இயற்றியவர்: என்.எஸ். கிருஷ்ணன்
பாடியவர்: என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம்
ஆண்டு: 1949

நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானையா
நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானையா
ஆட்டமாடி பாட்டுப் பாடி அழகான ஜதையோடு வந்தானையா
ஆட்டமாடி பாட்டுப் பாடி நல்ல அழகான ஜதையோடு வந்தானையா

சிரிக்க வைத்து நாட்டை செழிக்க வைக்கும் சீர்திருத்தக் கோமாளி வந்தானையா
சிரிக்க வைத்து நாட்டை செழிக்க வைக்கும் சீர்திருத்தக் கோமாளி வந்தானையா

மோட்டாவை விட்டிறங்கி வந்தானையா
முன்குடுமி திருத்தி கிட்டு வந்தானையா
ராட்டினம் போல் சுழன்று வந்தானையா நம்ம
ராஜ்ஜியத்தை சுத்திப் பாத்து வந்தானையா

தச்சோம் திரிச்சோம் ஜரிகை செம்பட்டு வெம்பட்டு கிளிஞ்சது போ

ஹங், ஐயா கோமாளியாரே

என்ன ஏமாளியாரே

உங்கள ஒண்ணு கேக்கறேன் பதில் சொல்லுங்க.

ஒண்ணென்ன ஒம்பது கேளும் பதில் சொல்றேன்.

அந்தக் காலத்துலே...

நிறுத்தும், அந்தக் கால சங்கதி நமக்கு வேண்டாம், இந்தக் காலத்தைப் பத்திக் கேளும்.

சரி, இந்தக் காலத்துல தான் எங்க பாத்தாலும் பொய்யும் பொரட்டும்,

நிறுத்தும், பொய்யு்ம் பொரட்டும் நீங்க சொன்ன அந்தக் காலத்தில. இந்தக் காலம் நீதியான காலமையா நேர்மையான காலம். இன்னுஞ் சொல்றேன் கேளும்.

அன்னியர்கள் நமையாண்டதந்தக் காலம்
நம்மை நாமே ஆண்டு கொள்வதிந்தக் காலம்
பேசுதற்கும் உரிமையற்ற தந்தக் காலம்
பிரச்சாரப் பெருமையுற்ற திந்தக் காலம்

மனுசனை மனுசன் ஏச்சுப் பொழைச்சது அந்தக் காலம்
அது அந்தக் காலம்
மடமை நீங்கி நமதுடைமை கோருவது இந்தக் காலம்
நெனெச்சதை எல்லாம் எழுதி வைத்தது அந்தக் காலம்
அது அந்தக் காலம் எதையும்
நேரில் கண்டே நிச்சயிப்பது இந்தக் காலம்
மழை வருமென்றே மந்திரம் ஜெபிச்ச தந்தக் காலம்
அது அந்தக் காலம் மழையைப்
பொழிய வைக்கவே யந்திரம் வந்தது இந்தக் காலம்
இழிகுலமென்றே இனத்தை வெறுத்ததந்தக் காலம்
அது அந்தக் காலம் மக்களை
இணைத்து அணைக்க முயற்சி பண்ணுவதிந்தக் காலம்

த்ரோபதை தனை துகிலை உரிஞ்சான் அந்தக் காலம்
அது அந்தக் காலம் பெண்ணைத்
தொட்டுப் புட்டா சுட்டுப் புடுவான் இந்தக் காலம் பெண்ணைத்
தொட்டுப் புட்டா சுட்டுப் புடுவான் இந்தக் காலம்

சாத்திரம் படிப்பது அந்தக் காலம் சரித்திரம் படிப்பது இந்தக் காலம்
கோத்திரம் பாப்பது? அந்தக் காலம் குணத்தைப் பாப்பது? இந்தக் காலம்
பக்தி முக்கியம் அந்தக் காலம் படிப்பு முக்கியம்
கத்தி தீட்டுவது? அந்தக் காலம் புத்தி தீட்டுவது? இந்தக் காலம்

பெண்ணைப் பேயெனப் பேசி அணைச்சான் அந்தக் காலம்
அது அந்தக் காலம் - வாழ்வின்
கண்ணில் ஒன்றாய் எண்ணி நடப்பது இந்தக் காலம் வாழ்வின்
கண்ணில் ஒன்றாய் எண்ணி நடப்பது இந்தக் காலம்

பலே பலே, ஐயா கெட்டிக்காரக் கோமாளியாரே, இன்னைக்கு நடக்கப் போகும் இந்திரசபா எனும் கூத்திலே ஆசீர்வாதம் தாங்கும்படியா உம்மைக் கேட்டுக்கொள்கிறேன்.

நமஸ்காரம்

ஆசீர்வாதம்

ஆசி எனக்கு, வாதம் உமக்கு.

ராஜ ராஜ மஹாராஜதா பைரவின்னு இங்கே வந்தேனே ஏ..ஏ..ஏ..ஏ...ஏ..
தேவ தேவ சரச சரச தீனநாதரேந்திர
ஆவலாலே ஆயிரங்கண் அணிந்த ரூப சுந்தர
ஆலாதி அமுதமுண்டோ ஐராதி தன்னைக் கொண்டோ?
தேவ தேவ சரச சரச தீனநாதரேந்திர

ஐயா, கேளுமையா இந்திர பூபதியே, நாரதர் சபையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.

சந்தோஷம், நாரதரே நமஸ்கரிக்கிறேன்.

கல்யாண், கல்யாண்.

தாங்கள் இந்த சபைக்கு வருவதற்கு ஏன் இவ்வளவு தாமதம்?

ஆஹா, அதை என்னவென்று சொல்லுவேன்? பூலோகத்தில் நடக்கும் புதுமைகளைக் கண்டு என் மனம் புளகாங்கிதமடைந்தது.

அப்படி என்ன புதுமை கண்டீர்?

அதை சபையில் பவிஸ்தாரமாகச் சொல்லுவதற்கு பூலோகத்திலிருந்து ஒரு நரன், ஒரு நரை இருவரை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். இதோ பாருங்கள்.

ஏ கோமாளி மச்சான்

என்ன?

இது எந்த இடங்கறேன்?

இது அந்திரத்திலே இருக்கும் இந்திரலோகம், பளா பளா

ஆத்தாடி, இந்த மனுஷன் என்னாங்கறேன் இப்படி இருக்காரு?

மனுசன் இல்லேடியம்மா, இவங்க எல்லாம் தேவரு, அவரு தேவருக்கு அரசரு, இந்திரன்.

ஓஹோ, பொட்டி மகன் இந்திரரு இவுரு தானா? அகலிகை மேல ஆசைப்பட்டு, ஒடம்பெல்லாம்..

சட், யார் நீங்கள்?

பட், மனுஷன்

எந்த ஊர்?

தருமம் தழைத்தோங்கும் தமிழ் நாடு, பளா பளா.

எங்கள் நாட்டை விடப் பெரிதா? மளா மளா.

பெரிதல்ல, பெருமை வாய்ந்தது.

எந்த வகையில்?

சொல்றேன் கேளுங்கோ.

கலை முதலாக தொழில் முறை யாவும் காத்து வளர்ப்பது தமிழ்நாடு
கலை முதலாக தொழில் முறை யாவும் காத்து வளர்ப்பது தமிழ்நாடு
முதல் முதலாக நல்லவை யாவும்
முதல் முதலாக நல்லவை யாவும் முயன்று முடிப்பது தமிழ்நாடு

கலை முதலாக தொழில் முறை யாவும் காத்து வளர்ப்பது தமிழ்நாடு

பாட்டால் உணர்த்தி ஊட்டும் கவி பாரதி சேர் தமிழ்நாடு
நாட்டு மக்கள் முன்னேற்றம் தனை நாடியே கவிதை பாடிவைத்த தமிழ்

கலை முதலாக தொழில் முறை யாவும் காத்து வளர்ப்பது தமிழ்நாடு

உலகம் வியக்க சுதேச கப்பல் ஓட்டியதும் தமிழ் நாடு
திலகமெனப் புகழ் ஓங்கும் எங்கள் சிதம்பரம் பிள்ளை செயல்புரிந்த தமிழ்

கலை முதலாக தொழில் முறை யாவும் காத்து வளர்ப்பது தமிழ்நாடு

உலகில் முதலில் கள்ளை ஒழித்ததும் எம் தமிழ்நாடு
உத்தமர் காந்தியின் சொல்லை நன்றாய் உணர்ந்து நடப்பதில் எமக்கீடில்லை

கலை முதலாக தொழில் முறை யாவும் காத்து வளர்ப்பது தமிழ்நாடு

கள்ளை ஒழித்து கண்ணியம் பெற்றது எங்கள் நாடு.

பூலோகத்தில், மதுவை ஒழித்து விட்டார்களா? ஆச்சர்யம் ஆச்சர்யம், நரனே, முன்னொரு சமயம் அமெரிக்கா என்னும் நாட்டில் இந்த மதுவிலக்கு செய்து ஃபெய்லியர் ஆகிவிடவில்லையா?

ஃபெய்லியர், அப்படி என்றால்?

தோல்வி.

தோல்வி, எங்கள் நாடிலே அப்படி நடக்காது. ஏனென்றால் குடிப்பது பாபம் என்று நினைக்கும் நாடு. குடித்தேன் என்று சொல்ல வெட்கப் படும் நாடு. ஆகையினாலே நாங்கள் வெற்றி பெறுவது நிச்சயம், நிச்சயம், நிச்சயம்.

இதை நான் நம்ப முடியாது, பெண்ணே, உண்மையில் உங்கள் நாட்டில் மதுவை ஒழித்து விட்டார்களா? சொல்.

குடிகெடுத்த குடி ஒழிஞ்சது அடி தடி சண்டை அது கொறைஞ்சது
ஆணும் பெண்ணும் புத்தியறிஞ்சது எங்க நாட்டிலே அக்டோபர் ரெண்டுக்கு மேலே
குடிகெடுத்த குடி ஒழிஞ்சது அடி தடி சண்டை அது கொறைஞ்சது
ஆணும் பெண்ணும் புத்தியறிஞ்சது எங்க நாட்டிலே அக்டோபர் ரெண்டுக்கு மேலே

தாலிக் கயிறு தனியா இருக்கும் தங்கமிருக்காது அதிலே தங்கமிருக்காது
தண்ணி குடிக்க தகரக் கொவள செம்புமிருக்காது வீட்டிலே செம்புமிருக்காது
பாலு வாங்க குழந்த பசிக்குப் பணமிருக்காது கையிலே பணமிருக்காது
பாழுங்கள்ளக் குடிப்பது மட்டும் நாளுந்தப்பாது எந்த நாளுந்தப்பாது
கூலிக் காசில் சோளம் வாங்கிக் கூழுக் காச்ச வச்சிருப்பா
ஆளதந்தா அம்பள தான் அதையும் வித்துக் குடிப்பான்
கடைக்குப் போவான் கள்ளக் குடிப்பான் காரியமில்லாம சண்டைக்குப் போவான்
வடைய ரண்டை வாங்கிக்குவான் வழி நெடுக பேசிக்குவான்
வந்து கதவைத் தட்டுவான் வாயிலே வந்ததைத் திட்டுவான்
வாழ்வின் சுகத்தை விரும்பும் பெண்ணை வஞ்சகக் காரி என்றுரைப்பான் அவன்
வாரிசுக்காக சிசுவைத் தாங்கும் வயித்திலெ எட்டி மிதிப்பான்
அப்பப்பா, இந்தக் கள்ளுக் குடிய நம்ம
நாட்ட விட்டு ஒழிச்ச அந்த நல்ல மனுஷன் காலுக்கு
கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கும்பிடு.
(கை தட்டல்)
பெண்ணே, மது ஒழிந்தது பெண்களுக்குத் தான் மிகவும் நன்மை என்று உன்னால் தெரிந்து கொண்டேன்.

ம்ம்ம்ம் ஆண்களுக்கும் நல்லது தான்.

அது எப்படி?

மது ஒழிவதற்கு முன்னாலே நான் பாதி வேளை மிருகமாகத் தானே இருந்தேன்.

மனுஷனாகிப் போனேன் இப்ப நான் மனுஷனாகிப் போனேன்
மனுஷனாகிப் போனேன் இப்ப நான் மனுஷனாகிப் போனேன்
பனமரப் பாலு பட்டை பிராந்தி பக்கம் வந்தால் எடுக்குறேன் வாந்தி
மனுஷனாகிப் போனேன் இப்ப நான் மனுஷனாகிப் போனேன்

இரண்டாம் தேதி வருவதற்கு முன்னே அக்டோபர் மாதம்
இரண்டாம் தேதி வருவதற்கு முன்னே என் கண்ணுக்குன்னை
இரண்டாளாகத் தெரிஞ்சது பெண்ணே என் கண்ணுக்குன்னே
இரண்டாளாகத் தெரிஞ்சது பெண்ணே

சுருண்டு சுருண்டுதான் சும்மாப் படுப்பேன்
சுதிய விட்டுக் கூடப் பாட்டுகள் படிப்பேன்
வரண்ட காரவடை வாத்து முட்டை கரு
வாட்டைத் தின்ன வாய் நாத்தம் நீங்கி நான்

மனுஷனாகிப் போனேன் இப்ப நான் மனுஷனாகிப் போனேன்

மது, அருந்திய உடனே ஞாபகம் வருவது மாது. நாரதரே, நான் கூட அகலிகை வீட்டுக்குச் சென்று சில தவறுகள் செய்ததற்குக் காரணமாக இருந்தது இந்த மது தான். நரனே இதற்கு என்ன செய்வது?

குடிச்சுப் பழகனும் குடிச்சுப் பழகனும்
படிச்சுப் படிச்சு சொல்லுறாங்கோ குடிச்சுப் பழகனும்
படிச்சுப் படிச்சு சொல்லுறாங்கோ குடிச்சுப் பழகனும்

ஐயையோ! என்னாங்க இது? குடிச்சுப் பழகணும்னு சொல்றீங்களே?

ஆமாம் பழகணும், இல்லாமப் போன மறக்க முடியாது. அதாவது, இந்தக் குடியை ஒழிச்சாங்களே, அவங்க மனசு சந்தோஷப் படணும்னா, எல்லோரும் ஒத்துமையா

குடிச்சுப் பழகனும் குடிச்சுப் பழகனும்
படிச்சுப் படிச்சு சொல்லுறாங்க பாழுங்கள்ளை நீக்கிப் பாலைக்
குடிச்சுப் பழகனும்
படிச்சுப் படிச்சு சொல்லுறாங்க பாழுங்கள்ளை நீக்கிப் பாலைக்
குடிச்சுப் பழகனும் பாலைக் குடிச்சுப் பழகனும்

பாலு வாங்கப் பணமில்லேன்னா டீயைக் குடிச்சுக்கோ
டீயும் கெடுதலுன்னு தெரிஞ்சா மோரைக் குடிச்சுக்கோ
மோரு நமக்குக் கெடைக்கல்லே
நீராகாரம் இருக்கவே இருக்கு குடிச்சுப் பழகணும் குடிச்சுப் பழகணும்

காலையில் பல் தேய்த்த உடன் கண்டிப்பாக நீராகாரம் குடிச்சுப் பழகணும்
காலையில் பல் தேய்த்த உடன் கண்டிப்பாக நீராகாரம் குடிச்சுப் பழகணும்

வாஸ்தவம் தான், ஒழித்து விட வேண்டிய விஷயம் தான். நாரதரே, இன்று முதல் நம் தேவலோகத்தில் யாரும் மது அருந்தக் கூடாதென்று சொல்லும், மீறி அருந்துவார்களேயானால், அவர்களை நரகக் குழியில் கொண்டு போய்த் தள்ளிவிடும் படி நான் கட்டளையிட்டதாகச் சொல்லும். நரனே, நீ கொஞ்ச காலம் இங்கே தங்கியிருந்து, சொர்க்கலோகத்திற்கும், நரகலோகத்துக்கும் சென்று இந்த மதுவிலக்குப் பிரச்சாரம் செய்வாயாக.

ஐயையோ, என் மச்சான் உன்னை நரகலோகத்துக்குப் போகச் சொல்றாரே இவரு.

ஹஹஹஹ, பிரச்சாரத்துக்கு எங்கே போனா தான் என்ன, பெண்ணே, நீ சொர்க்க லோகத்துக்குப் போ, ஏன்னா அங்கே கொஞ்ச ஆளுக தான் இருக்கும், நரகத்துல ரொம்பப் பேர் இருப்பாங்க, நான் அங்கே போய் பிரச்சாரம் பண்ணிட்டு வரேன்.

மதுவை ஒழிப்போம் மதியை வளர்ப்போம் மதுவை ஒழிப்போம் மதியை வளர்ப்போம்.

விடுதலை விடுதலை விடுதலை விடுதலை விடுதலை விடுதலை
உடலை வாட்டும் நோய்களுக்கும் தலைவலிக்கும் இன்று முதல்
விடுதலை விடுதலை விடுதலை
பகலும் இரவும் பொங்கிக் கிடந்த பல்லாக்களுக்கும் விடுதலை
பகலும் இரவும் பொங்கிக் கிடந்த பல்லாக்களுக்கும் விடுதலை
பயந்து பயந்து ஏறி இரங்கும் பாட்டாளிக்கும் விடுதலை
பயந்து பயந்து ஏறி இரங்கும் பாட்டாளிக்கும் விடுதலை

ஜெகத்தை வெறுக்கச் செய்யும் கஞ்சா சிறுமிகளுக்கும் விடுதலை
ஜெகத்தை வெறுக்கச் செய்யும் கஞ்சா சிறுமிகளுக்கும் விடுதலை
முகத்தை மூடும் துணிக்கும் கள்ளு மொந்தைகளுக்கும் விடுதலை
முகத்தை மூடும் துணிக்கும் கள்ளு மொந்தைகளுக்கும் விடுதலை
பனை மரத்துக்கும் விடுதலை பனை மரத்துக்கும் விடுதலை,
தென்னை மரத்துக்கும் விடுதலை தென்னை மரத்துக்கும் விடுதலை
பனை மரத்துக்கும் தென்னை மரத்துக்கும் ஈச்ச மரத்துக்கும் விடுதலை
விடுதலை விடுதலை விடுதலை.


This feature is powered by Dishant.com - Home of Indian Music

              

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று



பாடல்: குழந்தையும் தெய்வமும்
திரைப்படம்: குழந்தையும் தெய்வமும்
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1965



குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது
பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது - அந்தப்
பிள்ளையோடு தெய்வம் வந்த் குடியிருந்தது - அந்தப்
பிள்ளையோடு தெய்வம் வந்த் குடியிருந்தது
வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது
வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது - அங்கு
வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது - அங்கு
வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது
உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது - நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது - நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது - பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது - பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார்
பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார் - அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவ்ரானார் - அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவ்ரானார்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம் - என்றும்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார் - என்றும்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று


This feature is powered by Dishant.com - Home of Indian Music

              

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

சுதந்திர தாகம்



என்று தணியும்இந்தச் சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னை கை விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?
அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே!
ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே!
வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ?
மெய்யடி யோம் இன்னும் வாடுதல் நன்றோ? 1

பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்ச மடைந்தபின் கைவிட லாமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ
அஞ்சலென் றருள்செயுங் கடமை யில்லாயோ?
ஆரிய! நீயும் நின் அறம்மறந் தாயோ?
வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனே?
வீர சிகாமணி!ஆரியர் கோனே!

வியாழன், 4 பிப்ரவரி, 2010

வாராய் என் தோழி வாராயோ



நான் என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கறேன்
அதுல ஆனந்த கண்ணீர தான் நான் எப்பவும் பாக்கனும்

அது என் கடமை ராஜா.. நீ கவலைப்படாத...

நன்றி ஆனந்தா மிக்க நன்றி !!!
அம்மா.. மஞ்சள் குங்குமத்தோட நீ நீடூழி வாழனும் தாயே

வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளை காண வாராயோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

மணக்கோலம் கொண்ட மகளே
புது மாக்கோலம் போடு மயிலே
குணக்கோலம் கொண்ட கனியே
நம் குலம் வாழ பாடு குயிலே
சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளை கண்டு மகிழாதோ
சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளை கண்டு மகிழாதோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

தனியாக காண வருவார்
இவள் தளிர் போலே தாவி அணைவாள்
கண் போலே சேர்ந்து மகிழ்வாள்
இரு கண்மூடி மார்பில் துயில்வாள்
எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ
எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

மலராத பெண்மை மலரும்
முன்பு தெரியாத உண்மை தெரியும்
மயங்காத கண்கள் மயங்கும்
முன்பு விளங்காத கேள்வி விளங்கும்
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ

வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளை காண வாராயோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

படம் : பாச மலர்
இசை : MS விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள் : LR ஈஸ்வரி, MS ராஜேஸ்வரி



This feature is powered by Dishant.com - Home of Indian Music

              

தென்றல் உறங்கிடக் கூடுமடி, எந்தன் சிந்தை உறங்காது

Song: thendral uRangitak kootumati - பாடல்: தென்றல் உறங்கிடக் கூடுமடி
Movie: Sangili thirudan - திரைப்படம்: சங்கிலித் திருடன்
Singers: P. Leela - பாடியவர்: பி. லீலா, டி.எம் சௌந்தரராஜன்
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
Music: T.G. Lingappa - இசை: டி.ஜி. லிங்கப்பா
Year: - ஆண்டு: 1960


தென்றல் உறங்கிடக் கூடுமடி என்தன் சிந்தை உறங்காது - புவி
எங்கும் உறங்கிடக் கூடுமடி என்தன் கண்கள் உறங்காது - புவி
எங்கும் உறங்கிடக் கூடுமடி என்தன் கண்கள் உறங்காது
தென்றல் உறங்கிடக் கூடுமடி என் சிந்தை உறங்காது

நீலக் கடலலை ஓடி வருவதில் நெஞ்சம் பறிகொடுப்பேன்
நீலக் கடலலை ஓடி வருவதில் நெஞ்சம் பறிகொடுப்பேன் - இன்று
கோடி அலைகள் என் நெஞ்சில் எழுவதை யாரிடம் போய் உரைப்பேன் - இன்று
கோடி அலைகள் என் நெஞ்சில் எழுவதை யாரிடம் போய் உரைப்பேன் - இனி
தென்றல் உறங்கிடக் கூடுமடி என்தன் சிந்தை உறங்காது
துள்ளித் திரிந்தாள் சுற்றிப் பறந்தாள் பிள்ளைப் பருவத்திலே ஏஏ..ஏஏ..ஏஏ..ஏஏ..
துள்ளித் திரிந்தாள் சுற்றிப் பறந்தாள் பிள்ளைப் பருவத்திலே - நாண
வெள்ளத்திலே இவள் உள்ளம் மிதப்பது கன்னிப் பருவத்திலே - நாண
வெள்ளத்திலே இவள் உள்ளம் மிதப்பது கன்னிப் பருவத்திலே
கன்னிப் பருவத்திலே
கண்களில் ஏறிப் பெண்மையில் ஓடிய காதலை விட்டுவிடு
கண்களில் ஏறிப் பெண்மையில் ஓடிய காதலை விட்டுவிடு
நங்கைப் பருவம் வேதனை தந்தால் - இள
நங்கைப் பருவம் வேதனை தந்தால் நாணத்தை விட்டுவிடு - நெஞ்சே
நாணத்தை விட்டுவிடு
உற்றவர் கண்ணும் பெற்றவர் கண்ணும் உண்மை அறிவதில்லை
உற்றவர் கண்ணும் பெற்றவர் கண்ணும் உண்மை அறிவதில்லை - இதைக்
கற்றவர் அல்லால் மற்றவார் யாரும் காரணம் சொன்னதில்லை - இதைக்
கற்றவர் அல்லால் மற்றவார் யாரும் காரணம் சொன்னதில்லை
தென்றல் உறங்கிடும் நேரத்திலும் நம் சிந்தை உறங்காது - புவி
எங்கும் உறங்கிடும் காலத்திலும் நம் கண்கள் உறங்காது - புவி
எங்கும் உறங்கிடும் காலத்திலும் நம் கண்கள் உறங்காது
தென்றல் உறங்கிடும் நேரத்திலும் நம் சிந்தை உறங்காது

 
This feature is powered by Dishant.com - Home of Indian Music

              

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு


ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே சன் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு

காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந் தலைவன்
மானிட ஜாதியில் தனி மனிதன் நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை

Song: oru koppaiyile en kudiyiruppu - பாடல்: பஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
Movie: Ratha thilagam - திரைப்படம்: ரத்தத் திலகம்
Singers: T.M. Soundararajan - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1963


This feature is powered by Dishant.com - Home of Indian Music

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்


அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும்


தென்னம் இளங்கீற்றினிலே ஏ..ஏ..ஏ
தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்


படம்: ஆண்டவன் கட்டளை
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்


This feature is powered by Dishant.com - Home of Indian Music



நாடு, அதை நாடாவிட்டால்,ஏது வீடு..


நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு?

பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண் பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு”

பாலைவனம் என்ற போதும் நம் நாடு
பாறை மலை கூட நம் எல்லைக் கோடு
ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்
வீர சமுதாயமே எங்கள் கூட்டம்

வானம் குலமாந்தர் முகம் பார்த்ததில்லை
வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை
வீரர் விழிதாழ்ந்து நிலம் பார்த்ததில்லை
வெற்றித் திருமாது நடை போடும் எல்லை

பசி என்று வருவோர்க்கு விருந்தாக மாறும்
பகைவர் முகம் பார்த்துப் புலியாகச் சீறும்
நிலத்தினில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்
எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்

Song: naatu adhai naatu - பாடல்: நாடு அதை நாடு
Movie: Nadodi - திரைப்படம்: நாடோடி
Singers: T.M. Soundararajan, P. Suseela - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan - இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
Year: - ஆண்டு: 1966 

This feature is powered by Dishant.com - Home of Indian Music

              

Related Posts Plugin for WordPress, Blogger...