Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

திங்கள், 7 பிப்ரவரி, 2011

காதல் செய்தால் பாவம்



படம் : மௌனம் பேசியதே
பாடல் :
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, ஹரிஹரன்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சின்ன சின்னதாய் பெண்ணே..
என் நெஞ்சை முட்களால் தைத்தாய்
என்விழியில் வாள் கொண்டு வீசி..
இள மனதில் காயங்கள் தந்தாய்..
துன்பம் மட்டும் உன் உறவா…
உனை காதல் செய்வதே தவறா…

உயிரே…. உயிரே….
காதல் செய்தால் பாவம்…
பெண்மை எல்லாம் மாயம்..
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
பெண்கள் கண்ணில் சிக்கும்…
ஆண்கள் எல்லாம் பாவம்…
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…

காதல் வெறும் மேகம் என்றேன்.. அடை மழையாய் வந்தாய்…
மழையோடு நனைந்திட வந்தேன்.. நீ தீயை மூட்டினாய்….
மொழியாக இருந்தேனே… உன்னால் இசையாக மலர்ந்தேனே…
உயிரோடு கலந்தவள் நீதான் .. ஹே பெண்ணே..
கனவாகி கலைந்ததும் எனோ.. சொல் கண்ணே..

மௌனம் பேசியதே…
உனக்கது தெரியலயா..
காதல் வார்தைகளை..
கண்கள் அறியலயா…

காதல் செய்தால் பாவம்…
பெண்மை எல்லாம் மாயம்..
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
பெண்கள் கண்ணில் சிக்கும்…
ஆண்கள் எல்லாம் பாவம்…
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…

துணை இன்றி தனியாய் சென்றேன்..
என் நிழலாய் வந்தாய்…
விடை தேடும் மாணவன் ஆனேன்..
என்விடையும் நீயென…
வந்தாயே.. என் வழியில்..
காதல் தந்தாயே… உன் மொழியில்…

என் நெஞ்சில் காதல் வந்து .. நான் சொன்னேன்..
உன் காதல் வேறோர் மனதில்.. எனை நொந்தேன்…
கண்கள் உள்ளவரை… காதல் அழிவதில்லை…
பெண்கள் உள்ளவரை… ஆண்கள் ஜெயிப்பதில்லை…

காதல் செய்தால் பாவம்…
பெண்மை எல்லாம் மாயம்..
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
பெண்கள் கண்ணில் சிக்கும்…
ஆண்கள் எல்லாம் பாவம்…
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…

ஆ: காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கைதொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா என் தாய்போல் ஆகிடுமா

குழு: அம்மா.....

ஆ: இமை போல் இரவும் பகலும்
எனை காத்த அன்னையே
உனது அன்பு பார்த்த பின்பு அதைவிட
வானம் பூமி யாவும் சிறியது

(காலையில்)

நிறை மாத நிலவே வா வா
நடை போடு மெதுவா மெதுவா
அழகே உன் பாடு அறிவேனம்மா
மசக்கைகள் மயக்கம் கொண்டு
மடி சாயும் வாழைத்தண்டு
சுமையல்ல பாரம் சுகம் தானம்மா
தாயான பின்பு தான் நீ பெண்மணி
தோள்மீது தூங்கடி கண்மணி கண்மணி

(காலையில்)

பெ: ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கையில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்க்கு இன்று
மழலைப் போல் உந்தன் நெஞ்சம்
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்
தாய்க்கு பின் தாரம் நான் தானய்யா
தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா
தாயாக்கி வைத்ததே நீயடா நீயடா
தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலேலோ
அதிசய பூவே தாலோ பொன்மணி தாலேலோ
நிலவே நிஜத்தில் இறங்கி
உனை கொஞ்ச எண்ணுதே
அதிகாலை சேவல் கூவும் அதுவரை
வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிட

(தலைவா)

படம்: நியூ
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சாதனா சர்கம்

வாழ்க்கை ஒரு போர்க்களம்




ஆண்: அலோ அலோ மைக்டெஸ்ட்டிங்
 அலோ ஒன் டூ த்ரி அலோ

ஆண்: யோ என்னய்யா கொர கொரன்னு கேக்குது
 எதையாவது கொண்டாந்து கைல குடுத்துவிட்டுறீங்க ஒங்கபாட்ல

ஆண்: வேட்டைக்காரன் பார்ட்டி நடத்தும்
 அய்யூப் நினைவு கோப்பை மகாநாட்டிற்கு
 வருகை தந்திருக்கின்ற உங்கள் அனைவரையும்
 விழா கமிட்டியார் சார்பாக வருக வருக என வரவேற்கிறேன்

ஆண்: வாழ்க்கை ஒரு போர்க்களம்
 வேட்டையாடிப் பார்க்கணும்
 போராடி வெல்லடா
 போட்டிப் போட்டுக்கொள்ளடா

ஆண்: அடக்குதலை முடக்குதலை வேரறுப்போம்
 குருதி மழையில் பூரிப்போம்
 பட்டாக்கத்தி பாய்த்திடுங்கள்
 போ போ போ ரணகள நொடிகள்
 எதிலுமே தோல்விக் கூடாதடா
 எமனையும் வெற்றி நீக்கொல்லடா
 சாதனையிலே வேதனைகள் முடியும்
 வரும் தலைமுறை என் பெயரால் நிமிரும்
 வெல்வோமே.... வீழாமல்....
 வெல்வோமே.... வீழாமல்....
 போராடி வா இது ஆடுகளம் வா
 (இசை...)

ஆண்: கூண்டோடு கருவறுப்பேன்
 போரின் முடிவில் கூத்தாடி வலி ருசிப்பேன்
 பகை முற்றுகையில்
 என் எதிரினில் எதிரிகள் பொடிபடவே
 இனி ஏதும் இல்லை வழி ஒரே அழித்திடவே
 என் வீரம் உன்னை வேரறுத்து கொல்லிவைக்குமே
 தலைகள் சிதறும்
 இது பகைவனை அறுத்திடும் அறுவடை
 சினத்தால் செருக்கை துடை
 திசை எட்டும் நாம் சேர்ப்போம் கூட்டமே
 பறந்தோடிடும் ஆட்டமே
 அது சரித்திரம் படைத்திடும் கரும்படை
 எழுந்தால் நொறுங்கும் தடை
 உயிர்விட்டும் நாம் காப்போம் மானமே
 கைக்கூடிடும் காலமே

ஆண்: ஆடுகளம்.. கைக்கூடிடும் காலமே
 ஆடுகளம்.. கைக்கூடிடும் காலமே
 ஆடுகளம்.. கைக்கூடிடும் காலமே
 ஆடுகளம்.. கைக்கூடிடும் காலமே

ஆண்: இந்த விழாவிற்கு வந்து சிறப்பித்தமைக்காக
 உங்கள் அனைவருக்கும் பேட்டைக்காரன் பார்ட்டி சார்பாக
 எங்களின் நெஞ்சார்ந்த நன்றியைத்
 தெரிவித்துக் கொள்கிறோம்

ஆண்: போராடினால் நாம் வெல்லலாம்
 வான் வீதியில் கால் வைக்கலாம்
 பூலோகமே பேர் சொல்லலாம்
 சாகாமலே நாம் வாழலாம்
 போராடினால் நாம் வெல்லலாம்
 வான் வீதியில் கால் வைக்கலாம்
 பூலோகமே பேர் சொல்லலாம்
 சாகாமலே நாம் வாழலாம்

ஆண்: இவள் முகம் பெருமை அடைந்திடும் மனதில்
 புதிய ஒளி பரவும் கவலைப் பறந்திடுமே
 வென்றேன் இப்போதே
 விலகிடு நீ இனிமேல் என்னைத் தொடாதே கொய்யால
 ஒரு கையில் கரி சோறு
 மறு கையில் தரமான பீரு
 கரை ஓரம் தனி வீடு கதைப்பேசுமே என் ஜோடியோடு
 நான் ஆணையிட மாறிடுமே அடடா
 நடைப்பாதையில் மலர்த் தூவிடடா
 இணை யார்எனப் புகழ் பாடிடடா
 ஹ ஹ கைக்கொள்ளாது காசடா
 வரலாற்றில் வைத்திடுவோம் தடமே
 தயங்காமல் எதையும் தருவோம் நாமே
 அவளுடன் என் காதலைப் பாரடா
 என்னை நோக்கிப் பெண் சொந்தம் மீண்டும் போதுமடா
 போதுமடா போதுமடா
 போராடினால் நாம் வெல்லலாம்
 வான் வீதியில் கால் வைக்கலாம்
 பூலோகமே பேர் சொல்லலாம்
 சாகாமலே நாம் வாழலாம்
Related Posts Plugin for WordPress, Blogger...