Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)
ஆரியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆரியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 பிப்ரவரி, 2011

ஓ மனமே ஓ மனமே


ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஓ மனமே ஓ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன்?
மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகள் தந்தது யார்?
பூக்கள் தானே யாசித்தோம்
கூலாங்கற்களை எறிந்தது யார்?
(ஓ மனமே..)

மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி
நம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து
முள்ளுக்குள் எறிந்தது காதலடி
கனவுக்குள்ளே காதலை தந்தாய்
கணுக்கள் தோரும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி நாயனமா?
தோல்விகள் இன்றி பூரணமா?
(ஓ மனமே..)

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி
(ஓ மனமே..)

படம்: உள்ளம் கேட்குமே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: ஹரிஹரன்

வியாழன், 6 ஜனவரி, 2011

பூக்கள் பூக்கும் தருணம்...



பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லை
உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லை
நேற்று வரை நேரம் போகவில்லை
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது என்னவோ
இரவும் விடியவில்லையே அது முடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

சரணம் ௧
வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை
பாவை வாழ்வின் ஒளிப்பேசுமே
நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேர் இன்றி விதை இன்றி வின் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
வாழ் இன்றி மான் இன்றி வருகின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள் மின்னுதே
இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம்
நெஞ்சுக்குள்ளும் இருக்கும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்

பூந்தளிரே......

சரணம் ௨
எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழைத் தூவுதே
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீ என்பேன்
யார் என்று அறியாமல்
பேர்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உறவானதேன்
ஏனென்று கேட்காமல் வருங்காலம் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
காதல் முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை வரைந்த பிறகும்
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே

இது எதுவோ ....
திரைப்படம் : மெட்ராசபட்டினம்
இசை : G.V.பிரகாஷ் குமார்
இயற்றியவர்: ந முத்துக்குமார்
வெளியான ஆண்டு : 2010

சுட்டா சூரியனே பொத்துகிட்டுப் போகலாம்டா! ஆஹ் ..ஆ ..ஆ ..



சுட்டா சூரியனே பொத்துகிட்டுப் போகலாம்டா! ஆஹ் ..ஆ ..ஆ ..

எம்பி எம்பி தொட்டா எட்டு திசை கட்டுப்பட்டு நிக்கலாண்டா !

அடிச்சா வச்ச குறி சிக்கனுமய்யோ

புடிச்சா சமுத்துரம் மாட்டணுமய்யோ

நெனச்சா நெனச்சது நடக்குமல்லோ

இழுத்தா பூமி நம்ம கையிலய்யய்யோ

அட கட்டறுத்து வீசுங்கடா காத்துப்போல

நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்துல

அட கட்டறுத்து வீசுங்கடா காத்துப்போல

நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்துல


சுட்ட சூரியன பொத்துகிட்டு போகலாண்டா

எம்பி எம்பி தொட்டா எட்டு திசை கட்டுப்பட்டு நிக்கலாண்டா


சரணம் 1

நேர்கொட்டுல எதிரியை வச்சு வச்சு

நெஞ்சு நிமித்தனும் பதக்கத்த தச்சு தச்சு

போர்பாட்டுனா அலைகள நைச்சு நைச்சு

பூமி பந்துக்கே நாம் தான் அச்சு அச்சு

வெளிச்ச மரமொன்னு மொலச்சாச்சு

நெருப்பு விதையோன்னு கையோட

நெனச்சு வரமொன்னு கெடச்சாச்சு

இனிப்பு மழை இப்போ நெஞ்சோட

அட கட்டறுத்து வீசுங்கடா காத்துப்போல

நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்துல

அட கட்டறுத்து வீசுங்கடா காத்துப்போல

நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்துல

மேகம் கருக்குது மழை வர பாக்குது

வீசி அடிக்குது காத்து இளங்காத்து


சரணம் 2


நெஞ் தேசத்தில் எகிறுது நெஞ்சு நெஞ்சு

நரம்போட்டத்தில் வலை ஒண்ணு நெஞ்சு நெஞ்சு

மனக்காட்டத்தில் எரிமலை நெஞ்சு நெஞ்சு

எந்த பங்கிலும் நீதான் மிஞ்சு மிஞ்சு

பறக்கும் தட்டு போல் லேசாக

கனக்கும் மனசும் தான் பரந்தாச்சு !

வெடிச்ச சுவரு போல் இருந்தேன் நான்

இப்போ வெடிப்பெல்லாம் பூவாச்சு !


பல்லவி 2

அட கட்டறுத்து வீசுங்கடா காத்துப்போல

நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்துல

அட கட்டறுத்து வீசுங்கடா காத்துப்போல

நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்துல

சுட்டா சூரியன பொத்துகிட்டு போகலாம்டா

ஆஹ் ஆ ஆ

எம்பி எம்பி தொட்டா எட்டு திசை கட்டுப்பட்டு நிக்கலாண்டா!

ஒ மனமே ஒ மனமே


ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன் ?
ஒ மனமே ஒ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ?
மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகளை தந்தது யார் ?
பூக்கள் தானே யாசித்தோம்
கூலான் கற்களை எரிந்தது யார் ?
ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன் ?

ஒ மனமே ஒ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ?


மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி
நம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து
முள்ளுக்குள் எரிந்தது காதலடி
கனவுக்குள்ளே காதலை தந்தாய்
கணுக்கால் தோரும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தல்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி நாயனமா ?
தோல்விகள் இன்றி பூரணமா ?
ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன் ?

ஒ மனமே ஒ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ?


இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி
ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன் ?
ஒ மனமே ஒ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ?
மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகளை தந்தது யார் ?
பூக்கள் தானே யாசித்தோம்
கூலான் கற்களை எரிந்தது யார் ?


ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன் ?

ஒ மனமே ஒ மனமே

படம்: உள்ளம் கேட்குமே
இசை:
ஹரிஷ் ஜெயராஜ்
பாடியவர்:
ஹரிஹரன்
பாடலாசிரியர்: வைரமுத்து
வெளியான ஆண்டு : 2005

அடடா வா அசத்தலாம்


அடடா வா அசத்தலாம்

i wanna move with you boy one more time
i wanna move with you boy one more time

அடடா வா அசத்தலாம்

I wanna fly with you boy one more time
I wanna fly with you boy one more time

போடா டேய் வாழ்க்கை ஒரு பூக்கூடைதான்
யார் கையில் வேணும்னாலும் பூ பூக்கும்தான்

அடடா வா அசத்தலாம்

i wanna move with you boy one more time
i wanna move with you boy one more time

அடடா வா அசத்தலாம்

I wanna fly with you boy one more time
I wanna fly with you boy one more time

எதுவந்தா எனக்கு என்ன
ஒதுங்காத நானும் சொன்னா

I wanna get so hot and naughty with you ohh... hO

கொண்டாடா வாழ்க்க கொண்டாடா
வாழ்கைக்கு வகுப்பு உண்டாடா

I wanna get so hot and naughty with you ohh hO

hO heyy heyy heyyy

சிறகு இருக்கும் போதிலும்
நடக்கும் பறவை நானில்ல
வாழ்க்கை முழுக்க வாழ்ந்திட
பூமி எனக்கு போதல
ஆகட்டும் பார்ப்போம்

come close to baby Let me drive you crazy

ஆடித்தான் தீர்ப்போம்

Oh come touch me baby
Boy I feel so sexy

போடா டேய் வாழ்க்கை ஒரு பூக்கூடைதான்
யார் கையில் வேணும்னாலும் பூ பூக்கும்தான்

அடடா வா அசத்தலாம்

i wanna move with you boy one more time
i wanna move with you boy one more time
I wanna fly with you boy one more time
I wanna fly with you boy one more time

படம்: சர்வம்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: இளையராஜா

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்


பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
யாம் ஒரு, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய
உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
அம்மையும் அப்பனும் தந்தடதா
இல்லை ஆதியின் வால் வினை சூழ்ந்ததா
இம்மையை நான் அறியாததா
இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்

ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா,
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருள்ளற்ற வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பத்தால் தாங்குவாய்
உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே.
Related Posts Plugin for WordPress, Blogger...