Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

சனி, 29 ஜனவரி, 2011

புஞ்சை உண்டு நஞ்சை


புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே
வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதி இல்லே - சனம்
நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லே - இது
நாடா இல்லே வெறும் காடா? - இதைக்
கேக்க யாரும் இல்லே தோழா - இது
நாடா இல்லே வெறும் காடா? இதைக்
கேக்க யாரும் இல்லே தோழா

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது?
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ
வீடின்றி வாசலின்றித் தவிக்குது
எத்தனை காலம் இப்படிப் போகும்?
என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்
என்றிங்கு வாழும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே

ஆத்துக்குப் பாதை இங்கு யாரு தந்தது?
தானாகப் பாதை கண்டு நடக்குது
காத்துக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது?
தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா?
கங்கையும் தெற்கே பாயாதா? காவிரியோடு சேராதா?
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா?

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே - இது
நாடா இல்லே வெறும் காடா? - இதைக்
கேக்க யாரும் இல்லே தோழா - இது
நாடா இல்லே வெறும் காடா? - இதைக்
கேக்க யாரும் இல்லே தோழா

படம் : உன்னால் முடியும் தம்பி (1988)
இசை : இளையராஜா
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
வரிகள் : புலமைபித்தன்

This feature is powered by Dishant.com - Home of Indian Music

உன்னால் முடியும் தம்பி


Song: unnaal mutiyum thampi - பாடல்: உன்னால் முடியும் தம்பி
Movie: unnaal mudiyum thambi - திரைப்படம்: உன்னால் முடியும் தம்பி
Singers: S.P. Balasubramaniam - பாடியவர்: S.P. பாலசுப்பிரமணியம்
Lyrics: Muthulingam Pulamaipithan - இயற்றியவர்: முத்துலிங்கம் புலமைப்பித்தன்
Music: Ilayaraja - இசை: இளையராஜா
Year: - ஆண்டு: 1988

உன்னால் முடியும் தம்பி தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தோளை உயர்த்து துங்கி விழும் நாட்டை எழுப்பு - உன்
தோளை உயர்த்து துங்கி விழும் நாட்டை எழுப்பு
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்

உன்னால் முடியும் தம்பி தம்பி - அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

நாளைய நாட்டின் தலைவனும் நீயே நம்பிக்கை கொண்டு வருவாயே
உனக்கென ஓர் சரித்திரமே எழுதும் காலம் உண்டு

உன்னால் முடியும் - அட உன்னால் முடியும் - ஆஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும் சாரய கங்கை காயாதடா
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும் காசுள்ள பக்கம் பாயாதடா
குடிச்சவன் போதையில் நிற்பான் குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா
கள்ளுக்கடைக் கடைக் காசிலே தாண்டா கட்சிக் கொடி ஏறுது போடா
கள்ளுக்கடைக் கடைக் காசிலே தாண்டா கட்சிக் கொடி ஏறுது போடா
மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்தச் செய்யோணும்

உன்னால் முடியும் - அட உன்னால் முடியும் - ஆஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

கல்லூரி பள்ளி இல்லாத ஊரை கையோடு இன்றே தீ மூட்டுவோம்
கல்லாத பேர்கள் இல்லாத நாடு நம் நாடு என்றே நாம் மாற்றுவோம்
இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்
அறிவெனும் கோபுரம் அங்கே நாம் காணுவோம்
வானம் உங்கள் கைகளில் உண்டு ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
வானம் உங்கள் கைகளில் உண்டு ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளணும்

க கஸ்ம தமத நிதநி
மமமமகஸ மமமம தம ததததநி நிதநிநிநிநி
ஸ்ஸ்ஸ் நிதநி தநித மதம
நிஸ்நி தஸ்நி தநித மஸக

உன்னால் முடியும் - அட உன்னால் முடியும் - ஆஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தோளை உயர்த்து துங்கி விழும் நாட்டை எழுப்பு - உன்
தோளை உயர்த்து துங்கி விழும் நாட்டை எழுப்பு
எதையயும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

This feature is powered by Dishant.com - Home of Indian Music

வியாழன், 27 ஜனவரி, 2011

ஹேராம்



ரகுபதி ராகவா ராஜ ராம் 
பதீத பாவனு சீத ராம் 

ராம் ராம் ஜெய் ஜெய் 
ராம் ராம் ராம் ராம் 
சலாமே ராம் ராம் 

ராம்  ராம் ஜெய்  ஜெய் 
ராம்  ம் ராம் ராம் 
சலாமே ராம் ராம்

நடந்ததை நினைத்திடு 
நல்லதை தொடங்கிடு 
இழந்ததை உணர்ந்திடு 
இருப்பதை காத்திடு 
அன்பெனும் ஓர் சொல் இது 
(n)ஆத்திகம் சொல் இன்பமாய் 
இங்கே யாரும் இல்லையே 

ராம் ராம் ஜெய் ஜெய் 
ராம் ராம் ராம் ராம் 
சலாமே ராம் ராம்

மறுமுறை மறுமுறை 
வருவாதாய் சொல்லி வருவாதாய் சொல்லி 
மாய்ந்தவர் மாய்ந்தவர் 
வந்ததே இல்லை வந்ததே  இல்லை 
ஒஹ் ஹோ 
தொடர்வது தொடர்வது 
நாமே நாளை நாமே நாளை 
வருவது வருவது 
வேர் ஒரு ஆளே 

நாளை அன்பெனும் தீபத்தை 
ஏற்றி நீ வைத்தால் 
நாளையும் எரியும் 
பேர் சொல்லும் ஜோதி ஜோதி 

ராம் ராம் ஜெய் ஜெய் 
ராம் ராம் ராம் ராம் 
சலாமே ராம் ராம்

ஒருவனும் ஒருவனும் 
ஒருத்தியும் கூட ஒருத்தியும் கூட 
வருவதே வருவதே 
நானும் நீயும் தான் நானும் நீயும் 
மனிதனை மனிதனை 
மனிதனாய் பாரு மனிதனாய் பாரு 
மதங்களும் மதங்களும் 
கண் காண ஓடும் 

தன்னாலே தாயகம் 
நாளையை நோக்கியே செல்லும் 
நாளையும் நமதென சாட்ச்சியம் 
சொல்லும் சொல்லும் 
அஹ்ஹா 

ராம் ராம் ஜெய் ஜெய் 
ராம் ராம் ராம் ராம் 
சலாமே ராம் ராம்

ராம் ராம் ஜெய் ஜெய் 
ராம் ராம் ராம் ராம் 
சலாமே ராம் ராம்

நடந்ததை நினைத்திடு 
நல்லதை தொடங்கிடு 
இழந்ததை உணர்ந்திடு 
இருப்பதை காத்திடு 
அன்பெனும் ஓர் soல் இது 
(n)ஆத்திகம் சொல் இன்பமாய் 
இங்கே யாரும் இல்லையே 

ராம் ராம் ஜெய் ஜெய் 
ராம் ராம் ராம் ராம் 
சலாமே ராம் ராம் 
ராம் ராம் ஜெய் ஜெய் 
ராம் ராம் ராம் ராம் 
சலாமே ராம் ராம் 

ஆளவந்தான் கவிதை



பெண்ண நம்பி பிறந்த போதே, தொப்புல் கொடிகள் அருபடுமே
மண்ணை நம்பும் மாமரம் ஒரு நாள் மாபெரும்புயலில் வேரருமே
உன்னை நம்பும் ஒரு புகழ் கூட ஒருபொழ்துன்னை கைவிடுமே
இதில் பெண்ணை மட்டும் நம்பும் நம்பகப்பிணணாள் வரையில் பின்வருமா???

சின்னஞ் சிறு வயதில்




ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...

சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி [*2]

மோகனப் புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நானோர் ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன் .... ம்... ம் ....
ஆ .... ஆ ....
கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான்
சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டுவிட்டேன்
மோதும் விரகத்திலே ... மோதும் விரகத்திலே செல்லம்மா ம்ம்ம்......

சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி


பாடல்: கண்ணதாசன்
இசை: இளையராஜா
குரல்: K.J.ஜேசுதாஸ், வாணி ஜெயராம், S.P.சைலஜா(?)
படம்: மீண்டும் கோகிலா(1981)

சனி, 22 ஜனவரி, 2011

தன்மானம் உள்ள நெஞ்சம்



தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் தாழாது ..
செவ்வானம் மின்னல் வெட்டி மண் மீது வீழாது...
காவேரி தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி ,,
காத்தாடி போலருண்டு வீழ்வதிள்ளயடி ..

அண்ணலின் உறவு கண்டு தோளில்கட்டிஆடுவேன்..
அந்நாளில் நானிருந்த வாழ்கைதான் தேடுவேன்...
அன்று சொன்னான் பாரதி சொல்லிய வார்த்தைகள் தோற்றதிள்ளயடி
என் எண்ணம் என்றைக்கும் தோல்வி என்பதை எற்றதிள்ளயடி......

ஞாயிறு, 9 ஜனவரி, 2011


உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு
இதை உரக்க சொல்வோம் உலகுக்கு

இனம் ஒன்றாக மொழி வென்றாக
புது வேலை எடுப்போம் விடிவுக்கு

நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால்
விருந்து வைப்போம் விண்ணுக்கு

உடல் மண்ணுக்கு .........

பிறந்த பிள்ளை நடந்து பழக
கையில் வேலை கொடுப்போம்

பிறந்த குழந்தை இறந்து பிறந்தால்
வாளால் கீறி புதைப்போம்

யுத்த சத்தம் கேட்டால் போதும்
முத்த சத்தம் முடிப்போம்

ரத்த குளத்தை நிரப்பி நிரப்பி
வெற்றி தாமரை பறிப்போம்

எங்கள் மண்ணை தொட்டவன் கால்கள்
எங்கள் நிலத்தில் உரமாகும்

எங்கள் பெண்களை தொட்டவன் கைகள்
எங்கள் அடுப்பில் விறகாகும்

உடல் தமிழ் மண்ணுக்கு ..............
இதை உரக்க சொல்வோம் உலகுக்கு
உயிர் தமிழுக்கு......................
உயிர் தமிழ் மக்களுக்கு..........

கவிதைக்கு பொருள்



கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா?
என் கனவோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா?
பேச்சுக்கு உயிர் தந்த சப்தங்கள் நீயா?
எனைப் பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா?
சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா?
எனைச் சாகாமல் செய்கின்ற சஞ்சீவம் நீயா?
பருவத்தின் தோட்டத்தின் முதல் பூவும் நீயா?
என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா?

இரவோடு நான் காணும் ஒளி வட்டம் நீதான்!
என் இரு கண்ணில் தெரிகின்ற ஒரு காட்சி நீதான்!
வார்த்தைக்குள் உள்ளாடும் உயிரோட்டம் நீதான்!
என் வாக்கியத்தில் இசையாகும் உயிர் மூச்சும் நீதான்!
தூரத்தில் மயிலிறகாய்த் தொட்டவளும் நீதான்!
என் பக்கத்தில் அக்கினியாய்ச் சுட்டவளும் நீதான்!
காதலுக்குக் கண் திறந்து வைத்தவளும் நீதான்!
நான் காதலித்தால் கண் மூடிக்கொண்டவளும் நீதான்!

சத்தத்தினால்




சித்தத்தினால்
உண்ட பித்தத்தினால்
காதல் யுத்ததினால்
எனது ரத்ததினால்
கவிதை எழுதி வைத்தேன் தோழி.
இரு கண்ணிருந்தால் வாசித்து போடி.

கண் பார்த்ததும்,
கெண்டை கால் பார்த்ததும்
உன்னை பெண் பார்த்ததும்,
தள்ளிப்பின் பார்த்ததும்
சுட்டாலும் மறக்காது நெஞ்சம்
முற்றும் சொன்னத்தில்லை தமிழுக்கு பஞ்சம்.

கண்டிப்பதால்,
என்னை நிந்திப்பதால்,
நெஞ்சை தண்டிப்பதால்,
தலையை துண்டிப்பதால்,
தீராது என் காதல் என்பேன்.
நீ தீ அள்ளி தின்னச்சொல் தின்பேன்.

உம் என்று சொல்,
இல்லை நில் என்று கொல்.
என்னை வாவென்று சொல்
இல்லை போவென்று கொல்.
உம் என்றால் உள்ளதடி சொர்க்கம்.
நீ இல்லை என்றால் இடுகாடு பக்கம்.

உன்னோடு நன் இருந்த



உன்னோடு நன் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுகையிலும் மறக்க்து கண்மணியே
தொண்ணுறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம்தான்
எண்ணுறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி

பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டியணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல் எல்லா
இடங்களில் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்

எது நியாயம் எது பாவம்
இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா
அதுபற்றி அறியவில்லை

யார் தொடங்க யார் முடிக்க
ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம்
இதுவரைக்கும் கேள்வியில்லை

அச்சம் கலைத்தேன் ஆசையினை நீ அனைத்தாய்
ஆடை கலைத்தேன் வெட்கத்தை நீ அனைத்தாய்

கண்ட திருக்கோலம் கனவாக மறைத்தாலும்
கடைசியிலே அழுத கண்ணீர்
கையில் இன்னும் ஒட்டுதடி...........................!!!

உன்னோடு நன் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுகையிலும் மறக்க்து கண்மணியே

வியாழன், 6 ஜனவரி, 2011

மழைபெய்யும் போதும்


பல்லவி
மழைபெய்யும் போதும்
நனையாத ஈரம்
இதுயென்ன மாயம்
யார் செய்ததோ?
நடக்கின்ற போதும்
நகராத தூரம்
இதுயென்ன கோலம்
யார் சொல்வதோ?
இது மின்னலா?
இல்லை தென்றலா?
அறியாமலே அலைபாயுதே
இது வண்ணமா?
இல்லை வன்மமா?
விளங்காமலே விளையாடுதே
சரணம் 01
சிலநேரம் மயிலிறகால்
வருடிவிடும் புனிதமிது
சிலநேரம் ரகசியமாய்த்
திருடிவிடும் கொடுமையிது
மூடாமல் கண்கள் ரெண்டும்
தண்டோரா போடும்
பேசாமல் மவ்னம் வந்து
ஆராரோ பாடும்
பகலிலே தாயைப் போல
தாலாட்டும் காதலே
இரவிலே பேயைப் போல
தலைகாட்டும் காதலே
சரணம் 02
தொலையாமல் தொலைந்துவிடும்
நிலமையிது முடிவதில்லை
விலகாமல் தொடர்ந்துவரும்
வெளிப்படையாய்த் தெரிவதில்லை
கொல்லாமல் கொல்லும் இது
பூப்போல சைவம்
சொல்லாமல் கொள்ளை இடும்
பொல்லாத தெய்வம்
குடையுதே ஏதோவொன்று
அதுதான் காதலே
உடையுதே உயிரும் சேர்ந்து
அதுதான் காதலே

படம்: ரேனிகுண்டா
இயக்கம்: ஆர்.பன்னீர் செல்வம்
இசை : கணேஷ்ராகவேந்திரா
பாடல் : யுகபாரதி

ஒரு கோரிக்கை

உங்களைப் போலில்லாமல்
நான் நானாகவே இருக்கிறேன்
உங்கள் மிதமான புன்முறுவலில்
உங்கள் மீதான விமர்சனங்களைத்
தெரிவிக்க மறுந்துவிடுகிறேன்
என்மீதுதான் உங்களுக்கு
எத்தனை அக்கறையென்று
நமக்கிடையேயான பொது நண்பர்களிடம்
புளகித்துப் பேசுகிறேன்
நீங்கள் சாட்டைகொண்டு வருபவராயினும்
நான் சலாம் வைக்கத் தவறுவதில்லை
என்னை நீங்கள் என்னவாக
புரிந்திருப்பீர்கள் என்று
ஒருபோதும் யோசிப்பதில்லை
நட்பைக் கொண்டாடி பழகியதாலும்
அந்த நட்புக்குள் முளைவிடும்
கள்ளிச்செடிகளைக் கண்ணுறுவதில்லை
ஆம் என் அத்யந்த நண்பர்களே
உங்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்
என் பிரார்த்தனை மூலமாவது
நீங்களும் நானும் இப்போது போல
எப்போதுமிருக்க விரும்புகிறேன்
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
என்போல் இருக்க நினைத்து
இல்லாமல் போகாதீர்கள்

பேசுகிறேன் பேசுகிறேன்


பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதைத் தொலைக்காதே
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா....
(பேசுகிறேன்..)

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே.. ஓஹோ
முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே....
வளைவில்லாமல் மலை கிடையாது
வலியில்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா.....
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..

காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னைக் காக்கவே தானாய் வளருமே
பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்ச நேரம்தானே
உன்னைத் தோண்டினால்
இன்பம் தோன்றுமே
விடியாமல்தான் ஓர் இரவேது
வடியாமல்தான் வெள்ளம் கிடையாது
வருந்தாதே வா...
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..
(பேசுகிறேன்..)

படம்: சத்தம் போடாதே
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: நேகா பேசின்

நிலா காய்கிறது.....



நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

.......... நிலா காய்கிறது .........

அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்

.......... நிலா காய்கிறது .........

படம் : இந்திரா
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர் : ஹரிணி / ஹரிஹரன்
வரிகள் : வைரமுத்து

ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்



ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன்
கண்மணி என் கண்மணி!
ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு
கண்மணி என் கண்மணி! (2)

பச்சை குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்
பாலக் குடிச்சுபுட்டு பாம்பாகக் கொத்துதடி!

(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)

ஏது பந்தபாசம்? எல்லாம் வெளி வேஷம்!
காசு பணம் வந்தா நேசம் சில மாசம்!
சிந்தினேன்.. ரத்தம் சிந்தினேன்
அது எல்லாம் வீண் தானோ?
வேப்பிலை கருவேப்பிலை அது யாரோ நான் தானோ?
என் வீட்டு கன்னுக்குட்ட, என்னோட மல்லுக்கட்டி,
என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி!
தீப்பட்ட காயத்துல தேள் வந்து கொட்டுதடி கண்மணி..... கண்மணி!


(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)


நேத்து இவன் ஏணி இன்று இவன் ஞானி!
ஆளைக் கரை சேர்த்து ஆடும் இந்தத் தோணி!
சொந்தமே ஒரு வானவில் அந்த வண்ணம் கொஞ்ச நேரம்!
பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம்!
பணங்காசக் கண்டுபுட்டா புலிகூடப் புல்லைத் தின்னும்
கலி காலாமாச்சுதடி கண்மணி என் கண்மணி!
அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போச்சுதடி கண்மணி..... கண்மணி!

(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)

படம் : படிக்காதவன்
இசை: இளையராஜா
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்
பாடல் : வைரமுத்து

மனித வணக்கம் - கமல்ஹாசன் கவிதைகள்

தாயே... என் தாயே!
நான் மீட்ட சோலே!
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே
என் மனையாளின்
மானசீகச் சக்கரவர்த்திசரண்
தகப்பா – ஓ – தகப்பா
நீ என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதையாய் இன்று
புரியா வரி இருப்பின் கேள்...
பொழிப்புரை நான் சொல்கிறேன்
தமையா – ஓ – தமையா
என் தகப்பனின்
சாயல் நீர்
அச்சகம் தான் ஒன்றிங்கே –
அர்த்தங்கள் வெவ்வேறு
தமக்காய் – ஓ – தமக்காய்
தோழி... தொலைந்தே போனாயே –
துணை தேடிப் போனாயோ...
மனைவி – ஓ – காதலி
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக் குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சுமங்கள்
புரியும்வரை.
மகனே – ஓ – மகனே
என் விந்திட்ட விதையே...
செடியே... மரமே... காடே...
மறுபிறப்பே
மரண சௌகர்யமே... வாழ்...
மகளே – ஓ – மகளே...
நீயும் என் காதலியே...
எனதம்மை போல்
எனைப் பிரிந்தும் நீ
இன்பம் காண்பாயோ...
காதலித்த கணவனுக்குள்
எனைத் தேடுவாயோ...
நண்பா – ஓ – நண்பா...
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடம் அவ்விதமே.
பகைவா – ஓ – பகைவா...
உன் ஆடையெனும் அகந்தையுடன்
என் அம்மணத்தைக் கேலி செய்வாய்
நீ உடுத்து நிற்கும்
ஆடைகளே
உனதம்மணத்தின் விளம்பரங்கள்
மதமென்றும் குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகிவிடும்
நிர்வாணமே தங்கும்
வாசகா – ஓ – வாசகா...
என் சமகால சகவாசி
வாசி...
புரிந்தால் புன்னகை செய்
புதிர் என்றால் புருவம் உயர்த்து
பிதற்றல் எனத் தோன்றின்
பிழையும் திருத்து...
எனது கவி உனதும்தான்
ஆம்...
நாளை உன்வரியின்
நான் தெரிவேன்.

கமல்ஹாசன் கவிதைகள்



தமிழ் மகளுக்கு - கமல்ஹாசன் கவிதைகள்

தமிழ் மகளுக்கு
தேடித் தேடி மருத்துவம் செய்தும்
மாறாதிந்த சாதி ஜுரம்.
கேடிகளாயிரம் கூட்டணி சேர்ந்தது
வியாதியில் வந்து முடிந்தது காண்
காவியும் நாமமும் குடுமியும் கோஷமும்
கண்டு மயங்கும் மந்தைகளாய்
ஆகிப் போனதில் வந்த விளைவுகள்
சொல்லிப் புரியும் வேளையிலே
ஆரிய வேடத்தை திராவிடன் பூண்டதில்
காரியம் கெட்டுப் போனது காண்
ஓசையும் பூசையும் பார்ப்பனன் சொல்படி
ஆயிர மாண்டுகள் செய்ததனால்
ஆகமம் பழகிப் போனது காண்
அன்றொரு பெரியவர் சாடிய சாடலில்
காவியின் வண்ணம் சற்றே மாறி
கறுப்பாய்ச் சிவப்பாய் திரியுது காண்
சாதியுஞ் சாமியும் சாராயம் போல்
சந்தைக் கடையில் விற்குது காண்
சர்க்கார் எத்தனை மாறி வந்தாலும்
மாறா வர்ணம் நாலும் காண்
புத்தன் சொன்ன தம்ம பதத்தில்
பாதி மட்டுமே பிரபலம் காண்

நாபிக்கொடி - கமல்ஹாசன் கவிதைகள்

அமலை அன்னை அவள் ஆரணாகாரி
அந்திப் போதனை யானுட னாடுவள்
உமையாள் உடையாள் உயிர்கிழத்தி
உரிமையுடன் தவங்கலைக்கும்
ஆட்டணத்தி மனங்கொணும் நேர்முலையாள்
தினங்காணக் கல்லாக வீற்றிருப்பள்
கனந்தாங்கும் களத்தியாய் கலவிசெய்கையிலென்
தடந்தோளைக் கடித்துச் சந்தோஷம்
சொல்லிடுவள் நாபிக்கொடி நறுக்கியெனை
நர மேட்டிலொரு லோபத்தெருவினிலே
மறுபடி எறிந்திடுவள் சப்பிடும்
வாய்கதற முலைபிடுங்கி யகற்றி
செப்பிடும் வார்த்தைகள் மெல்லத் தந்திடுவள்
நித்தமு மாறிடும் ஜீவ தாளத்தில்
என்னுடன் ஆடிடும் ஆசைநாயகி
காமுகி க்ராதகி
மாதவி கண்ணகி ஸ்நேகிதி
சோதரி பல்முகி பாதகி

காதலி - கமல்ஹாசன் கவிதைகள்

சரியாகச் சொன்னால்
20 வருடங்களுக்குப் பிறகு
மீண்டும் உனக்கொரு காதல் கடிதம்.

உன் விலாசம் எப்படியும் மாறும் என்ற
காரணத்தினாலோ என்னவோ
உனது விலாசத்தை காதலி என்பதோடு
அன்று விஸ்தீரணம் செய்யாது விட்டுவிட்டேன்.

காதலி... மீண்டும் உனக்கொரு கடிதம்.
நான் முன்பு எழுதிய கடிதம்உனக்கல்ல

எனினும் இத்துடன்அதையும் இணைத்துள்ளேன்.

காதல் ரிஷிகளின் மூலம் பார்ப்பதுஅனாசாரமாகாது.

பார்த்துப் புரிந்துகொள்.பழைய கடிதத்தின் சொந்தக்காரியிடம்
இந்தக் கடிதத்தைக் காண்பிக்க வேண்டியஅவசியமில்லை.
அவளுக்கு ஆர்வமும் இருக்க வாய்ப்பில்லை.

காதல் மாறாதது என்பது உண்மை.

ஆள் மாறினாலும்
இல்லாள் மாறினாலும்
காதல்மாறுவதில்லை.

கூடி வாழ்வதும் காதலில் கூடுவதும்

இருவேறு நிலைகள்.அவள் என்னவள்
அவன் என்னவன் எனஅறம் என்ற பெயரால்
அடையாளச்சூடு வைக்கும் மிருகத்தனம்
மனிதனுக்கே உரித்தானது.

நமது ஆறாவது உணர்வைபோற்று.

பண்டிதர்கள் மெதுவாகஉறுதியான மற்ற
ஐந்து உணர்வுகளின்உத்வேகம் குறைந்து
வருவதை உணர மறுக்கிறார்கள்.

அந்த மறுப்பில்என் (நம்) காதலும் சிக்குண்டுதவிக்கிறது.
மௌன விரதம் பூண்டவர்கள் சமிக்ஞை செய்து

கவிதையை வைக்கிறார்கள்.

நான் காதலன் கவிஞன் ஆதலால்

காதலால் மீண்டும்உனக்கொரு கடிதம்.
இதில் மறுபடியும் விலாசமில்லாமல்

விட்டிருப்பதுவிபத்தல்ல நீ
விலாசத்தை மாற்றிக்கொண்டே
யிருக்கிறாய் நான் என்ன செய்ய?
அதே நான்தான்,
நீ மட்டும் வேறு!

உன்னை யாம் தலைமைக்கு - கமல்ஹாசன் கவிதைகள்


உன்னை யாம் தலைமைக்கு உயர்த்தியதால்

நீ எம்மிற் சிறந்தவன் எனப் பொருள் கொள்ளாதே
அப்பொருளை ஏற்கும் பணிவு எமக்கில்லை என உணர்.
எம் மொழி எம் நிறம் என்ற விசாலமற்ற அன்பு காரணமாக,எவ்வழி எனத் தெரியாமலே எமை
நடத்திச் செல்லப் பணிந்தோம் உன்னை.
இக்கடிவாளங்களும், சேணங்களும், எமக்குப் பொருந்தச் செய்யப்பட்டவை அல்ல.அவை எமது நாட்டுத் தயாரிப்பல்ல. எமது அளவல்ல. வேறுமட்டக் குதிரைகளின் அளவு. எமது வாய் சிறிதுஇவ்வமைப்பில், யாம் எக்கணம் நினைப்பினும் தலையை உருவிக் கொண்டோடுவோம்பிழையாகப் பூட்டப்பட்ட எமது கடிவாளத்தில் இருந்து மீண்டு.
வலது வார்பட்டையை இழுத்தால் இன்று இடதுபுறம் திரும்புவோம்ஓர் சிலிர்ப்பில் அகலும் கண்மறைப்பான்கள்.அப்போது தென்படுமே

வெவ்வேறு பாதைகள்!அவற்றில்,
எவற்றிற்கு யாம் பாதசாரிகள்?எமக்கும் தெரியாது
உனக்கும் தெரியாது.
நீ அமர்ந்திருக்கும் பீடத்தின் அசௌகரியம்,

விபத்தல்ல.யாமதை அமைத்ததே அப்படி.
நீ உறங்கிவிடாதிருக்க, ஓரிடம் அமர்ந்து விடாதிருக்க,
யாம் வடித்த பீடமது.
உன்னை அதில் ஏற்றுவதில் யாம் காட்டிய ஆர்வத்தை மிகும்,உன்னை வீழ்த்துவதில் யாம் காட்டப்போவது.
தனித்திருத்தல் விழித்திருத்தல், ஒரு புறமிருக்கட்டும்.

எம்மைப் போல் பசித்தும் இருக்கக் கல்.
நாயகம் எமதா? உனதா?என்ற சந்தேகத்திற்கிடமின்றி,

இது எமது நாயகம்.
இடது வாரை இழுத்துப்பார், வலது புறம் திருப்புவோம்;
இந்த அமைப்பும், எமக்கும் உனக்கும், சாஸ்வதமில்லை;மாறும், ஏதேனும் ஒரு விபத்தின் மூலம்.

பூக்கள் பூக்கும் தருணம்...



பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லை
உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லை
நேற்று வரை நேரம் போகவில்லை
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது என்னவோ
இரவும் விடியவில்லையே அது முடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

சரணம் ௧
வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை
பாவை வாழ்வின் ஒளிப்பேசுமே
நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேர் இன்றி விதை இன்றி வின் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
வாழ் இன்றி மான் இன்றி வருகின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள் மின்னுதே
இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம்
நெஞ்சுக்குள்ளும் இருக்கும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்

பூந்தளிரே......

சரணம் ௨
எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழைத் தூவுதே
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீ என்பேன்
யார் என்று அறியாமல்
பேர்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உறவானதேன்
ஏனென்று கேட்காமல் வருங்காலம் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
காதல் முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை வரைந்த பிறகும்
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே

இது எதுவோ ....
திரைப்படம் : மெட்ராசபட்டினம்
இசை : G.V.பிரகாஷ் குமார்
இயற்றியவர்: ந முத்துக்குமார்
வெளியான ஆண்டு : 2010

கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்



கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா?
ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை

ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை

கவிதை இலக்கியம் பேசினளாயின்
காசை மதியாள் எச்சரிக்கை
உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை

அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக்கோள்
கூட்டல் ஒன்றே குறியென்றானபின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்

உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்?
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்

காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்
இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்று
இயற்றத் துணியும்
அணி சேர்த்துக்கொள்.

கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்தது போலக்
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்

காமக் கழிவுகள் கழுவும் வேளையும் கூட
நின்றவன் உதவிட வேண்டும்
சமயலின் போதும் உதவிட வேண்டும்
சாய்ந்து நெகிழ்ந்திடத் திண்தோள் வேண்டும்

மோதிக் கோபம் தீர்க்க வசதியாய்
பாறைப் பதத்தில் நெஞ்சும் வேண்டும்
அதற்குப் பின்னால் துடிப்புள்ள இதயமும்
அது ரத்தம் பாய்ச்சி நெகுழ்திய சிந்தயும்
மூளை மடிப்புக்கள் அதிகம் உள்ள
மேதாவிலாச மண்டையும் வேண்டும்

வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்
நேர்மை வேண்டும் பக்தியும் வேண்டும்
எனக்கெனச் சுதந்திரம் கேட்கும் வேளையில்
பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்

இப்படிக் கணவன் வரவேண்டும் என
ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்
வரந்தருவாள் என் வரலட்சுமியென
கடும் நோம்பு முடிந்ததும் தேடிப் போனேன்

பொடி நடைபோட்டே இடை மெலியவெனக்
கடற்கரை தோறும் காலையும் மாலையும்
தொந்தி கணபதிகள்திரிவது கண்டேன்
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்

மூத்த அக்காள் கணவனுக்கு முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
அக்காளில்லா வேளையிலே அவன் சக்காளத்தி வேண்டும் என்றான்
எக்குலமானால் என்ன என்று வேற்று மதம் வரை தேடிப்போனேன்

வரவரப் புருஷ லட்சணம் உள்ளவர்
திருமணச் சந்தயில் மிகமிகக் குறைவு
வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
உறங்கிக் கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன் ஆள் எப்படி?
பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடப்பது உண்டோ?
அதுவும் இதுவும் உதுவும் செய்யும் இனிய கணவர் யார்க்குமுண்டோ?
உனக்கேனுமது அமையப்பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான் நீ
அதுபோல் எனக்கும் அமையச் செய்யேன்
ஸ்ரீ வரலக்ஷமி நமோஸ்துதே

கமல்ஹாசன் கவிதைகள்

அனாதைகள்

அனாதைகள் கடவுளின்
குழந்தைகள் என்றல்
அந்த கடவுளுக்கும்
அவசியம் வேண்டும்
குடும்பக்கட்டுப்பாடு...!

பெருஞ்சிங்கம்

ஞானமெனும் பெருஞ்சிங்கம்
எறும்புகளை உண்பதில்லை,
இறந்தபின் சிங்கத்தை
எறும்புகள் உண்பதுண்டு.

மகளே

பிரதிபிம்பம் பழங்கனவு
மறந்த என் மழலையின் மறுகுழைவு
மகளே
உனக்கு என் மூக்கு என் நாக்கு!

என் தாய் பாடித் தூங்கவைத்த தாலாட்டு
தினம் உனக்காய் நான் படிப்பேன் என் குரலில்
பாசத்தில் எனைப் பெற்றோர் செய்த தவறெல்லாம்
தவறாமல் நான் செய்வேன்
என் ரத்தம் எனது சதை எனக் கூவி
உன் சித்தம் உன் போக்கை இகழ்ந்திடுவேன்
உன் போக்கு இதுதான் என நீ மறுக்க
உடைந்த மனதுடனே மூப்பெய்வேன்
என் அப்பனைப் போல்!

அன்று - சாய் நாற்காலியில் வரப்போகும்
கவிதைகளை இன்றே நான் எழுதிவிட்டால்
அன்று - நான் பேசலாம் உன்னோடு

எழுதிவிட்டேன்
வா - பேச!

நச்சு

நாகத்தின் நச்சதனைத்
தூற்றுவார் தூற்றிடினும்
நச்சதற்குக் கேடயம்போல்
தற்காப்பு ஆயுதமே
பறவைக்கு அலகினைப்போல்
பசுமாட்டுக்குக் கொம்பைப்போல்
நமக்கெல்லாம் பொய்யைப்போல்
தப்பிக்கும் ஓர்வழிதான்
நாகத்தின் நச்சென்பேன்

மௌனத்தின் வலி


காக்க ஒரு கனக (AK) 47
நோக்கவும் தாக்கவும் ஒரு நொடி நேரம்
தோற்கவும் அதே கண நேரம்தான்
ஈயம் துளைத்துக் கசிந்து சிவந்த
காயம் தொட்டுக் கையை நனைத்து
விண்ணே தெரிய மண்ணில் சாய்ந்தேன்
முன் காக்க மறந்த அமைதியைக் காத்து.
மாட்டுத் தோலில் தாய்மண் அறைபட
பூட்ஸுக் கால்களால் கடந்தனர் பகைவர்.
விட்ட இடத்தில் கதையைத் துவங்கச்
சட்டென இன்னொரு குழந்தை பிறக்கும்
அதுவரை பொறுத்திரு தாயே, தமிழே
உதிரம் வடியும் கவிதை படித்து…

புத்தம் புது பூமி.. வேண்டும்..


புத்தம் புது பூமி.. வேண்டும்..
நித்தம் ஒரு வானம் வேண்டும்...
தங்க மழை பெய்ய வேண்டும்...
தமிழில் குயில் பாட வேண்டும்....

புத்தம் புது பூமி.. வேண்டும்..
நித்தம் ஒரு வானம் வேண்டும்...
தங்க மழை பெய்ய வேண்டும்...
தமிழில் குயில் பாட வேண்டும்....

புத்தம் புது பூமி.. வேண்டும்..
நித்தம் ஒரு வானம் வேண்டும்...
தங்க மழை பெய்ய வேண்டும்...
தமிழில் குயில் பாட வேண்டும்....

புத்தம் புது பூமி.. வேண்டும்..
நித்தம் ஒரு வானம் வேண்டும்...
தங்க மழை பெய்ய வேண்டும்...
தமிழில் குயில் பாட வேண்டும்....

சொந்த ஆகயம் வேண்டும்....
ஜோடி நிலவொன்று வேண்டும்....
நெற்றி வேர்க்கின்ற போது அந்த
நிலவில் மழை பெய்ய வேண்டும்....

வண்ண விண்மீன்கள் வேண்டும்....
மலர்கள் வாய் பேச வேண்டும்....
வண்டு உட்காரும் பூமேலே நான்
வந்து உட்காரும் வரம் வேண்டும்....

கடவுளே கொஞ்சம் வழிவிடு - உன்
அருகிலே ஓர் இடம் கொடு....

புன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு..........
பூமியில் சில மாறுதல்தனை வரவிடு................!

புத்தம் புது பூமி.. வேண்டும்..
நித்தம் ஒரு வானம் வேண்டும்...
தங்க மழை பெய்ய வேண்டும்...
தமிழில் குயில் பாட வேண்டும்....

யுத்தம் இல்லாத பூமி.. ஒரு
சத்தம் இல்லாமல் வேண்டும்...
மரணம் காணாத மனித இனம் - இந்த
மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்........

பஞ்சம் பசி போக்க வேண்டும்....
பாலைவனம் பூக்க வேண்டும்....
சாந்தி சாந்தி என்ற சங்கீதம் - சுகம்
ஏந்தி.. ஏந்தி வந்து விழ வேண்டும்......!

போனவை அது போகட்டும்.....
வந்தவை இனி வாழட்டும்......
தேசத்தின் எல்லை கோடுகள்.. அவை தீரட்டும்....
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்.......!

புத்தம் புது பூமி.. வேண்டும்..
நித்தம் ஒரு வானம் வேண்டும்...
தங்க மழை பெய்ய வேண்டும்...
தமிழில் குயில் பாட வேண்டும்....

புத்தம் புது பூமி.. வேண்டும்..
நித்தம் ஒரு வானம் வேண்டும்...
தங்க மழை பெய்ய வேண்டும்...
தமிழில் குயில் பாட வேண்டும்....

படம் : திருடா திருடா
கவிஞர் : வைரமுத்து
பாடியவர் : சித்ரா, மனோ
இசை : ARR
==========================================

கடவுள் பாதி.. மிருகம் பாதி......


கடவுள் பாதி.. மிருகம் பாதி......
கலந்து செய்த கலவை நான்.....

வெளியே மிருகம்... உள்ளே கடவுள்...
விளங்க முடியா கவிதை நான்.....

மிருகம் கொன்று.... மிருகம் கொன்று....
கடவுள் வளர்க்கப்பார்க்கின்றேன்..... - ஆனால்...

கடவுள் கொன்று... உணவாய் தின்று..
மிருகம் மட்டும் வளர்கிறதே..........

நந்தகுமாரா... நந்தகுமாரா... நாளை மிருகம்.. கொல்வாயா...?
மிருகம் கொன்ற....... எச்சம் தின்று....... மீண்டும் கடவுள் செய்வாயா...?
குரங்கிருந்து மனிதன் என்றால் மனிதன் இறையாய் ஜனிப்பானா..?
மிருக ஜாதியில் பிறந்த மனிதா.. தேவ ஜோதியில் கலப்பாயா..?

நந்தகுமாரா.......................

கடவுள் பாதி.. மிருகம் பாதி......
கலந்து செய்த கலவை நான்.....

வெளியே மிருகம்... உள்ளே கடவுள்...
விளங்க முடியா கவிதை நான்.....

மிருகம் கொன்று.... மிருகம் கொன்று....
கடவுள் வளர்க்கப்பார்க்கின்றேன்...
கடவுள் கொன்று... உணவாய் தின்று..
மிருகம் மட்டும் வளர்கிறதே..........!

கடவுள் பாதி.. மிருகம் பாதி......
கலந்து செய்த கலவை நான்.....
காற்றில் ஏறி... மழையில் ஆடி...
கவிதை பாடும் பறவை நான்.....!

கடவுள் பாதி.. மிருகம் பாதி......
கலந்து செய்த கலவை நான்.....
காற்றில் ஏறி... மழையில் ஆடி...
கவிதை பாடும் பறவை நான்.....!

ஒவ்வொரு துளியும்... ஒவ்வொரு துளியும்
உயிரின் வேர்கள் குளிர்கிறதே...

எல்லா துளியும் குளிர்கிறபோது
இரு துளி மட்டும் சுடுகிறதே.....?

நந்தகுமாரா... நந்தகுமாரா... மழைநீர் சுடாது... தெரியாதா...
கன்னம் வழிகிற கண்ணீர்த்துளிதான் வெண்ணீர் துளியென அறிவாயா....?
சுட்ட மழையும்.. சுடாத மழையும் ஒன்றாய் கண்டவன் நீதானே...
கண்ணீர் மழையில்..... கண்ணீர் மழையில்..... குளிக்க வைத்தவன் நீதானே.......


படம் : ஆளவந்தான்
கவிஞர் : வைரமுத்து
பாடியவர் : கமல்ஹசன்
இசை : சங்கர் மஹாதேவன்
==========================================

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி


காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

ஒ...காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே
ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே

ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே
ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே

ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே
ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே

நச்சு மனம் மச்சினியோடு மச்சினியோடு மருகுதடி
அவ நெத்தியில வச்ச பொட்டுல - என்
நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ
நெத்தியில வச்ச பொட்டுல என்
நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ
பார்வையில் எலும்புக பல்பொடி ஆச்சே

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ?

யாரோ எவளோ யாரோ எவளோ
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

தண்டை அணிஞ்சவ
கொண்டை சரிஞ்சதும்
அண்டசராசரம் போச்சு!

வண்டு தொடாமுகம்
கண்டு வனாந்தரம்
வாங்குதே பெருமூச்சு!

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி...

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

உச்சந்தல வகிடு வழி
ஒத்த மனம் அலையுதடி
ஒதட்டு வரி பள்ளத்துல
உசிரு விழுந்து தவிக்குதடி

பாழாப் போன மனசு
பசியெடுத்து
கொண்ட பத்தியத்த முறிக்குதடி

பாராங்கல்ல சொமந்து
வழி மறந்து - ஒரு
நத்தக்குட்டி நகருதடி!

கொண்டக் காலு செவப்பும்
மூக்கு வனப்பும் - என்னக்
கிறுக்குன்னு சிரிக்குதடி!

ஹே... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

யாரோ எவளோ யாரோ எவளோ
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

தண்டை அணிஞ்சவ
கொண்டை சரிஞ்சதும்
அண்ட சராசரம் போச்சு
வண்டு தொடாமுகம்
கண்டு வனாந்தரம்
வாங்குதே பெருமூச்சு

ஏ..ஹே...ஏர் கிழிச்ச தடத்து வழி
நீர் கிழிச்சு போவது போல்
நீ கிழிச்ச கோட்டு வழி
நீளுதடி எம்பொழப்பு

ஊரான் காட்டு கனியே
ஒன்ன நெனச்சு -
நெஞ்சு சப்புக்கொட்டித் துடிக்குதடி!

யாத்தே இது சரியா இல்ல தவறா
நெஞ்சில் கத்திச் சண்டை நடக்குதடி!
ஒன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி
கெட்ட விதி வந்து சிரிக்குதடி

ஒ...காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

படம் : ராவணன் (2010)
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
பாடியவர்கள் : சங்கர் மகாதேவன், அனுராதா ஸ்ரீராம்

தமிழ் செம்மொழி மாநாடு 2010


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னர்,
யாதும் ஊரே, யாவரும் கேளிர்
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்... உழைத்து வாழ்வோம்....

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்

போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே

அமைதி வழி காட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்

செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்...

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்...

ஓல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு

ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே

வளையாபதி குண்டலகேசியும்

செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...

கம்ப நாட்டாழ்வாரும்
கவியரசி அவ்வை நல்லாளும்
எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
புத்தாடை அனைத்துக்கும்
வித்தாக விளங்கும் மொழி

செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனியமொழி

ஓதி வளரும் உயிரான உலக மொழி...
ஓதி வளரும் உயிரான உலக மொழி...
நம்மொழி நம் மொழி... அதுவே

செம்மொழியான தமிழ் மொழியாம்...
தமிழ் மொழி... தமிழ் மொழி... தமிழ் மொழியாம்...

செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...

தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்...
தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்...

வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே...
வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே...

ஆல்பம்: தமிழ் செம்மொழி மாநாடு 2010
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: AR ரஹ்மான், TM சௌந்தர்ராஜன், கார்த்திக், ஹரிணி, சின்மயி, ஹரிஹரன், யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஜேசுதாஸ், நரேஷ் ஐயர், P சுசீலா, GV பிரகாஷ்குமார், TL மஹாராஜன், பிளாஸே, சுருதி ஹாசன், TM கிருஷ்ணா, ஸ்ரீநிவாஸ், சின்ன பொண்ணு, அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, நித்யாஸ்ரீ, சௌம்யா, MY அப்துல் கானி, காஜாமொஹிதின், சபுமொய்தீன், AR ரெஹனா, பென்னி தயால், தேவன் ஏகாம்பரம், ஷ்வேதா மோகன், அனுராதா ஸ்ரீராம், உன்னி மேனன்

பூவே பூச்சூடவா


பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா

(பூவே)

அழைப்பு மணி இந்த வீட்டில் கேட்டாலும்
ஒடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை
கண்ணில் வெந்நீரை வார்த்தேன்
கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
தீப தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் நெய்யாக வந்தாய்
இந்த கண்ணில் சோகமில்லை இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

(பூவே)

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே
பொன்முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்தப் பொன் மானை பார்த்துக் கொண்டே
சென்று நான் சேர வேண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்

(பூவே)


படம்: பூவே பூச்சூடவா
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா

கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே....



பெண் குரல்:- கடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடவோ தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வமன்றி யாரும் இல்லை

குழு: தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வமன்றி யாரும் இல்லை

பெண் குரல்: சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா

குழு: ஊனம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா

பெண் குரல்: ஜீவன் யாரும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே

குழு: ஜீவன் யாரும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே

பெண் குரல்: இது தான் இயற்கை தந்த பாசபந்தமே, கண்ணிழந்த பிள்ளை ஆனால் உன்னை
கண்ணீருக்கும் பேர்கள் கண்டது இல்லை! ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்

குழு: ஆளுக்கொரு ஜாதியில்லையே அது போல் உயிர் பிறப்பில்!


படம்: அன்புள்ள ரஜினிகாந்த்
பாடியது:- லதா ரஜினிகாந்த்
இசை:- இளையராஜா

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது...


பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
30 நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில்
இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்
(இது எப்படி..)
(பூவுக்கெல்லாம்..)

நிலவை பிடித்து எறியவும் முடியும்
நீல கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்
காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை

ஒற்றை பார்வை உயிரை குடித்தது
கற்றை குழல் கையீடு செய்தது
மூடும் ஆடை முத்தமிட்டது
ரத்தமெல்லாம் சுண்டிவிட்டது
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்துவிட்டது
இதயம் இதயம் மலந்ர்துவிட்டது
இசை என் கதவு திறந்துவிட்டது
காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை
(பூவுக்கெல்லாம்..)

படம்: உயிரோடு உயிராக
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், கேகே, ஹரிணி
வரிகள்: வைரமுத்து

ஆயிரம் ஜன்னல் வீடு


ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
அடை காக்கிற கோழியப் போலவே
இந்த கூட்டைக் காப்பது யாருங்க
அழகான அம்மனப் போலவே
இங்க அப்பத்தாவப் பாருங்க

ஏய் சுத்துறான் சுத்துறான் காதுலத்தான் சுத்துறான்
வீசுறான் வீசுறான் வலையத்தானே வீசுறான்

பாசமான புலிங்க கூட பத்து நாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்
(ஆயிரம்..)

வீரபாண்டித் தேரப் போல இந்த வீட்டப் பாரு பாரு
வீரமான வம்சத்தாளு இவங்களப் போல யாரு
சித்தப்பாவின் மீசையைப் பார்த்தா
சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும்
சித்தியோட மீன் குழம்புக்கு
மொத்த குடும்பம் அடங்கும்
கோழி வெரட்ட வைரக்கம்மல் கழட்டிதானே எறிவாங்க
திருட்டுபயல புடுச்சுக்கட்ட கழுத்துச் செயின் அவுப்பாங்க

காட்டுறான் காட்டுறான் கலர்படம் காட்டுறான்
நீட்டுறான் நீட்டுறான் வாயரொம்ப நீட்டுறான்

சொந்த பந்தம் கூட இருந்தா நெருப்புல நடக்கலாம்
வேலு அண்ணன் மனசுவச்சா நெருப்பையே தாண்டலாம்
(ஆயிரம்..)

சொக்கம்பட்டி ஊருக்குள்ள ஓடுதொரு ஆறு ஆறு
ஆத்துக்குள்ள ஐரமீனும் சொல்லுது ஒன் பேரு
சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி சொல்லும் தாத்தாவோட பேரு
வாசக்கதவு தொரந்தே இருக்கும் வந்த சொந்தம் திரும்பும்பாது
வேட்டையாடப் போனா ஐயா நூறு சிங்கம் புடிப்பாரு

ஐயோ வைக்கிறான் வைக்கிறான் ஐசத்தூக்கி வைக்கிறான்
கட்டுறான் கட்டுறான் காரியமா கட்டுறான்

ஈரமுள்ள இதயமிருந்தால் ஈட்டியத்தான் தாங்கலாம்
வேலு அண்ணன் மனசவச்சா இன்னும் வீட்டில் தங்கலாம்
(ஆயிரம்..)

கவுத்துட்டான் கவுத்துட்டான் குடும்பத்தையே கவுத்துட்டான்
போட்டுட்டா போட்டுட்டான் டேராவத்தான் போட்டுட்டா

பாசமான புலிங்க கூட பத்து நாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்

ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு

படம்: வேல்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ப்ரேம்ஜி, ராகுல், வடிவேலு

பளபளக்குற பகலா நீ


பளபளக்குற பகலா நீ
படபடக்குற அகலா நீ
அனலடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ
மழையடிக்கிற முகிலா நீ
திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ
சூடாக இல்லாவிட்டால்
இரத்தத்தில் வேகம் இல்லை
சேட்டைகள் இல்லாவிட்டால்
இனிமை இல்லை
கூட்டை தான் தாண்டாவிட்டால்
வண்ணத்துப்பூச்சி இல்லை
வீட்டை நீ தாண்டாவிட்டால்
வானமே இல்லை
வானவில்லை போலே இளமையடா
தினம் புதுமையடா அதை அனுபவிடா
காலம்காலமாக பெரிசுங்கடா ரொம்ப பழசுங்கடா
நீ முன்னே முன்னே வாடா வாடா

பளபளக்குற பகலா நீ
படபடக்குற அகலா நீ
அனலடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ
மழையடிக்கிற முகிலா நீ
திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ

எட்டித்தொடும் வயது இது
ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும்
அதிசயம் என்னவென்றால்
அதன் இருபக்கம் கூரிருக்கும்
கனவுக்கு செயல் கொடுத்தால்
அந்த சூரியனில் செடி முளைக்கும்
புலன்களை அடக்கி வைத்தால்
தினம் புதுப்புது சுகம் கிடைக்கும்
காலில் குத்தும் ஆணி
உன் ஏணி என்று காமி
பல இன்பம் அள்ளிசேர்த்து ஒரு
மூட்டை கட்டி வா நீ வா நீ வா

பளபளக்குற பகலா நீ
படபடக்குற அகலா நீ
அனலடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ
மழையடிக்கிற முகிலா நீ
திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ

இதுவரை நெஞ்சிலிருக்கும் சில
துன்பங்களை நாம் மறப்போம்
கடிகார முள் தொலைத்து
தொடுவானம் வரை போய் வருவோம்
அடைமழை வாசல் வந்தால்
கையில் குடையின்றி வா நனைவோம்
அடையாளம் தான் துறப்போம்
எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்
என்ன கொண்டு வந்தோம்
நாம் என்ன கொண்டு போவோம்
அட இந்த நொடி போதும்
வா வேற என்ன வேண்டும் வேண்டும்

பளபளக்குற பகலா நீ
படபடக்குற அகலா நீ
அனலடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ
மழையடிக்கிற முகிலா நீ
திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ

சூடாக இல்லாவிட்டால்
இரத்தத்தில் வேகம் இல்லை
சேட்டைகள் இல்லாவிட்டால்
இனிமை இல்லை
கூட்டை தான் தாண்டாவிட்டால்
வண்ணத்துப்பூச்சி இல்லை
வீட்டை நீ தாண்டாவிட்டால்
வானமே இல்லை
வானவில்லை போலே இளமையடா
தினம் புதுமையடா அதை அனுபவிடா
காலம்காலமாக பெரிசுங்கடா ரொம்ப பழசுங்கடா
நீ முன்னே முன்னே வாடா வாடா

சுட்டா சூரியனே பொத்துகிட்டுப் போகலாம்டா! ஆஹ் ..ஆ ..ஆ ..



சுட்டா சூரியனே பொத்துகிட்டுப் போகலாம்டா! ஆஹ் ..ஆ ..ஆ ..

எம்பி எம்பி தொட்டா எட்டு திசை கட்டுப்பட்டு நிக்கலாண்டா !

அடிச்சா வச்ச குறி சிக்கனுமய்யோ

புடிச்சா சமுத்துரம் மாட்டணுமய்யோ

நெனச்சா நெனச்சது நடக்குமல்லோ

இழுத்தா பூமி நம்ம கையிலய்யய்யோ

அட கட்டறுத்து வீசுங்கடா காத்துப்போல

நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்துல

அட கட்டறுத்து வீசுங்கடா காத்துப்போல

நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்துல


சுட்ட சூரியன பொத்துகிட்டு போகலாண்டா

எம்பி எம்பி தொட்டா எட்டு திசை கட்டுப்பட்டு நிக்கலாண்டா


சரணம் 1

நேர்கொட்டுல எதிரியை வச்சு வச்சு

நெஞ்சு நிமித்தனும் பதக்கத்த தச்சு தச்சு

போர்பாட்டுனா அலைகள நைச்சு நைச்சு

பூமி பந்துக்கே நாம் தான் அச்சு அச்சு

வெளிச்ச மரமொன்னு மொலச்சாச்சு

நெருப்பு விதையோன்னு கையோட

நெனச்சு வரமொன்னு கெடச்சாச்சு

இனிப்பு மழை இப்போ நெஞ்சோட

அட கட்டறுத்து வீசுங்கடா காத்துப்போல

நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்துல

அட கட்டறுத்து வீசுங்கடா காத்துப்போல

நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்துல

மேகம் கருக்குது மழை வர பாக்குது

வீசி அடிக்குது காத்து இளங்காத்து


சரணம் 2


நெஞ் தேசத்தில் எகிறுது நெஞ்சு நெஞ்சு

நரம்போட்டத்தில் வலை ஒண்ணு நெஞ்சு நெஞ்சு

மனக்காட்டத்தில் எரிமலை நெஞ்சு நெஞ்சு

எந்த பங்கிலும் நீதான் மிஞ்சு மிஞ்சு

பறக்கும் தட்டு போல் லேசாக

கனக்கும் மனசும் தான் பரந்தாச்சு !

வெடிச்ச சுவரு போல் இருந்தேன் நான்

இப்போ வெடிப்பெல்லாம் பூவாச்சு !


பல்லவி 2

அட கட்டறுத்து வீசுங்கடா காத்துப்போல

நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்துல

அட கட்டறுத்து வீசுங்கடா காத்துப்போல

நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்துல

சுட்டா சூரியன பொத்துகிட்டு போகலாம்டா

ஆஹ் ஆ ஆ

எம்பி எம்பி தொட்டா எட்டு திசை கட்டுப்பட்டு நிக்கலாண்டா!

வா வா நிலவ புடிச்சி



வா வா நிலவ புடிச்சி தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓ ஹோ விடியும்போது தான் மறைஞ்சி போகுமோ
கட்டிப்போடு மெதுவா

வா வா நிலவ புடிச்சி தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓ ஹோ விடியும்போது தான் மறைஞ்சி போகுமோ
கட்டிப்போடு மெதுவா

வானத்தில் ஏறி ஏணிக்கட்டு
மேகத்தை அள்ளி மாலைக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஓஹோ… ஹோ.. ஹோ…
ஓஹோ… ஹோ.. ஹோ…

வா வா நிலவ புடிச்சி தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓ ஹோ விடியும்போது தான் மறைஞ்சி போகுமோ
கட்டிப்போடு மெதுவா

கவலை நம்மை சிலனேரம் கூறுப்போட்டு துண்டாக்கும்
தீயினை தீண்டி வாழும்போதே தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்

கடலை சேரும் நதியாவும் தன்னை தொலைத்து உப்பாகும்
ஆயினும்கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும்

ஒரு வட்டம் போலே வாழ்வாகும்
வாசல்கள் இல்லா கனவாகும்

அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை
புரிந்தால் துயரம் இல்லை
—-
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஓஹோ… ஹோ.. ஹோ…
ஓஹோ… ஹோ.. ஹோ…

வா வா நிலவ புடிச்சி தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓ ஹோ விடியும்போது தான் மறைஞ்சி போகுமோ
கட்டிப்போடு மெதுவா

தனனன னனனா
தனனன னனனா
னன னன ஓஹோ…
ஓஹோ… னன னன னன னன னன னனா னா

ஆ ஹா ஹா ஹா இரவை பார்த்து மிரலாதே
இதயம் வேர்த்து துவலாதே
இரவுகள் மட்டும் இல்லையென்றால்
நிலவின் அழகு தெரியாதே

கன்வில் நீயும் வாழதே கலையும் போது வருந்தாதே
கனவில் பூக்கும் பூக்கள் எல்லாம் கைகளில் பறித்திட முடியாதே

அந்த வானம் போலே உறவாகும்
மேகங்கள் தினமும் வரும் போகும்
அட வந்து போனால் மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும்
—-
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஓஹோ… ஹோ.. ஹோ…
ஓஹோ… ஹோ.. ஹோ…


படம் : நான் மகான் அல்ல
இசை : யுவன் ஷங்கர் ராஜா

பாடலாசிரியர்: நா.முத்துகுமார்

பாடியவர்கள் : ராகுல் நம்பியார்

வெளியான ஆண்டு : 2010

அல்லா ஜானே அல்லா ஜானே.....


அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே

கண்ணீர் அறியா கண்களும் உண்டோ
மண்ணில் பெருகா குருதியும் உண்டோ
நன்மைகள் தீமைகள் யார் தான் அறிவார்
நாளையின் தீர்ப்பை யார் தான் தருவார்

அல்லா ஜானே அல்லா
அல்லா ஜானே அல்லா

வீதிகள் எங்கும் வேதனை நிழல்கள்
வீடுகள் எங்கும் விம்மிடும் குரல்கள்
வீட்டுக்கு போகும் பாதைகள் எங்கே
வேட்டை முடிந்து ரோம்புதல் எங்கே

அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே

பிள்ளைகள் நடுங்கும் பேய்களின் நடனம்
பேரிருள் இன்று நிலவினை திருடும்
அழிந்தவர் குரல்கள் சுவர்களில் கேட்கும்
அடுத்தவர் மொழிகள் திசைகளை அசைக்கும்

அல்லா ஜானே அல்லா
அல்லா ஜானே அல்லா

வெல்பவர்கள் எல்லாம் போர்களில் இங்கே
விழுந்தவர்கள் எல்லாம் பெயர்களும் இல்லை
முகங்கள் இல்லா மரணத்தின் பாதை
முடிவென்றும் இல்லா அறிவின், பாதை

அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே

அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே

அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே




படம் : உன்னை போல் ஒருவன்
இசை : சுருதி ஹாசன்
பாடலாசிரியர்: கமல்ஹாசன் , மனுஷ்யபுத்திரன்
பாடியவர்கள் : கமல்ஹாசன்
வெளியான ஆண்டு : 2009

காதல் வந்தால் சொல்லி அனுப்பு




Babe... Tell me you love me
I hope I hear it
While I'm alive

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்

சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்டவெளியிலே வாடுதடி
(சுட்ட...)

கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டம் கூடுதடி..
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்


உயிரைத் தவிர சொந்தம் இல்லையே
காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தமானதே
காதல் வந்த பின்பு

Babe.. Tell me you love me
It's never late.. Dont hesistate

சாவை அழைத்து கடிதம் போட்டேன்
காதலிக்கும் முன்பு
ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன்
காதல் வந்த பின்பு

உன்னால் என் கடலலை
உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு
உடல் நலமில்லை
கடல் துயில் கொள்வதும்
நிலா குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும்
உன் சொல்லில் உள்ளதடி..
உன் இறூக்கம்தான்
என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்


என் கண்ணீர்..

பிறந்த மண்ணை அள்ளி தின்றேன்
உன்னை காணும் முன்பு
நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன்
உன்னைக் கண்ட பின்பு
அன்னை தந்தை கண்டதில்லை நன்
கண் திறந்த பின்பு
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன்
உன்னை கண்ட பின்பு
பெண்ணே என் பயணமோ
தொடங்கவே இல்லை
அதற்க்குள் அது முடிவதா
விளங்கவே இல்லை
நான் கரையாவதும்
இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும்
உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம்தான்
என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி..
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்


காதல் வந்தால் சொல்லி அனுப்பு
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
சொல்லி அனுப்பு சொல்லி அனுப்பு


படம்: இயற்கை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: திப்பு
பாடலாசிரியர்: வைரமுத்து

ஒ மனமே ஒ மனமே


ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன் ?
ஒ மனமே ஒ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ?
மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகளை தந்தது யார் ?
பூக்கள் தானே யாசித்தோம்
கூலான் கற்களை எரிந்தது யார் ?
ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன் ?

ஒ மனமே ஒ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ?


மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி
நம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து
முள்ளுக்குள் எரிந்தது காதலடி
கனவுக்குள்ளே காதலை தந்தாய்
கணுக்கால் தோரும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தல்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி நாயனமா ?
தோல்விகள் இன்றி பூரணமா ?
ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன் ?

ஒ மனமே ஒ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ?


இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி
ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன் ?
ஒ மனமே ஒ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ?
மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகளை தந்தது யார் ?
பூக்கள் தானே யாசித்தோம்
கூலான் கற்களை எரிந்தது யார் ?


ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன் ?

ஒ மனமே ஒ மனமே

படம்: உள்ளம் கேட்குமே
இசை:
ஹரிஷ் ஜெயராஜ்
பாடியவர்:
ஹரிஹரன்
பாடலாசிரியர்: வைரமுத்து
வெளியான ஆண்டு : 2005

உள்ளத்தில் நல்ல உள்ளம்



உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா


தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை

ஊர்ப்பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா

மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்த
உன்னடி பணிவேனடா -கர்ணா
மன்னித்து அருள்வாயடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது

வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

செஞ்சோற்று கடன் தீர்த்த சேராத இடம் சேர்ந்து

வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - கர்ணா
வஞ்சகன் கண்ணனடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது

வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா


படம்: கர்ணன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்:
சிர்காழி கோவிந்தராஜன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
வெளியான ஆண்டு : 1964

அடடா வா அசத்தலாம்


அடடா வா அசத்தலாம்

i wanna move with you boy one more time
i wanna move with you boy one more time

அடடா வா அசத்தலாம்

I wanna fly with you boy one more time
I wanna fly with you boy one more time

போடா டேய் வாழ்க்கை ஒரு பூக்கூடைதான்
யார் கையில் வேணும்னாலும் பூ பூக்கும்தான்

அடடா வா அசத்தலாம்

i wanna move with you boy one more time
i wanna move with you boy one more time

அடடா வா அசத்தலாம்

I wanna fly with you boy one more time
I wanna fly with you boy one more time

எதுவந்தா எனக்கு என்ன
ஒதுங்காத நானும் சொன்னா

I wanna get so hot and naughty with you ohh... hO

கொண்டாடா வாழ்க்க கொண்டாடா
வாழ்கைக்கு வகுப்பு உண்டாடா

I wanna get so hot and naughty with you ohh hO

hO heyy heyy heyyy

சிறகு இருக்கும் போதிலும்
நடக்கும் பறவை நானில்ல
வாழ்க்கை முழுக்க வாழ்ந்திட
பூமி எனக்கு போதல
ஆகட்டும் பார்ப்போம்

come close to baby Let me drive you crazy

ஆடித்தான் தீர்ப்போம்

Oh come touch me baby
Boy I feel so sexy

போடா டேய் வாழ்க்கை ஒரு பூக்கூடைதான்
யார் கையில் வேணும்னாலும் பூ பூக்கும்தான்

அடடா வா அசத்தலாம்

i wanna move with you boy one more time
i wanna move with you boy one more time
I wanna fly with you boy one more time
I wanna fly with you boy one more time

படம்: சர்வம்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: இளையராஜா
Related Posts Plugin for WordPress, Blogger...