Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

தூங்காதே தம்பி தூங்காதே



தூங்காதே தம்பி தூங்காதே-நீயும்
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே!

(தூங்)

நீ-தாங்கிய உடையும் ஆயுதமும்-பல
சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்,
சக்தியிருந்தால் உன்னைக்கண்டு சிரிக்கும்
சத்திரந்தான் உனக்கு இடம் கொடுக்கும்

(தூங்)

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானுங்கெட்டார்; சிலர்
அல்லும் பகலும் தெருக்கல்லா யிருந்துவிட்டு
அதிர்„டமில்லையென்று அலட்டிக் கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்-உன்போல்
குறட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்!

(தூங்)

போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்-உயர்
பள்ளியில் தூங்கியவன் கல்வியழந்தான்!
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்-கொண்ட
கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்-இன்னும்
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்-பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா!

(தூங்)

Song: thoongathe thambi - பாடல்: தூங்காதே தம்பி தூங்காதே
Movie: - திரைப்படம்: நாடோடி மன்னன்
Singers: T.M. Soundararajan - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
Lyrics: இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்
Music: - இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
Year: - ஆண்டு: 1958

சின்னப்பயலே சின்னப்பயலே



சின்னப்பயலே சின்னப்பயலே
சேதி கேளடா
நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா
எண்ணிப் பாரடா-நீ
எண்ணிப் பாரடா

(சின்னப்)

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி (ஆளும்)
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே-நீ
தரும் மகிழ்ச்சி (ஆசை)

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி-உன்
நரம்போடுதான் பின்னி வளரணும்
தன்மான உணர்ச்சி-உன் (நரம்)

(சின்னப்)

மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா-தம்பி
மனதில் வையடா (மனிதனாக)
வளர்ந்து வரும் உலகத்துக்கே-நீ
வலது கையடா-நீ
வலது கையடா (வளர்ந்து)

தனியுடமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா-நீ
தொண்டு செய்யடா! (தனி)
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா-எல்லாம்
பழைய பொய்யடா!

வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போதும்போது
சொல்லி வைப்பாங்க-உன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க

வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட
நம்பி விடாதே-நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே-நீ
வெம்பி விடாதே!-

(சின்னப்)

பாடல் இடம் பெற்ற படம்: அரசிளங்குமரி
வருடம்: 1961
இசை: ஜி.ராமநாதன்
நடிப்பு: M.G.R & பத்மினி முதலானோர்

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா



சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா..

எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை
இடர வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன்வையடா நீ
அஞ்சாமல் கடமையிலே கண்வையடா

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா .

குள்ளநரிக் கூட்டம் ஒன்று குறுக்கிடும்
நல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும் - நீ
எள்ளளவும் பயங்கொண்டு மயங்காதேடா - அவற்றை
எமனுலகு அனுப்பி வைக்கத் தயங்காதேடா

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா

எத்தனையோ மேடுபள்ளம் வழியிலே - உன்னை
இடரவைத்து தள்ளப் பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன் வையடா - நீ
அஞ்சாமல் கடமையிலே கண் வையடா


பாடல்: சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
திரைப்படம்: நீலமலைத் திருடன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1957
நடிப்பு: ரஞ்சன், அஞ்சலிதேவி, ஈ.வி.சரோஜா

சில நேரம் சில பொழுது



சில நேரம் சில பொழுது
சோதனை வரும் பொழுது
நம்பிக்கையால் மனம் உழுது
வானில் உன் பெயர் எழுது
(சில நேரம் சில பொழுது)
லட்சியக் கதவுகளைத் திறந்து வைப்போம்
இதயத்தின் சோகங்களை இறக்கி வைப்போம்
சூரியன் என்பது கூட சிறு புள்ளி தான்
சாதிக்க முதல் தகுதி ஒரு தோல்வி தான்
(சில நேரம் சில பொழுது)
சரணம்-1
=======
வானம் தலையில் மோதாது
பூமி நகர்ந்து போகாது
நடுவில் இருக்கும் உந்தன் வாழ்க்கை
தொலைந்து ஒன்றும் போகாது
சோகம் என்றும் முடியாது
கவலை என்றும் அழியாது
இரண்டையும் தான் ஏற்றுக் கொண்டால்
வாழ்க்கை என்றும் தோற்காது
நெஞ்சே பொன் நெஞ்சே தடையாவும் துரும்பு
தீயாய் நீயானால் மெழுகாகும் இரும்பு
தோல்வி அவை எல்லாம் சில காயத் தழும்பு
ஏறு முன்னேறு ஒளியோடு திரும்பு
பறவை அதற்கும் இறகு சுமையா
தோல்வி ஒரு தடையா
(சில நேரம் சில பொழுது)
சரணம்-2
=======

உனது கண்கள் அழும்போது
எந்த விரலும் துடைக்காது
பிறரை நம்பி நீயும் நின்றால்
வந்த பாரம் தீராது
இன்று வந்த ராஜாக்கள்
நேற்று என்ன செய்தார்கள்
தோல்வி வந்து தீண்டும் போது
தன்னை நம்பி வாழ்ந்தார்கள்
கோடு அதன் மேலும் புதுக்கோலம் பிறக்கும்
மேடு அதில் ஏறும் நீர் வேகம் எடுக்கும்
சோகம் அதை வென்றால் ஒரு சக்தி பிறக்கும்
பாதை சில போனால் பல பாதை பிறக்கும்
நேற்றை மறப்போம் நாளை ஜொலிப்போம்
இன்று ஜெயித்திருப்போம்
(சில நேரம் சில பொழுது)

படம்: கிச்சா வயசு 16
இசை: தினா
பாடியவர்: உன்னிமேனன்

அழகுக் குட்டிச் செல்லம்



  அழகுக் குட்டிச் செல்லம் உன்னை அள்ளித் தூக்கும் போது
    உன் பிஞ்சுவிரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன்
    ஆளைக் கடத்திப் போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில்
    விரும்பி மாட்டிக் கொண்டேன் நான் திரும்பிப் போக மாட்டேன்
    அம்மு நீ என் பொம்மு நீ மம்மு நீ என் மின்மினி
    உனக்குத் தெரிந்த மொழியிலே எனக்குப் பேசத் தெரியல‌
    எனக்குத் தெரிந்த பாஷை பேச உனக்குத் தெரியவில்லை
    இருந்தும் நமக்குள் இது என்ன புதுப்பேச்சு
    இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி
குழு: ஜிஞ்சலேஞ்ச ஜிஞ்சலேஞ்ச‌ ஜிஞ்சலி
    மஞ்சரிஞ்ச மஞ்சரிஞ்ச மஞ்சரி (அழகுக் குட்டிச் செல்லம்)
சரணம்‍‍‍-1
=======

ஆ: ரோஜாப்பூ கைரெண்டும் காற்றோடு கதைபேசும்
    உன் பின்னழகில் பெளர்ணமிகள் தகதிமிதா ஜதிபேசும்
    எந்த நேரம் ஓயாத அழுகை
    ஏனிந்த முட்டிக்கால் தொழுகை
    எப்போதும் இவன் மீது பால்வாசனை
    என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
    எந்த நாட்டைப் பிடித்துவிட்டான் இப்படி ஓர்
    அட்டினக்கால் தோரணை தோரணை
குழு: ஜிஞ்சலிஞ்ச ஜிஞ்சலிஞ்ச ஜிஞ்சலி....
ஆ: அழகுக் குட்டிச் செல்லம்..
சரணம்‍-2
=======

ஆ: நீ தின்ற மண்சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
    நீ சிணுங்கும் மொழிகேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
    தண்டவாளம் இல்லாத ரயிலை
    தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய்
    வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
    கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
    ஒளிந்து ஒளிந்து போக்குக் காட்டி ஓடுகின்ற
    கண்ணனே புன்னகை மன்னனே
குழு: ஜிஞ்சலிஞ்ச..
ஆ, குழு: அழகுக் குட்டிச் செல்லம்..
ஆ: அம்மு நீ என் பொம்மு நீ.....
ஆ, குழு: ஜிஞ்சலிஞ்ச...
ஆ: அழகுக் குட்டிச் செல்லம்..
படம்         : சத்தம் போடாதே
பாடியவர்: ஷங்கர் மஹாதேவன்

இசை       : யுவன்ஷங்கர்ராஜா
  

வெள்ளைப் பூக்கள்


வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்ணில் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறுமுதல் சிரிப்பில்
(வெள்ளைப் பூக்கள்)

பல்லவி - 1
==========
காற்றின் பேரசைவும் மழை பாடும் பாடல்களும்
ஒரு மெளனம் போல் இன்பம் தருமோ ஓஓஓஓஒ
கோடி கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ ஓஓ
ஆ ஹா ஹா ஹா
(வெள்ளைப் பூக்கள்..)


பல்லவி - 2
==========
எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாயோ வெள்ளைக் குயிலே
(வெள்ளைப் பூக்கள்)


படம் கன்னத்தில் முத்தமிட்டால்
பாடியவர் ஏ.ஆர். ரஹ்மான்
இசை ஏ.ஆர். ரஹ்மான்
Related Posts Plugin for WordPress, Blogger...