Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

திங்கள், 14 பிப்ரவரி, 2011

அன்பே அன்பே என்




அன்பே அன்பே என் கண்ணே நீதானே
மூச்சுக் காற்றாய் நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே
(அன்பே..)

காதல் ஒரு பரிட்சைதானே
எழுதிடவே நானும் வந்தேன்
இன்னொருவர் பேரில்தானே
தேர்வெழுதி சென்றேனே
ரயில் பயணம்தானே காதல்
நானும் அதில் பயணம் செய்தேன்
இறங்கச் சொல்லி காதல் கேட்க
நான் இறங்கி சென்றேனே
(அன்பே..)

சிலுவை சுமந்தானே
அவன் இந்தக் காதலில் விழுந்திருந்தால்
சிலுவை வலியென்ன
வாழ்க்கையில் வாய்வழி சொல்வானே
இதயம் ஒருநாள் இரண்டாய் உடையும்
அன்று வந்து பார் உன் விம்பம் தெரியும்
கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்
நீ வந்துதான் நீராடிப்போ..
(அன்பே..)
(காதல் ஒரு..)
(அன்பே..)

முள்ளாய் நீ வந்தால்
கண்கள் திறந்து காத்திருப்பேன்
தீயாய் நீ வந்தால்
என்னையும் திரியாய் நான் தருவேன்
கொஞ்சம் கொஞ்சமாய் ஏன் என்னை கொன்றாய்
கருணைக்கொலைதான் செய்யாமல் சென்றாய்
மல்ர்மாலையாய் மாறிடவே நினைத்தேன்
மலர் வளையமாய் நான் மாறினேன்
(அன்பே..)

படம்: உள்ளம் கொள்ளை போகுதே
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...