Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

வியாழன், 6 ஜனவரி, 2011

காதலி - கமல்ஹாசன் கவிதைகள்

சரியாகச் சொன்னால்
20 வருடங்களுக்குப் பிறகு
மீண்டும் உனக்கொரு காதல் கடிதம்.

உன் விலாசம் எப்படியும் மாறும் என்ற
காரணத்தினாலோ என்னவோ
உனது விலாசத்தை காதலி என்பதோடு
அன்று விஸ்தீரணம் செய்யாது விட்டுவிட்டேன்.

காதலி... மீண்டும் உனக்கொரு கடிதம்.
நான் முன்பு எழுதிய கடிதம்உனக்கல்ல

எனினும் இத்துடன்அதையும் இணைத்துள்ளேன்.

காதல் ரிஷிகளின் மூலம் பார்ப்பதுஅனாசாரமாகாது.

பார்த்துப் புரிந்துகொள்.பழைய கடிதத்தின் சொந்தக்காரியிடம்
இந்தக் கடிதத்தைக் காண்பிக்க வேண்டியஅவசியமில்லை.
அவளுக்கு ஆர்வமும் இருக்க வாய்ப்பில்லை.

காதல் மாறாதது என்பது உண்மை.

ஆள் மாறினாலும்
இல்லாள் மாறினாலும்
காதல்மாறுவதில்லை.

கூடி வாழ்வதும் காதலில் கூடுவதும்

இருவேறு நிலைகள்.அவள் என்னவள்
அவன் என்னவன் எனஅறம் என்ற பெயரால்
அடையாளச்சூடு வைக்கும் மிருகத்தனம்
மனிதனுக்கே உரித்தானது.

நமது ஆறாவது உணர்வைபோற்று.

பண்டிதர்கள் மெதுவாகஉறுதியான மற்ற
ஐந்து உணர்வுகளின்உத்வேகம் குறைந்து
வருவதை உணர மறுக்கிறார்கள்.

அந்த மறுப்பில்என் (நம்) காதலும் சிக்குண்டுதவிக்கிறது.
மௌன விரதம் பூண்டவர்கள் சமிக்ஞை செய்து

கவிதையை வைக்கிறார்கள்.

நான் காதலன் கவிஞன் ஆதலால்

காதலால் மீண்டும்உனக்கொரு கடிதம்.
இதில் மறுபடியும் விலாசமில்லாமல்

விட்டிருப்பதுவிபத்தல்ல நீ
விலாசத்தை மாற்றிக்கொண்டே
யிருக்கிறாய் நான் என்ன செய்ய?
அதே நான்தான்,
நீ மட்டும் வேறு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...