Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

சனி, 12 பிப்ரவரி, 2011

இறைவன் படைத்த உலகை

பாடல்: இறைவன் படைத்த உலகை எல்லாம்
திரைப்படம்: வா ராஜா வா
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்: நெல்லை அருள்மணி
 இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
ஆண்டு: 1969



இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

உள்ளம் சொல்வதை உதடு சொல்லாமல்
உண்மை பிறப்பதில்லை
உள்ளம் சொல்வதை உதடு சொல்லாமல்
உண்மை பிறப்பதில்லை
உள்ளிருந்தே நீ அருள் செய்யாமல்
ஒன்றும் நடப்பதில்லை
உள்ளிருந்தே நீ அருள் செய்யாமல்
ஒன்றும் நடப்பதில்லை
ஒன்றும் நடப்பதில்லை

இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

இரண்டு மனிதர் சேர்ந்த போது
எண்ணம் வேறாகும்
இரண்டு மனிதர் சேர்ந்த போது
எண்ணம் வேறாகும்
எத்தனை கோவில் இருந்த போதும்
இறைவன் ஒன்றாகும்
எத்தனை கோவில் இருந்த போதும்
இறைவன் ஒன்றாகும்
இறைவன் ஒன்றாகும்

இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

இசையால் அவனை இரங்க வைப்பது
மனிதன் குணமாகும்
இசையால் அவனை இரங்க வைப்பது
மனிதன் குணமாகும்
இசையில் மயங்கி இரங்கி வருவது
இறைவன் மனமாகும்
இசையில் மயங்கி இரங்கி வருவது
இறைவன் மனமாகும்
இறைவன் மனமாகும்

இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்
Listen/Download at: இறைவன் படைத்த உலகை எல்லாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...