Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

திங்கள், 8 பிப்ரவரி, 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
அஞ்சி யஞ்சி சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சக பெய்க லென்பார் - இந்த
மரத்தில் பார், அந்த குளத்திலென்பார்
துஞ்சுது முகட்டி லென்பார் - மிகத்
துயரப் படுவார்எண்ணிப் பயப்படுவார் (நெஞ்சு)
மந்திர வாதிஎன்பார் - சொன்ன
மாத்திரத்தி லேமனக் கலிபிடிப்பர்
எந்திர சூனியங்கள் - என்னும்
எத்தனை யாயிரம் வர்துயரங்கள்!
தந்த பொருட்களை கொண்டே - ஜனம்
தாங்குவ ருலகத்தில் அரசரெல்லாம்
அந்த அரசியலை - இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சமயார்வார் (நெஞ்சு)
சிப்பாயை கண்டஞ்சுவார் - ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்
துப்பாக்கி கொண்டொருவன் - வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார்
அப்பாலெ வனோசெல்வான் - அவன்
ஆடையை கண்டுபயந் தெழுந்துநிற்ப்பார்
எப்போதும் கைகட்டுவார் - இவர்
யாரிடத்தும் பூனைகல்போ லேங்கிநடப்பார் (நெஞ்சு)
நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடியென் றாலது பெரிதாமோ ?
அஞ்சுதலைப் பாம்பென்பான் - அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்து விடுவார் - பின்பு
நெடுநா ளிருவரும் பகைத்திருப்பார் (நெஞ்சு)
சாத்திரங்க ளொன்றும் காணார் - பொய்ச்
சாத்திரப் பேய்கள்சொலும் வார்த்தைநம்பியே
கோத்திரமொன் யிருந்தாலும் - ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்
தோத்திரங்கள் சொல்லியவர்தாம் - தமைச்
சூதுசெயு நீசர்களைப் பணிந்திடுவார் - ஆனால்
ஆத்திரங் கொண்டே யிவன் சைவன் - இவன்
அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார் (நெஞ்சு)
எண்ணிலா நோயுடையார் - இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தைகள்போல் - பிறர்
காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்
நண்ணிய பெருங்கலைகள் - பத்து
நாலாயிரங் கோடி நயந்து நின்ற
புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார் (நெஞ்சு)

2 கருத்துகள்:

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...