Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

திங்கள், 8 பிப்ரவரி, 2010

பாரத தேசம்



பல்லவி
:
பாரத தேசமென்று பெயர் சொல்லு வார் - மிடிப்
பயங்கொல்லு வார் துயர்ப் பகைகொல்லு வார்

சரணங்கள்:
வெள்ளிப் பனிமலையில் மீதுலவு வோம், அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்,
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம் எங்கள்
பாரத தேச மென்று தோள் கொட்டுவோம் (பாரத)

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் (பாரத)

வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம் (பாரத)

முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர் பல நாட்டினர்வந்தே
நத்தி நமக்கினியே பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற் கரையிலே (பாரத)

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டி விளையாடி வருவோம் (பாரத)

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்
சிங்க மாராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துங் தந்தங்கள் பரிசளிப்போம் (பாரத)

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய்வோம்
ராசபுரத்தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம் (பாரத)

பட்டினியில் ஆடையில் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல் செய்வோம் சாயுதல் செய்வோம்
உண்மைகள் சொல்வோம் வண்மைகள் செய்வோம் (பாரத)

குடைகள் செய்வோம் உழுபடைகள் செய்வோம்
கோணிகள் செய்வோம் இரும்பாணிகள் செய்வோம்
நடையும் புறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)

மந்திரம் கற்போம் வினைத் தந்திரம் கற்போம்
வானையளப் போம் கடல்மீனையளப்போம்
சந்திரமண்டலத்தியல் கண்டு தௌiவோம்
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம் (பாரத)

காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலைவளர்ப்போம் கொல்லருளை வளர்ப்போம்
ஓவியம் செய்வோம் நல்ல Yஊசிகள் செய்வோம்
உலகத் தொழிலனைத்து மூவந்து செய்வோம் (பாரத)

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
நீதி நெறியினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர் கீழவர் மற்றோர் (பாரத)

1 கருத்து:

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...