சனி, 3 ஏப்ரல், 2010
தாயில்லாமல் நானில்லை
தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள் (தாயில்லாமல்)
ஜீவநதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள் (ஜீவநதியாய்)
தவறினைப் பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள் (தவறினை)
தாயில்லாமல் நானில்லை
தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள் (தூய)
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும் (2)
தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்
தாயில்லாமல் நானில்லை
மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள் (மேக)
மலைமுடி தொடுவாள், மலர்மணம் தருவாள்
மங்கள வாழ்வுக்கு துணையிருப்பாள் (மலைமுடி)
தாயில்லாமல் நானில்லை
ஆதி அந்தமும் அவள்தான்
நம்மை ஆளும் நீதியும் அவள்தான் (ஆதி)
அகந்தையை அழிப்பாள்
ஆற்றல் கொடுப்பாள்
அவள்தான் அன்னை மகா சக்தி
அந்த தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
என்க்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாயில்லாமல் நானில்லை
பாடியவர் : டி.எம் .எஸ்
திரைப்படம் :அடிமைப்பெண்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
http://www.yarl.com/forum3/index.php?showtopic=71021
பதிலளிநீக்குதாயின் மகிமையை இதைவிட யாரும் சொல்லிவிட முடியாது. அருமை!
பதிலளிநீக்கு