Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

உன்னோடு நன் இருந்த



உன்னோடு நன் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுகையிலும் மறக்க்து கண்மணியே
தொண்ணுறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம்தான்
எண்ணுறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி

பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டியணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல் எல்லா
இடங்களில் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்

எது நியாயம் எது பாவம்
இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா
அதுபற்றி அறியவில்லை

யார் தொடங்க யார் முடிக்க
ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம்
இதுவரைக்கும் கேள்வியில்லை

அச்சம் கலைத்தேன் ஆசையினை நீ அனைத்தாய்
ஆடை கலைத்தேன் வெட்கத்தை நீ அனைத்தாய்

கண்ட திருக்கோலம் கனவாக மறைத்தாலும்
கடைசியிலே அழுத கண்ணீர்
கையில் இன்னும் ஒட்டுதடி...........................!!!

உன்னோடு நன் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுகையிலும் மறக்க்து கண்மணியே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...