Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

சனி, 5 பிப்ரவரி, 2011

ஏன் பிறந்தாய்



திரைப்படம்: பாகப்பிரிவினை
பாடலாசிரியர்: கவிஞர் மருதகாசி
குரல்: T.M.சௌந்தர்ராஜன், P.சுசீலா


ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே

இல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
 நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ

கை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும்
காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா
கை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும்
காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா
காதலிலும் பெருமை இல்லை
கண்களுக்கும் இன்பமில்லை
கடமையில் ஈன்றெடுத்தாள் உன்னையடா
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ

மண் வளர்த்த பொறுமை எல்லாம்
மனதில் வளர்த்தவளாய்
கண் மலர்ந்த பெண்மையினை நானடைந்தேன்
நீ வளர்ந்து மரமாகி
நிழல் தரும் காலம் வரை
தாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே
நீ வளர்ந்து மரமாகி
நிழல் தரும் காலம் வரை
தாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே
ஆராரோ ஆரோ ஆரிராரோ..
ஆராரோ ஆரோ ஆரிராரோ…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...