Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

வானவில்லே வானவில்லே



வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது
அள்ளிவந்து வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு
சின்னபறவைகள் கொஞ்சி பறக்குதே வண்ணச் சிறகிலே தண்ணிர் தெளிக்குதே
அடி தாய் தென்றலே வந்து நீ பாடு ஆராரோ (வானவில்லே...)

எந்த நாட்டு குயிலின் கூட்டமும் பாடும் பாடல் சோகம்
எந்த நாட்டு கிளிகள் பேச்சிலும் கொஞ்சும் மழலை உண்டு
சாதி என்ன கேட்டுவிட்டு தென்றல் நம்மை தொடுமா
தேசமென்ன பார்த்துவிட்டு மண்ணில் மழை வருமா
உன்னோடு நானும் எல்லோரும் ஓர் சொந்தம் அன்புள்ள உள்ளத்திலே (வானவில்லே..)

மேக மூட்டம் கொஞ்சம் விலகவே மண்ணில் நிலவு கண்டேன்
அன்பு பொழியும் கருணை வெள்ளத்தில் நெஞ்சம் மூழ்க நின்றேன்
உன்னை போலே சிலர் இருந்தால் மண்ணில் சுவர்க்கம் வருமே
இயற்கை அன்னை படைத்ததெல்லாம் பொதுவினில் வருமே
மூங்கில் காடெல்லாம் சங்கீதம் பாடாதோ தென்றலின் சொர்கத்திலே (வானவில்லே..)



பாடல்: வானவில்லே வானவில்லே
திரைப்படம்: ரமணா
இசை: இளையராஜா
பாடல் வரிகள்: பழநி பாரதி
பாடியவர்: சாதனா சர்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...