Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

சனி, 12 பிப்ரவரி, 2011

நானாக நான் இல்லை தாயே



நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேய்
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே

கீழ் வானிலே ஒளி வந்தது
கூண்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர் வாழ
நீதானே நீர் வார்த்த கார் மேகம்

நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேய்
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே

மணி மாளிகை மாடங்களும்
மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போல் இல்லை
அங்கு தாலாட்ட ஆள் இல்லை
தாய் வீடு போல் இல்லை
அங்கு தாலாட்ட ஆள் இல்லை
கோயில் தொழும் தெய்வம்
நீ இன்றி நான் காண வேறில்லை

நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேய்
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே


2 கருத்துகள்:

  1. எனக்குப் பிடித்த பாடல் இந்த பதிவில் பதிவிட்டு உள்ளேன் அன்புடன் ஓவியர் பாலா

    பதிலளிநீக்கு
  2. இந்தப் பாடல் நானே சொந்தமாக பாடிய பாடல்

    பதிலளிநீக்கு

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...