Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

அன்பென்ற மழையிலே



அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே

வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே

விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ் மைந்தன் தோன்றினானே

கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே... அதிரூபன் தோன்றினானே..

போர்க்கொண்ட பூமியில் தூக்காடு காணவே
புகழ் மைந்தன் தோன்றினானே.....

கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்
கருணைமகன் தோன்றினானே

நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாக தோன்றினானே

இரும்பான நெஞ்சிலே ஈரங்கள் கசியவே
நிறைபாலன் தோன்றினானே

முட்க்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவி ராஜன் தோன்றினானே.....

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே..

வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே...

படம்: மின்சாரக் கனவு
இசை: ஏ ஆர் ரஹ்மான்
குரல்: அனுராதா ஸ்ரீராம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...