Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

புதன், 10 பிப்ரவரி, 2010

சின்னஞ்சிறு கிளியே .



சின்னஞ் சிறு கிளியே, - கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே!
என்னை கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!

பிள்ளை கனியமுதே, - கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி அணைத்திடவே - என் முன்னே
ஆடி வரும் தேனே

ஓடி வருகையிலே - கண்ணம்மா
உள்ளம் குளிரு தடி!
ஆடிதிரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடி!

உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடி!
மெச்சி உன்னை ஊரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்கு தடி!

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடி!
உன்னை தழுவிடில - கன்னமா
உன்மத்த மாகு தடி!

சற்று முகஞ் சிவந்தால் - மனது
சஞ்சல மாகு தடி!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடி!

உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
உதிரம் கொட்டு தடி!
என் கண்ணில் பார்வயன்றோ? - கண்ணம்மா
என் உயிர் நின்னதன்றோ ?

சொல்லும் மழலையிலே - கண்ணம்மா
துன்பங்கள் தீர்த்திடுவாய்:
முல்லை சிரிப்பாலே - எனது
மூர்க்கம் தவிர்த்திடு வாய்.

இன்ப கதைகள் எல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வதுண்டோ ?
அன்பு தருவதிலே - உன்னைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ ?

மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
வைர மணிகள் லுண்டோ ?
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
செல்வம் பிரிது முண்டோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...