Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

வியாழன், 6 ஜனவரி, 2011

பூக்கள் பூக்கும் தருணம்...



பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லை
உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லை
நேற்று வரை நேரம் போகவில்லை
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது என்னவோ
இரவும் விடியவில்லையே அது முடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

சரணம் ௧
வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை
பாவை வாழ்வின் ஒளிப்பேசுமே
நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேர் இன்றி விதை இன்றி வின் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
வாழ் இன்றி மான் இன்றி வருகின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள் மின்னுதே
இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம்
நெஞ்சுக்குள்ளும் இருக்கும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்

பூந்தளிரே......

சரணம் ௨
எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழைத் தூவுதே
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீ என்பேன்
யார் என்று அறியாமல்
பேர்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உறவானதேன்
ஏனென்று கேட்காமல் வருங்காலம் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
காதல் முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை வரைந்த பிறகும்
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே

இது எதுவோ ....
திரைப்படம் : மெட்ராசபட்டினம்
இசை : G.V.பிரகாஷ் குமார்
இயற்றியவர்: ந முத்துக்குமார்
வெளியான ஆண்டு : 2010

1 கருத்து:

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...