Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

வேட்டையாடு விளையாடு ...

வேட்டையாடு விளையாடுவிருப்பம் போல உறவாடு
வீரமாக நடையை போடு -
நீவெற்றி எனும் கடலில் ஆடு

குறும்புக்கார வெள்ளாடே
கொடியை வளச்சித் தள்ளாதே
பொறுமையில்லா மனிதரைப் போல்
புத்தியைக் கெடுத்துக் கொள்ளாதே
அருகினிலே தழையிருக்க ஆகாயத்தில் தாவாதே
தருமத்தையே மறந்து உந்தன்
துணிவைக் காட்ட எண்ணாதே
(வேட்டை)

நேர்மை உள்ளத்திலே நீந்தும் எண்ணத்திலே
தீமை வந்ததில்லை தெரிந்தால் துன்பமில்லை
தேவை அங்கிருக்கு தீனி இங்கிருக்கு
செம்மறியாடே நீ சிரமப்படாதே
(வேட்டை)

பெண்மை சிரிக்குது அது பேசத் துடிக்குது
நன்மை செய்வதே என் கடமையாகும்
நன்றி சொல்வதே என் கண்ணியமாகும்
நட்பை வளர்ப்பதே என் லட்சியமாகும்
(வேட்டை)

குறும்பையாடே முந்தாதே
குள்ள நரியை நம்பாதே
கூடி வாழத் தெரிஞ்சுக்கோ
குணத்தைப் போற்றி நடந்துக்கோ
விரிஞ்சு கிடக்கும் பூமியிலே
இனத்தைத் தேடி சேர்ந்துக்கோ
விளக்கு வைக்கிற நேரம் வந்தா
வீடிருக்கு புரிஞ்சுக்கோ
(வேட்டை)

திரைப்படம் :அரச கட்டளை
பாடியவர் :
T.m.செளந்தரராஜன்,சுசீலா
இயற்றியவர் : முத்துக்கூத்தன்
திரையிசை :
K.v.மகாதேவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...