Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

ஒன்றே குலமென்று ...




படம்: பல்லாண்டு வாழ்க
இசை: கே.வி.மகாதேவன்
பாடல்: கவிஞர் புலமைப்பித்தன்
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

-------------------------------

அன்பிலார் எல்லாம் தமர்க்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக்கூலி தரும்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்

கடவுளிலே கருணைதனைக் காணலாம்-அந்தக்
கருணையிலே கடவுளையும் காணலாம்
நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியாம்
அங்கு ஒருபோதும் மறையாது அவன் காட்சியாம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்

பாவமென்ற கல்லறைக்குப் பலவழி-என்றும்
தர்மதேவன் கோவிலுக்கு ஒருவழி
அந்தவழியொன்றுதான் எங்கள்வழியென்றுநாம்
நேர்மை ஒருநாளும் தவறாமல் நடைபோடுவோம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்

இதயதெய்வம் நமது அண்ணா தோன்றினார்-அவர்
என்றும்வாழும் கொள்கைதீபம் ஏற்றினார்
அந்த ஒளிகாணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளைவரலாறு நமக்காக உருவாகலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...