Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

நாளை உலகை ...

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே
ஒன்றாய் வாருங்கள் தோழர்களே


நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
உழைக்கும் கரங்களே

ஏர் பூட்டி தோளில் வைத்து
இல்லாமை வீட்டில் வைத்து
ஏர் பூட்டி தோளில் வைத்து
இல்லாமை வீட்டில் வைத்து
போராடும் காலமெலாம் போனதம்மா
எல்லோர்க்கும் யாவும் உண்டு
என்றாகும் காலம் இன்று
நேராக கண்ணில் வந்து தோன்றுதம்மா
விடியும் வேளை வரப்போகுது
தருமம் தீர்ப்பை தரப்போகுது
நியாயங்கள் சாவதில்லை என்றும் நியாயங்கள் சாவதில்லை


நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
உழைக்கும் கரங்களே

கல்விக்கு சாலை உண்டு
நூலுக்கு ஆலை உண்டு
நாட்டுக்கு தேவை எல்லாம்
நாம் தேடலாம்
தோளுக்கு வீரம் உண்டு
தோற்காத நியாயம் உண்டு
நீதிக்கு நெஞ்சம் உண்டு
நாம் வாழலாம்
சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம்
சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்
வாருங்கள் தோழர்களே
ஒன்றாய் சேருங்கள் தோழர்களே

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே

Song: naaLai ulakai aaLa vENtum- பாடல்: நாளை உலகை ஆள வேண்டும்
Movie: uzhaikkum karangal - திரைப்படம்: உழைக்கும் கரங்கள்
Singers: K.J. Jesudas - பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
Lyrics: Poet Pulamai piththan - இயற்றியவர்: புலமைப் பித்தன்
Music: M.S. Viswanathan - இசை: எம். எஸ். விஸ்வநாதன்
Year: - ஆண்டு: 1976

1 கருத்து:

  1. அருமையான பாடல் வரிகள் கேட்கும் போதெல்லாம் மனதில் நம்பிக்கையை ஊட்டும் பாடல்.‌

    பதிலளிநீக்கு

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...