Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

கல்வியா செல்வமா வீரமா?

இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

கல்வியா செல்வமா வீரமா? அன்னையா தந்தையா தெய்வமா?
கல்வியா செல்வமா வீரமா? அன்னையா தந்தையா தெய்வமா?
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? - இதில்
உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா?
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? - இதில்
உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா?

கல்வியா செல்வமா வீரமா?

படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா? - பொருள்
படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா?
படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா? - பொருள்
படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா?
படித்தவன் படைத்தவன் யாராயினும்
படித்தவன் படைத்தவன் யாராயினும் - பலம்
படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா? - பலம்
படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா?

கல்வியா செல்வமா வீரமா?

ஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது - அது
ஒன்றினில் ஒன்றாகப் பொருளானது
ஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது - அது
ஒன்றினில் ஒன்றாகப் பொருளானது
ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது?
ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது? - மூன்றும்
ஓரிடத்தில் இருந்தால் நிகரேது? - மூன்றும்
ஓரிடத்தில் இருந்தால் நிகரேது?

கல்வியா செல்வமா வீரமா?

மூன்று தலைமுறைக்கும் நிதி வேண்டுமா? - காலம்
முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா?
மூன்று தலைமுறைக்கும் நிதி வேண்டுமா? - காலம்
முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா?
தோன்றும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா?
தோன்றும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா? - இவை
மூன்றும் துணை இருக்கும் நலம் வேண்டுமா? - இவை
மூன்றும் துணை இருக்கும் நலம் வேண்டுமா?

கல்வியா செல்வமா வீரமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...