Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க

ஆ......ஆ...ஆஅ... ஓ..ஓ..
ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக்கொண்டு போவதும் ஏன்?
ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக்கொண்டு போவதும் ஏன்? கண்ணம்மா
கண்ணம்மா அதைப் பாத்து அவன் ஏங்குவதேன் சொல்லம்மா

பாத்தி கட்டி நாத்து நட்டுப் பலனெடுக்கும் நாளையிலே
பூத்ததெல்லாம் வேறொருவன் பாத்தியமாப் போவதும் ஏன்
பாத்தி கட்டி நாத்து நட்டுப் பலனெடுக்கும் நாளையிலே
பூத்ததெல்லாம் வேறொருவன் பாத்தியமாப் போவதும் ஏன் கண்ணம்மா
கண்ணம்மா கலப்பை புடிச்சவனும் தவிப்பதும் ஏன் சொல்லம்மா
கலப்பை புடிச்சவனும் தவிப்பதும் ஏன் சொல்லம்மா

நன்னானே நானே நானே நானேனன்னானே
நன்னானே நன்னானே நானேனன்னானே
நன்னானே நானே நானே நானேனன்னானே
நன்னானே நன்னானே நானேனன்னானே

பஞ்செடுத்துப் பதப்படுத்தி பக்குவமா நூல்நூற்று
நெஞ்சொடிய ஆடை நெய்தோம் கண்ணம்மா - இங்கு
கந்தலுடை கட்டுவதேன் சொல்லம்மா
பஞ்செடுத்துப் பதப்படுத்தி பக்குவமா நூல்நூற்று
நெஞ்சொடிய ஆடை நெய்தோம் கண்ணம்மா - இங்கு
கந்தலுடை கட்டுவதேன் சொல்லம்மா ஆ..
காத்திருக்கும் அத்தை மவன் கண்கலங்கி நிற்கையிலே
நேத்து வந்த ஒருவனுக்கு மாத்துமாலை போடுவதேன்
காத்திருக்கும் அத்தை மகன் கண்கலங்கி நிற்கையிலே
நேத்து வந்த ஒருவனுக்கு மாத்துமாலை போடுவதேன்
கண்ணம்மா கண்ணம்மா அவள்
நேத்திரத்தைப் பறிப்பதும் ஏன் சொல்லம்மா

நன்னானே நானே நானே நானேனன்னானே
நன்னானே நன்னானே நானேனன்னானே
நன்னானே நானே நானே நானேனன்னானே
நன்னானே நன்னானே நானேனன்னானே

ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பதுதான்
இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா
ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பதுதான்
இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா - இதை
எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா கண்ணம்மா
எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா

ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக்கொண்டு போவதும் ஏன்? கண்ணம்மா
கண்ணம்மா அதைப் பாத்து அவன் ஏங்குவதேன் சொல்லம்மா

நன்னானே நானே நானே நானேனன்னானே
நன்னானே நன்னானே நானேனன்னானே
கண்ணம்மா.. சொல்லம்மா.. கண்ணம்மா சொல்லம்மா
(நன்னானே நானே நானே நானேனன்னானே
நன்னானே நன்னானே நானேனன்னானே)

படம்: வண்ணக்கிளி
இயற்றியவர்: மருதகாசி
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...