Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

கடவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை

படம்: மன்னிப்பு
இயற்றியவர்: வாலி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

பாதை தெரிகின்றது அவன் பயணம் தொடர்கின்றது
யார் சிரித்தாலும் யார் அழுதாலும் தன் வழி நடக்கின்றது

கடவுள் தூங்கவில்லை
கடவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை
கடவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை
கடவுள் தூங்கவில்லை
உண்மை என்ற சொல்லை அவன் மறைத்து வைப்பதில்லை
உண்மை என்ற சொல்லை அவன் மறைத்து வைப்பதில்லை
கடவுள் தூங்கவில்லை

கண்ணுக்குள் ஆயிரம் காட்சி வரும் உன் நெஞ்சுக்குள் ஆயிரம் நினைவு வரும்
கண்ணுக்குள் ஆயிரம் காட்சி வரும் உன் நெஞ்சுக்குள் ஆயிரம் நினைவு வரும்
மண்ணுக்குள் உடலை மறைத்தாலும்
மண்ணுக்குள் உடலை மறைத்தாலும் நீ மனதுக்குள் மறைத்தது வெளியாகும்

கடவுள் தூங்கவில்லை தூங்கவில்லை

இருட்டில் தருமம் இருக்கின்றது அதில் காலத்தின் வெளிச்சம் விழுகின்றது
இருட்டில் தருமம் இருக்கின்றது அதில் காலத்தின் வெளிச்சம் விழுகின்றது
உலகத்தின் பார்வையில் படுகின்றது
உலகத்தின் பார்வையில் படுகின்றது அது உள்ளத்தின் நினைவைத் தொடுகின்றது

கடவுள் தூங்கவில்லை தூங்கவில்லை

ஒவ்வொரு மனிதனும் இறக்கின்றான் அவன் இருப்பவன் கண்ணைத் திறக்கின்றான்
ஒவ்வொரு மனிதனும் இறக்கின்றான் அவன் இருப்பவன் கண்ணைத் திறக்கின்றான்
அறிந்தவன் தெரிந்தே நடிக்கின்றான்
அறிந்தவன் தெரிந்தே நடிக்கின்றான் அவன் ஆட்டத்தின் முடிவில் துடிக்கின்றான்

கடவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை
கடவுள் தூங்கவில்லை
உண்மை என்ற சொல்லை அவன் மறைத்து வைப்பதில்லை
உண்மை என்ற சொல்லை அவன் மறைத்து வைப்பதில்லை
கடவுள் தூங்கவில்லை தூங்கவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...