Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

சனி, 13 பிப்ரவரி, 2010

பிறப்பினைப் பெறுவா ரெல்லாம்

"பிறப்பினைப் பெறுவா ரெல்லாம்
பிறந்தவரில் சிறந்தா ரில்லை;
இறப்பினை அடைந்தா ரெல்லாம்
இறந்ததில் உயர்ந்தாரில்லை;
பெறப்படும் பிறப்பை நாட்டின்
பெருமைக்கு அளித்தார் மட்டும்
சிறப்புறு புகழும் பெற்றார்;
தெய்வத்தோ டிடமும் பெற்றார்!

பொய்சொல்லிப் புகழ்தல் வேண்டார்
பொன்னாடை மலர்கள் வேண்டார்
கைதட்ட ஆட்கள் வேண்டார்
கவிபாடும் அரங்கம் வேண்டார்;
நெய்தொட்ட கையே போல
நெடிதுயர் வாசம் நல்கும்
மெய்பெற்ற வாழ்க்கை அன்றோ
மேலுற நடத்திச் சென்றார்!

காந்தியும் அவர்பின் னாலே
கணக்கற்ற சீடர் தாமும்
நீந்திய தியாகத் தீயை
நினைக்குங்கால் சிலிர்க்கும் மேனி;
ஏந்திய விளக்கில் தாங்கள்
எண்ணெயாய் விழுந்தார் அந்நாள்
சாந்திக்கு ரத்தம் தந்தார்;
தர்மத்தின் நிழலாய் நின்றார்!

இன்றைய சமுதா யத்தை
எண்ணுங்கால் அவர்கள் செய்த
அன்றைய தியாகம் யாவும்
அழிந்தன என்றே தோன்றும்;
நன்றிஇல் லாதார் மக்கள்;
நடைமுறை அவமா னங்கள்
மன்றிலை எதையோ கேட்டு
மாலைகள் அணிவிக் கின்றார்;

ஒருவழி சரியாய் நின்ற
உத்தமத் தலைவா நீயும்
மறுபடி பிறந்தால் இந்த
மண்ணில் பிறத்தல் வேண்டாம்;
திருமகள் பிறந்தா ளென்றால்
தெருத்திண்ணை கோவி லல்ல!
குருமக ராஜா உந்தன்
கொள்கையைக் காப்பா யாக!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...