Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

சனி, 13 பிப்ரவரி, 2010

கடவுள் பார்ப்பதில்லை

பல்லவி
கடவுள் பார்ப்பதில்லை – அவர்
எதையும் கேட்பதில்லை – கேள்
அதனால் தாய் தோன்றினாள்
புனிதம் வேறு இல்லை – அட
அவள் போல் வேதமில்லை – பூ
உலகை தாய்க் காட்டினாள்
தோழிபோல துணையிருப்பாள்
மனதினிலே சுமந்திருப்பாள்
சுவாசக் காற்றைத் தருவாள்
சரணம் 01
உயர தினம் உயர
அவள் உறுதியை வழங்கிடும் உருவமடா
நிமிர தலை நிமிர
அவள் தகுதியை வளர்த்திடும் கருணையடா
சோர்ந்திடாமல் துணிவைத் தரும்
அவள் தூய்மையான பிறவியடா
பூமியின் அதிசியம் அவளெனவே
கால்களின் விழுந்து நீ தினம்
பூஜைகள் புரிவது பெருமையடா
சரணம் 02
பகலில் வரும் பகலில்
அவள் ஒளிதர உதித்திடும் விடியலடா
விழியில் இரு விழியில்
அவள் அருள்தரும் அழகிய வடிவமடா
தோல்வியாவும் தொலைந்துவிட
அவள் தோள்கள் தாங்கி நடக்குமடா
ஆயிரம் உறவுகள் உடன் வரலாம்
ஆயினும் நிரந்தரம் எது
தாய் மகன் உறவென உணர்ந்திடடா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...