Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

சனி, 13 பிப்ரவரி, 2010

இதய வீணை தூங்கும்போது

இதய வீணை தூங்கும்போது பாட முடியுமா ?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா ?(இதய)

உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா ?
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா ?
விளக்கைக் குடத்தில் வைத்தால்
வெளிச்சம் தோன்றுமா ?
வீட்டுக்குயிலைக் கூட்டில் வைத்தால்
பாட்டு பாடுமா.. ?
பாட்டு பாடுமா... ?(இதய)

மனதை வைத்த இறைவன்
அதில் நினைவை வைத்தானே - சில
மனிதர்களை அறிந்து கொள்ளும்
அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் - மேனி
அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை
அடிமை செய்தானே..
அடிமை செய்தானே...(இதய)

உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது ?
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது ?
பழுது பட்ட கோவிலிலே தெய்வமேது ?
பனி படர்ந்த பாதையிலே பயணமேது ?(இதய)

படம் : இருவர் உள்ளம் - வருடம் 1963
குரல் : திருமதி பி. சுசீலா
பாடல் : கவியரசர்
இசை : திரு.கே.வி.மஹாதேவன்
நடிகை : திருமதி. சரோஜாதேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...