Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

சனி, 13 பிப்ரவரி, 2010

வாழும் வாழ்க்கை



பல்லவி
வாழும் வாழ்க்கை
சில நொடிகளில் முடியுமடா
காணும் யாவும்
தரும் அனுபவம் தொடருமடா
பகல் கனவினில் மிதந்திடும்
மானிடா
இதை நிலையென நினைப்பது
ஏனடா?

சரணம்01
போதும்வரை
பொருள் தேடினோம்
போதாமலே தினம்
போராடினோம்
பொருளின்றி போகின்ற
வாழ்க்கையில்
காலையில்
வரும் காட்சிகள்
மாலையில் கொஞ்சம் உருமாறுமே
ஆசைகள் வந்து
தரும் வேதனை
ஆயுளை நின்று பழிவாங்குமே
ஆடும்வரை ஆடும் மனம்
ஆடாமல் ஓய்வாகிப்
போகுமே

சரணம்02
துறல்களை
நதி ஏற்காவிட்டால்
ஓடங்களின் கதி
ஓய்வாகுமே
வருகின்ற சோகங்கள்
பாடமே
தோல்விகள்
நடைபோடயில்
தேங்கினால் என்றும் தவறாகுமே
யாவையும் இங்கு
எதிர்கொள்வதால்
தோல்வியும் கூட ஜெயமாகுமே
நாளைவரும் காலம் என
நம்பாமல் சேராது
லாபமே

படம் :வெய்யோன் இயக்கம் : வி.எஸ்.தர்மலிங்கா இசை: ஆர்.எஸ்.ரூபேஷ்ராம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...