Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

சனி, 13 பிப்ரவரி, 2010

வாய்ச்சொல் வீரர்

மனுசனைப் பாத்திட்டு
உன்னையும் பாத்தா
மாற்றமில்லேடா ராஜா-எம்
மனசிலே பட்டதை வெளியிலே சொல்றேன்
வந்ததுவரட்டும் போடா-சில ( மனு )
உள்ளதைச் சொன்னா ஒதைதான் கெடைக்கும்
ஒலகம் இதுதாண்டா-ராஜா
ஒலகம் இதுதாண்டா
உள்ளத் துணிவோட பொய் சொல்லுவோர்க்கு
உல்லாச புரிதாண்டா-இது
உல்லாச புரிதாண்டா... ( மனு )
வசதியிருக்கிறவன் தரமாட்டான்-அவனை
வயிறுபசிக்கிறவன் விடமாட்டான் ( வசதி )
வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்யமாட்டான் (மனு)
பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
பயணம் போறேண்டா-நான்
பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
பயணம் போறேண்டா ( மனு )
ஒரு சிறுவன்: அங்கே நானும் வாரேண்டா...
வெளியே படிக்க வேண்டியது நெறய இருக்கு
படிச்சிட்டு வாரேண்டா-சிலர்
படிக்க மறந்தது நெறய இருக்கு
படிச்சிட்டு வாரேண்டா.... ( மனு )
எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது ஒளச்சு சோறும் போடுறான்..
எல்லாம் படிச்சவன் ஏதேதோ
பேசி நல்லா நாட்டைக் கூறு
போடுகிறான்-இவன்
சோறு போடுகிறான்-அவன்
கூறு போடுறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...