Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

சனி, 13 பிப்ரவரி, 2010

மங்கையின் மகிமை

வேல் வெல்லுமா - என்
விழி வெல்லுமா
வேல் வந்து விழி போலக்
கதை சொல்லுமா? (வேல்)

கதை சொல்லுமா - வாழும்
வகை சொல்லுமா
கடல்போல எழுந்தின்பக்
கரை துள்ளுமா? (வேல்)

கோழைக்கும் வீரத்தைக்
கொடுப்பவள் மங்கை
கொய்யாக் கனியாய்
இருப்பவள் மங்கை

வாழ்வினில் மோகத்தை
வளர்ப்பவள் மங்கை - ஆண்
மனதில் வீடுகட்டி
வசிப்பவள் மங்கை

மங்கைஎன் பார்வையில்
மலையரையும் - பகை
வாளும் ஈட்டியும்
என்ன செய்யும்? (வேல்)

கண்ணகி போல் நாளைக்
கழிக்கவும் தெரியும்
காதலை மாதவி போல்
ரசிக்கவும் தெரியும்

மன்னனைச் சகுந்தலைபோல்
மதிக்கவும் தெரியும்
மணிமேகலை போல
வெறுக்கவும் முடியும்! (வேல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...