Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

வியாழன், 4 பிப்ரவரி, 2010

ஆண்டவன் உலகத்தின் முதலாளி..



பாடல் :ஆலங்குடி சோமு
பாடியவர் :டி.எம்.சௌந்தராஜன்
இசை :கே.வி.மகாதேவன்
திரைப்படம்: தொழிலாளி

ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
உருக்கு போன்ற தன் கரத்தை நம்பி
ஓங்கி நிற்பவன் தொழிலாளி
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி

கல்லைக் கனியாக மாற்றும் தொழிலாளி
கவனம் ஒரு நாள் திரும்பும்
கல்லைக் கனியாக மாற்றும் தொழிலாளி
கவனம் ஒரு நாள் திரும்பும் அதில்
நல்லவர் வாழும் புதிய சமுதாயம்
நிச்சயம் ஒரு நாள் அரும்பும்
வாழ்க்கை என்றொரு பயணத்திலே பலர்
வருவார் போவார் பூமியிலே
வாழ்க்கை என்றொரு பயணத்திலே பலர்
வருவார் போவார் பூமியிலே
வானத்து நிலவாய் சிலரிருப்பார் அந்த
வரிசையில் முதல்வன் தொழிலாளி

ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி

2 கருத்துகள்:

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...