Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

வியாழன், 4 பிப்ரவரி, 2010

கடவுள் இருக்கின்றான் .



கடவுள் இருக்கின்றான் அது உன்
கண்ணுக்குத் தெரிகின்றதா?

காற்றில் தவழுகிறாய் அது உன்
கண்ணுக்குத் தெரிகின்றதா?

இருளில் விழிக்கின்றாய் எதிரே
இருப்பது புரிகின்றதா?
இசையை ரசிக்கின்றாய் இசையின்
உருவம் வருகின்றதா?

உள்ளத்தில் இருக்கும் உண்மையின் வடிவம்
வெளியே தெரிகின்றதா?
புத்தன் மறைந்து விட்டான் அவன்தன்
போதனை மறைகின்றதா?

சத்தியம் தோற்றதுண்டா உலகில்
தருமம் அழிந்ததுண்டா இதை
சரித்திரம் முழுவதும் படித்த பின்னாலும்
சஞ்சலம் வருகின்றதா

தேடியும் கிடைக்காது நீதி
தெருவினில் இருக்காது!
சாட்டைக்கு அடங்காது நீதி
சட்டத்தில் மயங்காது
காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
காக்கவும் தயங்காது!





Song: kadavul seitha paavam - பாடல்: கடவுள் செய்த பாவம்
Movie: Nadodi - திரைப்படம்: நாடோடி
Singers: T.M. Soundararajan, - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்,
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan - இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
Year: - ஆண்டு: 1966

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...