Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

வியாழன், 4 பிப்ரவரி, 2010

கானல்

வானும் கனல் சொரியும் - தரை
மண்ணும் கனல் எழுப்பும்.
கானவில் நான் நடந்தேன் - நிழல்
கணும் விருப்பத்தினால்
ஊனுடல் அன்றிமற்றோர் - நிழல்
உயிருக் கில்லை அங்கே
ஆன திசைமுழுதும் - தணல்
அள்ளும் பெருவெளியாம்.

ஒட்டும் பொடிதாங்கா - தெடுத்
தூன்றும் அடியும்சுடும்,
விட்டுப் புறங்குதித்தால் அங்கும்
வேகும், உளம் துடிக்கும்.
சொட்டுப் புனல்அறியேன் - ஒன்று
சொல்லவும் யாருமில்லை.
கட்டுடல் செந்தணலில் - கட்டிக்
கந்தக மாய் எரியும்.

முளைத்த கள்ளியினைக்-கனல்
மொய்த்துக் கரியாக்கி
விளைத்த சாம்பலைப்போய் - இனி
மேலும் உருக்கிடவே
கொளுத்தி டும் கானல் - உயிர்
கொன்று திfன்னும்கானல்
களைத்த மேனிகண்டும் - புறங்
கழுத்த றுக்கும்வெளி.

திடுக்கென விழித்தேன் - நல்ல சீதளப் பூஞ்சோலை நெடும் பகற்கனவில் - கண்ட நெஞ்சுறுத் தும்கானல்
தொடர்ந்த தென்நினைவில் - குளிர் சோலையும் ஓடையூமே சுடவ ரும்கனலோ - என்று
தோன்றிய துண்மையிலே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...