Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

வியாழன், 4 பிப்ரவரி, 2010

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது..


பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்யமா யாரும்
இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது!

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும் உன்
நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும்கூட மிதிக்கும்!

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஒளவை சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது! (பரம சிவன்)

வண்டி ஓடச் சக்கரங்கள்
இரண்டு மட்டும் வேண்டும் அந்த
இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்
உனைப்போல் அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோறும் தாழ்ந்தோறும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது! (பரமசிவன்)

நீயும் நானும் சேர்ந்திருந்தோம்
நிலவும் வானும் போலே நான் நிலவு
போலத் தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் என்னைப் பார்த்து கேலி செய்யும்போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதியேது இது
கணவன் சொன்னது இதில் அர்த்தம் உள்ளது. (பரமசிவன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...