Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

வியாழன், 4 பிப்ரவரி, 2010

மதுரையில்



துரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் காண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே
காஞ்சித்தலைவன் கோயில் சிலைதான்
கண்மணியே உன் பொன்னுடலோ
குடந்தையில் பாயும் காவிரி அலைதான் காதலியே உன் பூங்குழலோ
சேலத்தில் விளையும் மாங்கனி சுவைதான்
சேயிழையே உன் செவ்விதழோ
தூத்துக்குடியின் முத்துக் குவியல் திருமகளே உன் புன்னகையோ
மதுரையில் மறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் காண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே
பொதிகை மலையில் புறப்படும் தென்றல்
இளையவளே உன் நடையழகோ
புதுவை நகரில் புரட்சி கவியின் குயிலோசை உன் வாய்மொழியோ
கோவையில் விளையும் பருத்தியில் வளரும்
நூலிழைதான் உன் இடையழகோ
குமரியில் காணும் கதிரவன் உதயம் குலமகளே உன் வடிவழகோ
இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே
மதுரையில் மறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் காண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...