Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

வியாழன், 4 பிப்ரவரி, 2010

குறளும், காவியக் கவிஞரின் வசனகவிதைப் பொருளும்:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

அக்கரங்களின்
ஆரம்ப மாவது
அகர உயிர்;
அஃதே போல்
அனைத்திற்கும்
ஆதியா யிருந்து
ஆக்கவல்ல...
அக்கரங்களில்
ஆரம்ப மாவது
அகில உயிர்!

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

மழை - ஒரு
மகத்தான சொல்;
மற்றவர்க்கும் - அதன்
மகத்துவம் சொல் !
உலகோர் -
உண்ணும்...
ஆகாரத்திற்கு அதுவே
ஆதார மாகும்; அங்ஙனம்
ஆதார மான அதுவே
ஆகார மாகும் !
நீருணவு;
சோறுணவு; என -
ஈருணவாய் இருப்பது மழை !
அதை -
ஏத்திப் பிழை;
ஏத்தாதிருப்பது பிழை !

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

இல்லறம் - என
இயம்பப் பெறும் -
வாழ்க்கை
வயலில்....
அன்பும் அறனும் விதைநெல்;
பண்பும் பயனும் விளைநெல் !

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.

உள்ளதை
உள்ளபடி - தன்
உள்ளத்திற்கு
உரைப்போ ரெலாம் -
உலகத்தார்
உள்ளங்களின் -
உள்ளே போய்
உட்காரலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...